search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எய்ம்ஸ்"

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89), காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     
    மன்மோகன் சிங் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
     
    மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    தொடர்ந்து சோர்வாக இருந்த அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான மருத்துவக் குழு மன்மோகன் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. தொடர் சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்தார்.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பரிக்கர் உடல் நலக்குறைவால் இன்றிரவு காலமானார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
      
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கனையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரிக்கான பணிகளை கவனித்துவந்த மனோகர் பரிக்கர், சிகிச்சை பலனின்றி இன்றிரவு காலமானார்.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar  
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்திக்கும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். #vanathisrinivasan #bjp #parliamentelection

    திருப்பூர்:

    பிரதமர் மோடி நாளை மறுநாள் திருப்பூர் வருகிறார். திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொதுக்கூட்ட மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது-

    திருப்பூர் பெருமா நல்லூரில் நடைபெறும் பொதுக்கூட்டம் மேற்கு மண்டல பொதுக்கூட்டமாக அமையும். 8 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் கூட்டமாகவும் இருக்கும். 10-ந் தேதி மதியம் 2 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பலமான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் பிரதமர் மோடி வரும் போது கருப்பு கொடி காட்டப்போவதாக அறித்துள்ளார்களே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


    அதற்கு வானதி சீனிவாசன் பதில் அளிக்கும் போது, தாங்களும் இங்கே இருக்கிறோம் என்பதை அடையாளம் காட்டுவதற்காக தான் கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்து உள்ளனர்.

    என்னதான் கருப்பு கொடி காட்டினாலும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு அதிக திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறார் என்றார். #vanathisrinivasan #bjp #parliamentelection

    பிரதமருக்கு வைகோ கறுப்புக்கொடி காட்டியதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து அவரது உருவபொம்மையை எரித்தனர். #vaiko #pmmodi #bjp

    நாகர்கோவில்:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதுரைக்கு வந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

    பிரதமர் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அந்த கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மோடிக்கு எதிராக அவர்கள் கறுப்புக் கொடியும் காட்டியதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பிரதமருக்கு வைகோ கறுப்புக்கொடி காட்டியதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைகோ உருவ பொம்மைகளை எரித்தும் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    குமரி மாவட்டத்திலும் பாரதீய ஜனதா கட்சியினர் வைகோ உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவிலில் கோட்டார் ஆனைப்பாலம் அருகே பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன் தலைமையில் வைகோ உருவபொம்மை எரிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோட்டார் போலீசார் அங்கு சென்று உருவ பொம்மைக்கு வைக்கப்பட்ட தீயை அணைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் வைகோ உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா மாவட்ட துணைத்தலைர் முத்துராமன் மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல ஈத்தாமொழி சந்திப்பிலும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் வைகோ உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் முத்து சரவணன் தலைமையில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் உருவபொம்மையை எரித்து வைகோவுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். வைகோ உருவ பொம்மையை எரித்த பாரதீய ஜனதா நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #vaiko #pmmodi #bjp

    கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றினாரா என்பது குறித்து மதுரையில் பதில் சொல்ல வேண்டும் என்று முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #mkstalin #pmmodi #bjp

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

    இந்தி மட்டுமல்ல எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்ல. ஒருவர் அறிவு வளர்ச்சிக்காக, ஆர்வத்தின் காரணமாக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். பேசலாம். எழுதலாம். நாம் எதிர்ப்பது எந்தவொரு மொழியையும் அல்ல. மொழியின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம்.

    தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வர இருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்ட இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை வரவேற்கிறேன். தவறு என்று வாதிடவில்லை. ஆனால், இந்த நான்கரை ஆண்டு காலம் என்ன செய்தீர்கள் என்பது தான் மோடியைப் பார்த்து நான் வைக்கும் கேள்வி. மிகப் பெரிய மிருக பலத்தோடு ஆட்சி அமைத்தீர்களே நான்கரை வருடம் ஆகி விட்டது, இதுவரை என்ன செய்தீர்கள்?

    2014-ம் ஆண்டு பாராளு மன்றத் தேர்தலுக்கு முன்னதாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வாய்க்கு வந்ததை எல்லாம் சொன்னீர்களே, வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன் என சொன்னீர்களே, எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்போம், திறப்போம் என்று சொன்னீர்களே. பதவிக்கு வந்ததும் இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் அமைப்போம், திறப்போம் என்று சொன்னீர்கள். இந்த ஐந்தில் ஒரு மாநிலத்தில்கூட எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. இது தான் தேர்தலில் நீங்கள் தந்த உறுதி மொழியின் லட்சணமா?

    2015-ம் ஆண்டு சொன்னார்கள் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று. இது 2019-ம் ஆண்டு. நான்காண்டு காலம் முடிந்து விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வரப் போகிறது. இரண்டு நாள் கழித்து தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப் போகிறார் என்றால் இந்த ஐந்தாண்டு காலத்தில் என்ன செய்தார்?


    இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவோம் என்றார். 100 அல்ல 1 நகரமாவது ஸ்மார்ட் நகரமாக ஆக்கப்பட்டுள்ளதா? மோடி அவர்களே இன்னும் இரண்டு நாட்களில் வரவிருக்கிறீர்கள். இதனைச் சொல்லக்கூடிய தகுதி உங்களுக்கு இருக்கிறதா?

    தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய 11 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவோம் என்றார்கள். ஸ்மார்ட் சிட்டி ஆக்கினார்களா இல்லையா? அந்த நகரத்தைச் சேர்ந்தவர்களைத் தான் நான் கேட்க விரும்புகிறேன். மோடி அவர்களால் ஸ்மார்ட் நகரங்களாக மாற்றப்பட்டு விட்டதா?

    தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தார் மோடி. அப்போது ஒவ்வொரு ஊரில் பேசும் போதும் ஒவ்வொரு வாக்குறுதிகள் கொடுத்திருந்தார். அதை யெல்லாம் நிறைவேற்றி இருப்பார் என்று பார்த்தால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

    ராமநாதபுரத்தில் பேசிய மோடி தமிழக மீனவர்களுக்கு இலங்கை நாட்டால் பிரச்சினை, குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டால் பிரச்னை. இரண்டையும் தீர்க்க ஒரு குழுவை அமைப்போம் என்றார். அமைத்தாரா மோடி? இதுவரை இல்லை?

    இந்தியாவின் பிரதமராக மோடி தானே இருக்கிறார்? இவர் இரும்பு மனிதர் தானே? இல்லை. பித்தளை மனிதராக ஆகிவிட்டாரா?

    எதையும் நிறைவேற்றாமல் ஓட்டுக் கேட்க வருகிறீர்களே, அறிவித்த அறிவிப்புகள் தூங்கிக் கொண்டிருக்கிறது. முடங்கிக் கிடக்கிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வோட்டுக் கேட்டு வருகிறீர்கள்? என்று நான் கேட்கிறேன்.

    எதையுமே செய்யாமல், எவ்வித கூச்சமும் இல்லாமல் எப்படி மதுரைக்கு வருகிறீர்கள்? மதுரைக்கு வருகின்ற மோடி எய்ம்ஸ் கொண்டு வருவதற்கு கூட அல்ல, அடிக்கல் நாட்டுவதற்கு ஏன் ஐந்து ஆண்டுகள் ஆனது என்பதைச் சொல்ல வேண்டும்.

    இப்போது இருக்கும் முதல்-அமைச்சர் ஊழல் செய்ததோடு மட்டு மல்லாமல், கொலை வழக்கிலும் சிக்கி இருக்கிறார்.

    தி.மு.க நிச்சயமாக ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வரத்தான் போகிறது. நமக்கும் ஜெயலலிதாவுக்கும் எத்தனையோ கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், முதல்- அமைச்சராக இருந்து மறைந்திருக்கிறார். அவர் மரணத்துக்குக் காரணமானவர்களை கண்டறிந்து சிறையில் தள்ளுவது தான் தி.மு.க.வின் வேலை.

    நியாயமாக 117 மெஜாரிட்டி இருக்க வேண்டும். ஆனால், இருப்பது 114. அதுவும் ஒன்று போய் விட்டது. ஓசூர், பெயர் கூட பாலகிருஷ்ண ரெட்டி. இப்பொழுது மந்திரிகள் பெயர் கூட ஞாபகத்தில் மக்களுக்கு இல்லை. 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. 11 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு வருகிறதாம். அதோகதி. அதற்காக யாகம் நடத்தியதாக இப்போது வந்திருக்கும் செய்தி.

    இப்படிப்பட்ட அடிமைத் தனமான, கோழைத்தனமான, ஒரு ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி, இதற்குத் துணைபோகும் பாசிச ஆட்சி இந்த இரண்டு அரசுகளையும் நாட்டை விட்டு விரட்ட உறுதியேற்போம், சபதமேற்போம். நம்முடைய தியாகிகள் பெயரால் உறுதியேற்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  #mkstalin #pmmodi #bjp 

    மதுரையில் நாளை பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 10 எம்.பி. தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார். #pmmodi #bjp #parliamentelection

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை பல்வேறு மாநிலங்களில் தொடங்கி உள்ளார். பா.ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா மற்றும் மாநிலத்தலைவர்களும் பல்வேறு மாநிலங்களில் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், பேரணி என்று இப்போதே தேர்தல் வியூகம் வகுக்கத் தொடங்கி விட்டனர்.

    தமிழகத்திலும் பிரதமர் மோடி நாளை பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் மோடி அதே விழா மேடையில் பிரசாரத்தையும் தொடங்குகிறார். தென் மண்டல பாரதீய ஜனதா மாநாடாக இந்த பிரசார கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.


    பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி, பா.ஜனதா நிர்வாகிகளிடம் தமிழக தேர்தல் வியூகங்கள் குறித்து உரையாற்றுகிறார்.

    மேலும் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தலை சந்திக்க பொதுமக்களை அணுகும் அம்சங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.

    இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜனதா தொண்டர்களை திரட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயன் பெற்ற பயனாளிகளை அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

    மதுரை மண்டேலா நகர் அருகே நடைபெறும் பா.ஜனதா மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் அமர இருக்கை வசதி மற்றும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியை பார்க்க வசதியாக பல்வேறு இடங்களில் பிரமாண்ட எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 1 மணி நேரம் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் பா.ஜனதா மாநாடு தமிழ் நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்காக புதிய கூட்டணியை உருவாக்க பாரதீய ஜனதாவிற்கு உத்வேகமாக அமையும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #pmmodi #bjp #parliamentelection

    பன்றிக் காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜனதா தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் ஆனார். #Amitshah
    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். மாநிலம் மாநிலமாக சென்று அவர் தேர்தலை எதிர்கொள்ள கட்சியினரை சந்தித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

    இதுகுறித்து பா.ஜனதா மாநிலங்களவை உறுப்பினரும், ஊடகப் பிரிவுத் தலைவருமான அனில் பலூனி ‘‘பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அமித் ஷாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    பூரண குணம் அடைந்து விட்டதால் அமித் ‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட உள்ளார்.
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் மூன்றாவது வாரம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். #MaduraiAIIMS #PMModi
    மதுரை:

    டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தமிழ்நாட்டிலும் அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    இதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டன. இறுதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

    மதுரை புறநகர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதால் மத்திய அரசும் அதை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

    அடுத்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    "அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்" என்றழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் செயல்பட தொடங்கினால் தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இத்தகைய சிறப்புடைய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஜனவரி) மூன்றாவது வாரம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இருப்பதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதி செய்தனர்.



    ஆனால் ஜனவரி மூன்றாவது வாரத்தில் எந்த தேதியில் பிரதமர் மோடி மதுரை வருவார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகிறார்கள்.

    அனேகமாக ஜனவரி 26 அல்லது 27-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மதுரை வரும் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு மதுரையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த சிறப்பு மருத்துவமனை ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

    இதே போன்று திருநெல்வேலியிலும் மற்றொரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையையும் மதுரையில் நடக்கும் விழாவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    மதுரை மருத்துவமனை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அன்றே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். அன்றைய தினம் முதல் கட்டமாக அவர் சென்னை, வேலூர், கோவை நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிலும், 3 நகரங்களில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவரது பயணத் திட்ட விவரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. #MaduraiAIIMS #PMModi
    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1200 கோடி நிதி ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் அளிக்க இருக்கிறது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தமிழ்நாட்டில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தலைமையில் தமிழகம் வந்த உயர்மட்டக் குழுவினர், குறிப்பிட்ட 5 இடங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால், அதன்பிறகு தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மத்திய அரசு இருந்துவந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ரூ.1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது.  #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #AIIMS
    மதுரை:

    மதுரையை சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மத்திய அரசு அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை 3 ஆண்டுகள் கழித்து அறிவித்துள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

    எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

    மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்து மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.  #AIIMS
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இலாகா இல்லாத முதல்-மந்திரியாக அவரை அறிவிக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #manoharparrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார்.

    அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மனோகர் பாரிக்கர் நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதால் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப் போது ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார். இதனால் தற்காலிகமாக முதல் மந்திரி வகிக்கும் இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் நலம்பெற்று திரும்பி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று மாநில பா.ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் முதல்-மந்திரி இல்லாமலேயே மந்திரிசபை கூட்டம் நடந்து வந்தது.

    இதற்கிடையே கோவாவில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டியவாடி கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சிகள் முதல்-மந்திரியாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மனோகர் பாரிக்கர் இலாக்காக்களை தற்காலிகமாக மற்ற மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அதை அவர்கள் நிரந்தரமாக கவனிக்கும் வகையில் பொறுப்புகள் மாற்றப்படுகிறது.

    மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை இலாகா இல்லாத முதல்-மந்திரியாக இருப்பார் என அறிவிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #GoaCM #ManoharParrikar #BJP
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #ministervijayabaskar #aimshospital

    மதுரை:

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    எய்ம்ஸ் விவகாரம் குறித்து வருகிற 9-ந்தேதி நானும், சுகாதாரத்துறை செயலாளரும் டெல்லி சென்று சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க உள்ளோம்.

    எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துமவனை அமைய எந்த தடையும் இல்லை என்றார். #ministervijayabaskar  #aimshospital

    ×