search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99933"

    பொன்னமராவதி கலவரம் தொடர்பாக 30 பேரை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.
    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்களையும் கைது செய்தனர். இதில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த சிலரை, போலீசார் சொந்த ஊருக்கு வரவழைத்து கைது செய்தனர். பாராளுமன்ற தேர்தலில் சமுதாய வாக்குகளை பெறும் நோக்கத்தில் வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.

    இதனிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட 1,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை ஒத்தி வைத்திருந்தனர்.

    தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர். அதன் படி நேற்றிரவு வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிலரை கைது செய்வதற்காக பொன்னமராவதி பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தருமபுரியில் கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைதிலி (வயது 31).  பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம்

    இவர் சவுளூப்பட்டியில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக அந்த பகுதியில் ஒரு குடோனில் தன்னுடைய பொருட்களை வைத்து இருந்தார்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த குடோனில் தீப்பிடித்து பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது.

    இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர் மீண்டும் தொழிலை தொடங்குவதற்காக காந்தி நகரைச் சேர்ந்த பழனி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மைதிலி ஒரு வருடத்திற்குள் ரூ.12 ஆயிரமாக வட்டியுடன் செலுத்த வேண்டும் நிபந்தனையுடன் கந்து வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    வாரந்தோறும் அவரால் சரிவர அசலுடன் வட்டியையும் செலுத்த முடியாததால் திணறி வந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் ராஜேஸ்வரியிடம் மைதிலி கூறினார். அவரும் தனது பங்குக்காக ரூ.20 ஆயிரம் மைதிலியிடம் கொடுத்து கடனை அடைக்க கூறினார்.. அந்த பணத்தை எடுத்து கொண்டு பழனியிடம் மைதிலி கொடுத்தபோது, இதுவரை வட்டியுடன் சேர்த்து அசல் தொகை ரூ.70 ஆயிரம் தரவேண்டும் என்று பழனி கூறினார்.

    சரிவர வட்டி பணத்தை மட்டும் கட்டி வந்த மைதிலி கடந்த சில மாதங்களாக பணம் எதுவும் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. பழனி நேற்று முன்தினம் இரவு மைதிலி வீட்டிற்கு சென்று வட்டியுடன் சேர்த்து அசல் பணத்தையும் கேட்டு மிரட்டினார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அவரது வீட்டிற்கு பழனி சென்று மைதிலியை ஆபாசமாக திட்டியும், பணத்தை கேட்டு மிரட்டியும் உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மைதிலி அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஆசிரியர் காலனியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்தார். அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.

    சிறிது நேரத்தில் மைதிலியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தாயார் ராஜேஸ்வரி வெளியே சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மைதிலி தூக்குபோட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து ராஜேஸ்வரி பார்த்தபோது மைதிலி தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகள் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து மைதிலியின் அண்ணன் கார்த்திக் தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கந்து வட்டிக்காரரான பழனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மைதிலியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிராக அனுமதியை மீறி கையெழுத்து இயக்கம் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad
    சேலம்:

    சேலம்-சென்னைக்கு மத்திய அரசு சார்பில் ரு.10 ஆயிரம் கோடியில் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இந்நிலையில் எதிர்ப்பை மீறி அரசு சார்பில் நில அளவீடு பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது அளவீடு முழுமையாக முடிவடைந்தது. இந்த 8 வழி சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கபட்டுள்ளது என விவசாய சங்கத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

    இதையடுத்து 8 வழி சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் சில இடங்களில் மண் பரிசோதனை நடைபெறுவதால் பசுமை வழி சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad 
    அமெரிக்காவில் சீக்கியர் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். #SikhMan #Murder
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் எசெக்ஸ் நகரில் பெரிய அளவில் கடை வைத்து நடத்தி வந்தவர் சீக்கியரான டெர்லோக் சிங் (வயது 55). இவர் கடந்த 16-ந் தேதி தனது கடையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், அங்கு வாழ்ந்து வருகிற சீக்கிய மக்கள் இடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக எசெக்ஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனர்.



    இந்த நிலையில் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா (55) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அந்தக் கடையில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் அவர் டெர்லோக் சிங்கை கொலை செய்ததின் பின்னணி என்ன என்பது தெரிய வரும். 
    திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் இருந்து நூதன முறையில் பயணிகள் ஆட்டோவில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர், போலீசாருடன் ஆரணி மசூதி அருகே ஆரணியில் இருந்து பனையஞ்சேரி சென்ற பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு பயணிகள் ஆட்டோ, போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பிச் செல்ல முயன்றது. உடனடியாக போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

    அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆட்டோவை சோதனை செய்தபோது, ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது. மணல் மூட்டைகளுடன் அந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் புட்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக புட்லூரைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 25), பிரவீன்(26), தியாகு(26), கோதண்டன்(47) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சென்னை கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் ராஜா, ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 37 பேரை ஊட்டி நகர மத்திய போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர் பழைய பஸ்நிலையத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனைதொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், முருகையா, சின்னவர், சுப்பிர மணியம் உள்பட 31 தி.மு.க.வினரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் பந்தலூர் பஜாரில் தி.மு.க.வினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, நெல்லியாளம் நகர கழக செயலாளர் காசிலிங்கம், நெல்லியாளம் முன்னாள் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம், வக்கீல் சிவசுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேகர், நகர பொருளாளர் தென்னரசு, எல்.பி.எப். துணை பொதுசெயலாளர் மாடசாமி உள்ளிட்ட 35 பேரை கைது செய்தனர்.

    கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் ஒன்றிய பொறுப்பாளர் நெல்லை கண்ணன், முன்னாள் அமைச்சர் இளித்தொரை கா.ராமசந்திரன் தலைமையில் கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி ஒன்றிய தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை கைது செய்தனர். 
    ×