search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.
    • சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர்.

    கீழ்ப்படிதல் என்னும் பண்புக்குணம் நிறைந்த அன்பின் வாசகர்களே!

    வணக்கம்.

    குடும்பத்தில், வளரும் பிள்ளைகளிடத்திலும், கல்விக்கூடங்களில், பயிலும் மாணவர்களிடத்திலும், அலுவலகங்களில், பணிபுரியும் பணியாளர்களிடத்திலும் நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடிய அருங்குணம் 'கீழ்ப்படிதல்' ஆகும். நாட்டில் ஆட்சியாளர்களால் வகுக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது ஒவ்வொரு சமூக மனிதனின் கடமையுமாகும்.

    கீழ்ப்படிதல் என்பதே மரபைப் பேணுகிற, மரபைக் கடைப்பிடிக்கிற, மரபுவழி நடக்கின்ற நேர்மையான வழியாகும். "மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்!" என்கிற தொல்காப்பிய நூற்பா, மனிதன் மரபைப் பின்பற்றி வாழவில்லையென்றால், வாழ்க்கைமுறையே கந்தர கோலம் ஆகிப்போகும் என எச்சரிக்கிறது; மரபைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

    காட்டுமிராண்டி வாழ்வில் இருந்து மனிதன் படிப்படியாக மீளத்தொடங்கி, நாகரிக வாழ்வியலுக்குள் புகுந்து சிறப்படைந்ததற்குக் கீழ்ப்படிதலே முக்கியக் காரணம். இயற்கைக்குக் கட்டுப்பட்டு உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. உலகச் சுழற்சிக்கேற்பக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பருவநிலைக்கு ஏற்றவாறு மனித வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாற்றம் பெறுகின்றன.

    இரவு, பகல், மழை, வெய்யில், காற்று, புயல், மேடு, பள்ளம், மலை, கடல், வயல், பாலைவனம், ஆறு-வெள்ளம் என நடைமுறை வாழ்வியலில் தாம் காணும் முரண்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப, இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.

    காலை எழுவதில் தொடங்கி இரவு துயில்வது வரை, நேரத்திற்குக் கீழ்ப்படியக் கற்றுக் கொள்பவர்களே உழைப்பில் சிறந்த வெற்றியாளர்கள். சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து செல்பவர்களால் மட்டுமே சரியான இலக்கைச் சரியான நேரத்தில் சென்று அடைய முடியும். அலுவலகத்திலும் அவ்வப்போது மேலதிகாரிகளும் முதலாளிகளும் விதிக்கும் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே உற்பத்தியும் பணியும் எதிர்பார்த்த சிறந்த நிலையை எட்டும்.

    கீழ்ப்படிதல் என்பது ஒருவகை ஒழுக்கம். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு செயலின் வெற்றிக்கு நிர்வாகம் விதிக்கிற விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனாலும் அதனைக் கடைப்பிடிப்பதில் ஓர் இலகுத் தன்மை இருக்க வேண்டும்.

    ஒரு தனியார் தொழிற்சாலை. உள்ளே வாசலைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் ஓர் இளைஞர் நின்று தம் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலைக்குள் காரில் நுழைந்த ஆலையின் முதலாளி, இளைஞர் தம் அடித்துக் கொண்டிருப்பதைக் காரின் கண்ணாடிக் கதவை இறக்கிப் பார்த்தார். இளைஞர் இவரைக் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. கடும்கோபத்தோடு தொழிற்சாலையின் தன் அறைக்குள் நுழைந்து, உள் தொலைபேசி மூலமாக மேனேஜரை அழைத்தார்.


    "கேட்டைத் தாண்டி உள்ளே வரும் வழியில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒருவன் தம் அடித்துக் கொண்டிருக்கிறான்.

    தொழிற்சாலை வளாகத்திற்குள் புகைபிடிக்கக் கூடாது என்று எத்தனைமுறை சொல்வது?.நம் தொழிற்சாலையில் விதியும் இருக்கிறது!. நீங்கள் நேராகச் சென்று, அவனிடம் எந்த அறிவுரையும் கூறாமல், அவனது பேரை மட்டும் கேட்டு, உடனடியாக அவனது கணக்கை முடித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.

    சரி எனச் சொல்லிவிட்டு வெளியே சென்ற மேனேஜர் அடுத்த பதினைந்து நிமிட நேரத்தில், முதலாளி அறைக்குள் வந்து, "நீங்கள் சொன்னதைச் செய்துவிட்டேன் முதலாளி!" என்று பணிவாகச் சொன்னார். "ரொம்பச் சரி!. கீழ்ப்படிதல் இல்லையென்றால் இதுதான் நடக்கும் என்று மற்ற தொழிலாளர்களுக்கு இது படிப்பினையாக இருக்க வேண்டும்!" என்றார் முதலாளி.

    ஆரம்பத்தில் நாம் பார்த்த அந்த மரத்தடி இளைஞர், இப்போது கேட்டில் இருந்த செக்யூரிட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார், " என்னங்க தொழிற்சாலை இது?; நான் என்னோட நண்பர் இங்க வேலை பார்க்கிறவரைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்து ஒரு ஓரமா நின்னு தம் அடிச்சுட்டு இருந்தேன்.

    அப்ப, யாரோ ஒருத்தர் வந்து என்னோட பேரு என்ன?ன்னு கேட்டார். கூட வா!ன்னு கூட்டிட்டுப் போயி! ஏதோ ஒரு பெரிய நோட்டுல கணக்குப் போட்டு, அதில ஒரு கையெழுத்தையும் வாங்கிட்டுக், கையில் ஒரு கவரையும் குடுத்து அனுப்பிச்சு விட்டுட்டாரு. வெளியில் வந்து பார்த்தா கவர்ல 52 ஆயிரம் ரூபாய் பணம் இருக்குது!. எனக்கு ஒன்னும் புரியலிங்களே?" என்றார். செக்யூரிட்டியோ அவரை விடப் புரியாமல் குழம்பிப்போய் நின்றார்.

    இப்போது உங்களுக்குக் கொஞ்சம் புரிந்திருக்கும். தொழிற்சாலைக்குள் வந்து விதிமீறல் செய்திருப்பது வெளிஆள் என்பது தெரியாமல் முதலாளிக்குக் கோபம் வந்திருக்கிறது. ஆனாலும் ஆலை மேலாளரின் கண்மண்தெரியாத கீழ்ப்படிதல் தன்மை, இளைஞர் ஆலைத் தொழிலாளிதானா? என்பதைப் பரிசீலிக்காமலேயே, அந்தப்பெயரில் உள்ள யாரோ ஒருவரின் கணக்கை முடிக்க வைத்திருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டவர் காரணம் தெரியாமல் விழிப்பதற்கு இதுதான் காரணம்.

    கீழ்ப்படிதல் என்றால், விதி என்று இருந்தால் எந்தக்கேள்வியும் கேட்காமல் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதுதான். ஆனால் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படும் இயலாமை, சர்வாதிகார மனப்பான்மையை உருவாக்கி விடுகிறது. அதனால்தான் அந்த ஆலை முதலாளிக்குத் தொடர்பில்லாத நபர் மீது கோபம் வந்துவிட்டது. ஆனாலும், பொறுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய மேலாளர், இங்கு அவசரகதியான கீழ்ப்படிதலோடு நடவடிக்கை எடுத்ததற்கு முதலாளியின் கோபம் காரணமாகிவிட்டது.

    வீட்டிலோ, வெளியிலோ விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டியது அனைவருக்குமே பொருந்தும். இதில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு என்பது கிடையவே கிடையாது. கீழ்ப்படிதலே அனைத்தையும் சுமூகமாக்கிவிடும் தாரக மந்திரம்.

    சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர். இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். அப்போதுதான் குடியாட்சித் தத்துவம் சிறப்பாகக் கோலோச்ச முடியும்.

    அலுவலகங்களில், ஒவ்வொருவருக்கும் அவரவரின் பணியளவைப் பொறுத்து அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பணிபுரியும் தருணங்களில் தத்தமது கடமைத் தகுதிக்கு ஏற்றவாறு விதிகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிதலோடு நடந்துகொள்வதே பணியாளருக்கு உரிய நடத்தை விதிகளாகும்.

    நாம் ஓட்டும் வாகனங்களில், கியர், கிளட்ச், ஆக்சிலேட்டர், பிரேக், ஸ்டீயரிங் என ஐந்து வகையான அமைப்புகள் இருக்கின்றன. வண்டியை முன்னே நகர்த்தி ஓட்டுவதற்கும், பின்னே நகர்த்திச் செலுத்துவதற்கும் இந்த ஐந்தையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. கீழ்ப்படிதல் உணர்வோடு, கைகளையும் கால்களையும் கொண்டு இந்த ஐந்தையும் அவ்வவற்றிற்குரிய விதிமுறைகளோடு பயன்படுத்தினால், வாகனத்தை விரும்பிய இடத்திற்கு, விரும்பிய வேகத்தில், விபத்துகள் ஏதுமின்றி கொண்டு செலுத்தலாம். இல்லையென்றால் விளைவுகள் எதிர்மறையானவையாகவே அமையும்.

    சாலைகள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லுகின்ற சந்திப்புகளில், சிவப்பு, மஞ்சள், பச்சை எனும் குறியீடுகள் மாற்றி மாற்றி ஒளிர்கின்றன. இவற்றின் தன்மைகளுக்கேற்ப நாம் சாலைகளைக் கடந்தால் விபத்துகள் ஏற்படாது; போக்குவரத்து நெருக்கடிகளும் உண்டாகாது. எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்.

    வீட்டில் கணவன் மனைவி இருவரில் யார் பெரியவர்? என்கிற ஆணவம் தலைதூக்கத் தொடங்கினால் கீழ்ப்படிதல் தொலைந்துபோகும்; இல்லற நெறிமுறைகளும் காணாமல் போகும். பெற்றோர்கள் கூறுவதைப் பிள்ளைகள் கேட்க வேண்டும்; பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் முக்கியமான தருணங்களில் பிள்ளைகளின் ஆலோசனைகளைப் பெற்றோர்களும் கேட்க வேண்டும். இங்கே கீழ்ப்படிதல் என்பது, அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்ப நடந்துகொள்வது. அதிகார மமதையோடு நடந்துகொள்ள எண்ணினால் தவறுகளே தாராளமாகிவிடும்.

    வெளிநாட்டில், ஒரு வீட்டில்,சாப்பாட்டு மேசையில் இரவு உணவு பரப்பப் பட்டிருந்தது. வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சிறுவர்களான மகன், மகள் ஆகியோர் ஆளுக்கொரு தட்டோடு மேசை அருகில் வந்தனர். உணவுக்கு முன் சூப் சாப்பிடுவதற்காக ஆளுக்கொரு கப்பை எடுத்து சூப்பை ஊற்றி நிரப்பிக்கொண்டு கரண்டி மூலம் அருந்தத் தொடங்கினர்.

    அப்பாவுக்கு 'ஹாய்!' சொல்லிக்கொண்டே அருகில் வந்த சிறுவனான மகன், "டாடி! இந்தக் கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?" என்று கேட்டான். அப்பாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது." வாயை மூடிக்கொள்! சாப்பிட வந்தால் சாப்பிடும் வேலையை மட்டும் பார்! தேவையற்ற பேச்சுக்களைப் பேசாதே!" எச்சரித்தார் அப்பா. நமக்கேன் வம்பு எனக் கீழ்ப்படிதலோடு வாயை மூடிக்கொண்டான் மகன்.

    டின்னர் முடிந்தது. எல்லாரும் மகிழ்ச்சியாக வரவேற்பறைக்கு வந்து ஐஸ் கிரீம் சுவைத்துக் கொண்டிருந்தனர். இப்போது மகனை அன்போடு அருகில் அழைத்தார் அப்பா. " சாப்பிடும்போது அருவருப்பான கரப்பான் பூச்சி போன்ற விசயங்களைப் பேசக்கூடாது! அதனால் தான் திட்டினேன்!. சரியா?. இப்போது கேள்! கரப்பான் பூச்சி குறித்த உனது கேள்வி என்ன?".

    "அதை விடுங்கள் அப்பா! அது முடிந்துபோய் விட்டது. இப்போது வேண்டாம்!" என்றான் மகன். " சும்மா சொல்! என்ன சொல்ல வந்தாயோ சொல்!" என்று வற்புறுத்தினார் அப்பா!. " அது வேறு ஒன்றுமில்லை அப்பா! நீங்கள் சூப்பைச் சுவைத்துக் கொண்டிருந்த கப்பில் ஒரு இறந்த கரப்பான் பூச்சி மிதந்து கொண்டிருந்தது! அதைச் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லதா? என்பதைத்தான் கேட்க முயற்சித்தேன்! வேறு ஒன்றுமில்லை!".

    அவ்வளவுதான் பையன் சொல்லி முடிப்பதற்குள் பாத்ரூமுக்குள் ஓடிய தந்தை சாப்பிட்ட உணவு அனைத்தையும் வாஷ்பேசினில் வாந்தியெடுத்துவிட்டார். அளவுக்கதிகமான அதிகாரத் தன்மையும், நிலைமைக்கு ஒத்துப் போகாத கீழ்ப்படிதலும் எந்த நிலைமைக்குக் கொண்டுபோய் விடும் என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த உதாரணம்.

    ஒவ்வொரு கீழ்ப்படிதலிலும் ஓர் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. அந்த அதிகாரத்தின் நியாயத் தன்மையைப் பொறுத்தே கீழ்ப்படிதலுக்கான பலன் நமக்கு வந்து சேர்கிறது. ஆண்டவனை முழுமையாக நம்புகிறவர்கள் அவனுக்கு எதிர்ப்பில்லாத கீழ்ப்படிதலைச் செய்கிறார்கள்.

    அரசனை மக்கள் நம்புவதும், ஆசிரியரை மாணவர் நம்புவதும், நிர்வாகத்தினரைப் பணியாளர் நம்புவதும், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புவதும் முழுமையான கீழ்ப்படிதலுக்கு வழி வகுக்கும்.

    ஆம்!

    நாம் யாரை நம்பிக் கீழ்ப்படிகிறோமோ இல்லையோ…

    முதலில் நம்மை நம்பி நமக்கு நாமே கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்!

    தொடர்புக்கு: 9443190098.

    • இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.
    • முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.

    முதுமையில் சர்க்கரை (இனிப்பு) நோய் எனும் நீரிழிவு நோய் ஆரோக்கியத்திற்கு கசப்பை உண்டாக்கிவிடுகிறது. ஏனெனில் இரண்டு முதியவர்கள் பேசிக்கொள்ளும் போது, நலம் விசாரித்த காலங்கள் மாறி, சர்க்கரை அளவை விசாரிக்கும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் இந்த நிலை இருந்தாலும் நம் ஊரில் சற்று அதிகம் தான். மறந்து போன வாழ்வியல் நெறிமுறைகளும், உணவு முறைகளும், நோயினை உண்டாக்க முக்கிய காரணமாக இருப்பினும், முதுமையில் உடல் திசுக்கள் தேய்மானம் அடைவதும் காரணமாக உள்ளது.

    அத்துடன் நம் உடல் செல்களுக்குள் கொண்டு செல்ல வேண்டிய சர்க்கரையானது, இன்சுலின் தடையின் (IR) காரணமாக செல்லுக்குள் நுழைய முடியாமல், ரத்தத்தில் அதன் அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. இன்சுலின் சுரப்பு குறைவால் உண்டாகும் டைப்-1 நீரிழிவு பெரும்பாலும் இளம் வயதினருக்கே ஏற்படுகின்றது. இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.

    முதுமையில் 65 வயதைக் கடக்கும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி நீரிழிவு நோயின் துணை நோய்களான அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், உடல் பருமன் ஆகியவைகளும் ஒன்று கூடி முதுமையை வாட்டி வதைக்கும்.

    எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சி அடைந்து, மருத்துவ முறைகள் மேம்பட்டாலும் நீரிழிவைக் கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. ஆக பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவதும், பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதும், முதுமையில் சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்க உதவும்.


    நீரிழிவு எனும் மதுமேக நோய் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் கூறியுள்ளது சிறப்புமிக்கது. சித்த மருத்துவத்தின் அடிப்படை கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் 'கபவாதம்' கூட்டணியால் மதுமேகம் எனும் நீரிழிவு உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அத்தகைய நீரிழிவினை 20 வகைகளாக பிரித்தும் விளக்கியுள்ளது.

    இத்தகைய கபவாதம் தணித்து, இன்சுலின் தடையை நீக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுப் பொருட்களும், மருந்துப்பொருட்களும் பயன்படுத்துவது, உடற்பயிற்சி செய்வது முதுமையில் நீரிழிவினைக் கட்டுக்குள் வைக்கும்.

    ஏன் இந்த சர்க்கரை வியாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்? சர்க்கரை நோய் என்ற பெயரைக் கேட்ட உடனே மனதுக்குள் அலறலும், குமுறலும் ஏன்? என்றால் இந்நோயில் உண்டாகும் பின்விளைவுகள் தான் காரணம். நீரிழிவு நோயின் பின் விளைவுகள் பற்றி நவீன மருத்துவமும், நீரிழிவு நோயால் உண்டாகும் அவஸ்த்தைகள் என்று சித்த மருத்துவமும் விளக்குகின்றன. அந்த அவஸ்த்தைகளில் மிக முக்கியமானவை இரண்டு நோய்நிலைகள். ஒன்று இதய நோய்கள், மற்றொன்று பக்கவாதம்.

    நீரிழிவு நோயால் இதய நோய்கள் உண்டாகும் வாய்ப்பு 1.8 மடங்கு அதிகம் உள்ளதாகவும், 1.5 மடங்கு பக்க வாதம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.

    இவை ஒருபுறமிருக்க, நீரிழிவு நோய்நிலையில் உண்டாகும் கண்பார்வை குறைபாடு 28 சதவீதம் பேருக்கு உண்டாவதாகவும், கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் பேருக்கு நரம்பு சார்ந்த தொந்தரவுகளும் உண்டாவதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயானது பல்வேறு நோய்நிலைகளுக்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது. அதிமுக்கியமாக நீரிழிவு நோயால் உண்டாகும் சிறுநீரக பாதிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.

    ஆகவே காலத்திற்கும் மருத்துவமனை வாசலை நாட வைக்கும், பொருளாதார கொள்ளை நோயாக இருக்கும் நீரிழிவு நோய் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் கட்டுப்பாட்டில் வைப்பதோடு, உடல் உறுப்புகளை பாதுகாக்கும் மருத்துவ முறைகளையும் நாடுவது நல்லது. சித்த மருத்துவம் மேற்கூறிய இரண்டிலும் ஒரு சேர நன்மைத் தரக்கூடியது.

    சித்த மருத்துவ மூலிகைகளான சீந்தில், வேப்பிலை, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, ஆவாரை, கடலழிஞ்சில், நாவல்கொட்டை, பாகல்காய், கோவைக்காய், மருதம்பட்டை, தேற்றான்கொட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருவேப்பிலை, வேங்கைப்பட்டை, நித்யகல்யாணி, சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, துளசி, கடுகுரோகிணி ஆகிய மூலிகைகளும் மஞ்சள், லவங்கப்பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், கருஞ்சீரகம் ஆகிய அஞ்சறைப் பெட்டி சரக்குகளும் நீரிழிவு நோயில் பலன் தருவதாக உள்ளன. அத்துடன் உலகமே கண்டு அஞ்சும் நீரிழிவு நோயின் பின் விளைவு களை தடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தன.

    மேற்கூறிய சித்த மருத்துவ மூலிகைகள் 'மதுமேகம்' எனும் சர்க்கரை நோய்க்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சித்த மருத்துவ பயன்பாட்டில் உள்ளன. சித்த மருத்துவ மூலிகைகளில் உள்ள பீனோலிக் வேதிப்பொருட்களும், இயற்கை நிறமிகளும், அல்கலாய்டுகளும் இன்னும் பல்வேறு வேதிப்பொருட்களும் சர்க்கரை நோய்க்கு சிகப்பு சிக்னல் காட்டி, நல்வாழ்விற்கு பச்சைக் கொடி காட்டும் தன்மை உடையன.

    சித்த மருத்துவ மூலிகைகள் நம் உடல் செல்களுக்குள் சர்க்கரையை உட்செலுத்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், இன்சுலின் தடையை நீக்குவதன் மூலமும் சர்க்கரை அளவு குறைய வழிவகை செய்கின்றன. அத்துடன் நம் குடலில் ஆல்பா குளுகோசிடேஸ் மற்றும் ஆல்பா அமைலேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கக்கூடியதாக உள்ளதை ஆய்வுத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மூலிகைகளில் உள்ள பிளவனாய்டு வகை வேதிமூலக்கூறுகள் கணைய செல்களை புதுப்பித்து, இன்சுலின் சுரப்பை த் தூண்டக்கூடியதாகவும் உள்ளன.

    அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நிலவேம்பு மூலிகையானது சர்க்கரை அளவைக் குறைப்பதில் நற்பலன் தரக்கூடியது. அதில் உள்ள 'ஆன்ரோகிராபோலெய்டு' எனும் வேதிப்பொருள் குடலில் உள்ள பல்வேறு நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    சுடுகாட்டு மல்லி எனும் நித்தியகல்யாணி இலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க சர்க்கரை அளவு கட்டுப்படும். அல்லது பூவுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் பலன் தரும். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட 'வின்கிரிஸ்டின்', 'வின்பிளாஸ் டின்' வேதிக்கூறுகளுக்கு ஆதாரம் இந்த மூலிகை தான். இவை புற்றுநோயில் மட்டுமின்றி, சர்க்கரை நோயிலும் பலன் தரக்கூடியன.

    மருதம்பட்டை எனும் மூலிகை இதய நோய்நிலைகளில் பலன் தரும் என்கின்றன பல்வேறு ஆய்வுகள். இதில் உள்ள 'அர்ஜுனின்' எனும் வேதி மூலக்கூறு அதற்கு காரணமாகின்றது. மேலும் இது கல்லீரலைக் காத்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும். எனவே சர்க்கரை நோயுள்ள முதியோர்கள் இதயத்தைக் காத்துக்கொள்ள 'மருதம்பட்டை சூரணம்' எனும் சித்த மருந்தை நாடுவது ஆயுளைக் கூட்ட உதவும்.

    சர்க்கரை நோயில் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், நரம்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பினை தடுக்க வேண்டியது மிக அவசியம். இந்நிலையில் 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்து உள் உறுப்புகளைக் காத்து நலம் பயக்கக்கூடியது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உடையது. அதாவது உடலில் ஆக்ஸிஜன் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கூறுகளை நீக்கும் தன்மை இதற்குண்டு. எனவே நீரிழிவு நோயில் இறுதி வரை இதயம், சிறுநீரகம், கண் பார்வை செயல்பாடுகள் குறையாமல் தடுக்க திரிபலை சூரணத்தை தினசரி இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது.

    "ஆவாரை பொழித்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்ற சொலவடையை மறந்ததால் இழப்பு நம் ஆரோக்கியத்திற்குத் தான். சிறப்புமிக்க ஆவாரை பூவுடன் சிறிது லவங்கப்பட்டை, வெந்தயம், மஞ்சள் சேர்த்து தேநீராக்கி குடித்து வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அல்லது ஆவாரைக் குடிநீர் எனும் சித்த மருந்தினை கசாயமாக்கி குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். நம் ஊரில் வறண்ட நிலப்பகுதியில் மஞ்சள் நிறப்பூக்களுடன் பூத்து குலுங்கும் ஆவாரை நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைத்த வரம். எளிமையாய் வறண்ட பூமியில் கிடைப்பதால் இதன் மகத்துவம் பலருக்கு விளங்கவில்லை.

    கல்லீரல் நோய்நிலைகளில் பெரும்பயன் தரக்கூடிய கீழாநெல்லியும் சர்க்கரை அளவைக் குறைப்பதிலும், நீரிழிவு நோயில் உண்டாகும் கை, கால் எரிச்சல் ஆகிய நிலைகளிலும் பலன் தரக்கூடியது. 'மதுமேக சூரணம்' எனும் சித்த மருந்தில் வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள் இவற்றுடன் கீழாநெல்லி சேருவதும் குறிப்பிடத்தக்கது.

    வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்து பகல் நேரங்களில் தேக்கரண்டி அளவுக்கு எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன், ரத்தத்தில் அதிகமான கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலுக்கும் நன்மை பயக்கும்.

    அதிக நார்ச்சத்துள்ள உணவுப்பொருட்களும், தாவர உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதலும், நீரிழிவு நோயைத் தடுப்பதோடு, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்கின்றன ஆய்வுகள். சித்த மருத்துவமும் "கோதையர் கலவி போதை, கொழுத்த மீன் இறைச்சி போதை, ஊதுவாய் நெய்யும் பாலும் பரிவுடனுண்பீராகில்" என்று பல்வேறு உணவு உணவுகளை அதிகம் சேர்ப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்கிறது. இன்றைய ஆய்வு முடிவுகள் அறுதியிட்டு கூறுவதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சித்த மருத்துவம் கூறி இருப்பது, நம் பாரம்பரிய அறிவின் முற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார்.
    • பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான்.

    அய்யய்ய....

    வெக்கத்த பாரு மாமாவுக்கு...

    கட்டிக்க போறவ எப்படி இருக்கணும்னு கேட்டா...

    இப்படி வெட்கப்படுறீய...

    அட சொல்லுமாமா...

    என்னன்னு சொல்ல....

    அட யோசிக்கிறீயளா

    எப்படி சொல்ல...

    -என்ற ரொமான்டிக் டயலாக்கை நானும் பிரபுசாரும் பேச...

    "என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை..." என்று பிரபுசார் பாடும் அந்த பாடல் காட்சி இடம் பெற்ற 'ராஜகுமாரனை' நினைவிருக்கிறதா?

    1994-ல் வெளிவந்த படம். பிரபுசாரின் 100-வது படம். சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பு. நானும் நதியாவும் ஹீரேயின்கள் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார்.

    எனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம். குறும்புத்தனம், துடுக்காக இருப்பது. படம் முழுக்க ஜாலியாகவே போகும்.

    ஹீரோ பிரபுசாரை நானும், நதியாவும் விரும்புவோம். ஆனால் பிரபு சார் விரும்புவது நதியாவைத்தான்.

    ஆனால் நான் விடாமல் துரத்தி துரத்தி காதலிப்பேன். அவரிடம் குறும்புத்தனம் செய்வேன். அப்போது அவரிடம் பேசுவதுதான் மேற்கண்ட டயலாக்குகளும், அதற்கு பதிலாக அவர் பாட்டாலேயே பதில் சொல்வார்.

    அவர் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்று நான் நினைப்பேன். ஆனால் அவரோ நதியா வைத்தான் வர்ணித்து பாடுவார். மஞ்சள் நிற சேலைகட்டி வரும் நதியாவை நினைத்து

    "என்னவென்று சொல்வதம்மா

    வஞ்சியவள் பேரழகை.

    அந்த மஞ்சள் நிறத்தவளை

    என் நெஞ்சில் நிலைத்தவளை......

    தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி

    மீன்களோ

    பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி

    கருங் கூந்தலோ.. என்று பாடுவார்.

    அந்த காட்சியில் உண்மையிலேயே நான் ஊஞ்சல்தான் ஆடிக் கொண்டிருப்பேன். அதனால் ஊஞ்சலில் இருக்கும் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்பது என் நினைப்பு.

    இந்த பாடலின் பின்னணியில் இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு. ஷூட்டிங் நடந்த போது எனக்குரிய காஸ்ட்யூமை தந்தார்கள். அது எனக்கு சரியாக இல்லை. அதனால்நான் எனது சொந்த டிரெஸ்சை போட்டு சென்றேன். அது மஞ்சள் நிற காக்ரா சோளி.

    எனது காஸ்ட்யூமை பார்த்ததும் இந்த காஸ்டியூம் கிடையாதே! வேறு டிரெஸ் கொடுத்து இருந்தோமே என்றார்கள். நான், அது சரியில்லை என்று சொன்னதும் டைரக்டரும் ஒத்துக் கொண்டார்.

    ரெடி... ஷாட்... என்றதும் அந்தி மஞ்சள் நிறத்தவளே... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்தேன். அந்த பாடல் வரிகளை கேட்டதும் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம். பாட்டுக்கு தகுந்த நிறத்தில் டிரெஸ். என்னை நினைத்தே எழுதிய பாடல் எழுதியதாக நினைத்து மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம்.

    ஆனால் மறுநாள் எனக்கு வேறு கலரில் காஸ்ட்யூம். எனக்கு பிடித்த மஞ்சள் நிற காஸ்ட்யூ மில் நதியா இருந்தார். அதை பார்த்ததும் என் மனதில் வருத்தம். நமக்கு பிடித்தமான கலர் அவருக்கு போய் விட்டதே என்று. அந்த வயதில் அப்படியெல்லாம் நினைத்து இருக்கிறேன். ஏன் அப்படி நினைதேன் என்றே எனக்கு புரியவில்லை.

    ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார். அந்த பாடலில் மஞ்சள் நிறத்தவளே என்று பாடுவார். அப்படியானால் நதியா மஞ்சள் புடவை கட்டி வருவதுதானே பொருத்தமானது என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

    இந்த படத்தில் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் உண்டு. உயிரே உனக்காக என்ற படத்தில் நதியா ஹீரோயின். நான் குழந்தை நட்சத்திரமாக குட்டி நதியாவாக நடித்திருந்தேன்.

    இப்போது நதியாவுடன் அவருக்கு சரி சமமாக நானும் ஹீரோயினாக நடிக்கிறேன். நினைத்தாலே ஆச்சரியம்தானே.

    நான் ஹீரோயின் அந்தஸ்துக்கு வளர்ந்து இருந்தாலும் விளையாட்டுத்தனமாகவே இருப்பேன்.

    ஷூட்டிங் நடக்கும் போதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடுவேன். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் குழந்தை பருவத்தில் இருந்தே சினிமா உலகில் எல்லோருக்கும் என்னை தெரியும். அவர்கள் பார்வையில் எப்போதும் நான் குழந்தைதான். எனக்கும் கதாநாயகி ஆன பிறகும் குழந்தை நினைப்பு மாறவில்லை.

    எனது குரலும் குழந்தை குரல் போல்தான் இருக்கும். அதனாலேயே டப்பிங் பேச நினைத்தாலும் பேச முடியாமல் போனது.

    ராஜகுமாரன் படத்தில்தான் முதல் முதலில் டப்பிங் பேச ஆரம்பித்தேன். முக்கியமாக அந்த படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரமாக இருந்ததால் நடிப்பதற்காக 'ரிஸ்க்' எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. சாதாரணமாக அங்கும், இங்கும் நடந்தது போலவும் விளையாடியது போலவும் இருந்து. ஆனால் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன.

    பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான். அவருடன் நடித்த எல்லோருமே இதை சொல்வார்கள். அவர் வீட்டு சாப்பாட்டை யாராலும் அடிச்சிக்க முடியாது. வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பெரிய பன் கேரியரில் சாப்பாடு வரும். அதுவும் விதவிதமாக இருக்கும்.

    நமக்கெல்லாம் மட்டன் என்றால் சுக்கா, குழம்பு பொரிப்பு அதே போல் சிக்கன் என்றாலும் ஒருசில வகைகள்தான் தெரியும்.

    ஆனால் பிரபு சார் வீட்டில் இருந்து வரும் கறிக்குழம்பை நினைத்தாலே நாவில் நீர் ஊறும். விதவிதமாக சமைத்து வைத்திருப்பார்கள்.

    நான் உணவு கட்டுப்பாட்டில் இருந்ததால் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ருசி பார்ப்பேன். அவ்வளவுதான்.

    உடனே பிரபு சார் 'அட... என்பார். நல்வாசாப்பிடும்மா..!

    நானோ 'டயட்' சார் என்பேன்.

    அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நல்லா சாப்பிடு என்று சாப்பிட வைத்து விடுவார். உணவு கட்டுப்பாடெல்லாம் தகர்ந்து விடும். இப்படி விதவிதமாக சாப்பாடு கண்முன்னே இருந்தால் எவ்வளவு நேரத்துக்குத்தான் வாயை கட்டிக் கொண்டிருக்க முடியும்?

    அப்படித்தான் ஒருநாள் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கார் வந்தது. அதை பார்த்ததும் அப்பா வர்றார்.. என்று எல்லோரும் அருகில் ஓடினார்கள். சிவாஜி சாரை மரியாதையாக அப்பா என்று தான் அழைப்போம்.

    சிரித்து கொண்டே காரில் இருந்து இறங்கி வந்தார். சிவாஜி புரொடஷன் தயாரிப்பு என்பதால் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வந்திருந்தார்.

    அதன் பிறகு நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    • தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.
    • மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது ‘ஹிட்’ ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    மிகப்பெரிய ஏரி...

    எதிர் பாராமல் ஏரிக்குள் சிக்கி கொண்டோம். எப்படி மீளப்போகிறோம் என்ற பயம்! ஒரு பக்கம் பயமுறுத்தியது.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர்! யார் காப்பாற்ற வருவார்கள் என்றும் தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல பயம் மனதை கவ்வியது. எனக்கு நீந்த தெரியும். தண்ணீரில் குதித்து நீந்தி கரை சேருவோமா என்று யோசித்தேன். ஆனால் அவ்வளவு தூரம் நீந்த முடியுமா என்ற தயக்கமும் இருந்தது.

    இருந்தாலும் வேறு வழியில்லை என்று முடிவு செய்து அஜய் என்ன செய்வது..? தண்ணீரில் குதித்து நீந்துவோமா என்றேன். அப்போது தான் தெரிந்தது அவர் என்னை விட அதிகமாக பயந்து போய் இருந்திருக்கிறார். அவருக்கு நீந்தவும் தெரியாது என்றார்.

    என்ன செய்வது...? சற்று தூரத்தில் தண்ணீருக்குள் ஒரு பாறைக்குன்று தெரிந்தது. எப்படியாவது அந்த பாறைக்கு சென்று விட்டால் போதும். தைரியமாக இருக்கலாம். எப்படியாவது படக்குழுவினர் நம்மை காப்பாற்ற ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன்.

    அதற்கு மிதவையை நகர்த்தி கொண்டு அந்த பகுதிக்கு செல்ல வேவண்டும். அது எப்படி? துடுப்பும் இல்லை. கைகளையே துடுப்பாக்கி கொள்ளலாம் என்று முடிவு செய்து மிதவையில் அமர்ந்து தண்ணீரை துளாவி விட தொடங்கினேன்.

    மறுபக்கம் அவருக்கு தண்ணீரை துளாவவும் தெரியவில்லை. அதையும் சொல்லி கொடுத்தேன். மிதவை மெல்ல மெல்ல பாறையை நோக்கி நகர்ந்தது. பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் பாறையை நெருங்கி விட்டோம். அஜய் முதலில் பாறையில் குதித்து நான் ஏறுவதற்கு கை கொடுத்து உதவினார்.

    தண்ணீரைவிட்டு பாறை யில் பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டோம். இனி எப்போது மீட்க வரு வார்கள்...? எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். அந்த ஏரியில்

    அந்த ஏரியில் படகு, பரிசல் போக்குவரத்து எதுவும் கிடையாது எங்களை மீட்பதற்குத் தான் படகு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. காலையிலும் சாப்பிடாததால் பசி வயிற்றை வதைத்தது. உச்சி வெயில் வேறு தாகத்தால் நாவும் வறண்டது. சுற்றிலும் தண்ணீர் இருந்தும் குடிப்பதற்கு வாய்ப்பில்லையே! என்ன செய்வது?

    தாகத்தால் நாவும் வறண்டது பசியால் வயிறும், பயத்தால் இதயமும் தான் துடித்தது. நேரம் சென்றது தான் மிச்சம் ஆனால் யாரும் மீட்க வருவது போல் தெரியவில்லை.

    மறுபுறத்தில்.....

    கரையில் இருந்த படக்குழுவினர் எங்களை மீட்பதற்காக கயிறு தயார் செய்து இருக்கிறார்கள். அந்த கயிற்றின் ஒரு முனையை டிராலியில் கட்டி விட்டு, மறு முனையை மிதவையில் கொண்டு கட்டி இழுப்பதற்காக ஒருவர் கயிற்றை எடுத்து கொண்டு ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறார்.

    கொஞ்சதூரம் நீந்தியவர் நீந்த முடியாமல் திணறியிருக்கிறார். விட்டால் அவர் தண்ணீரில் மூழ்கி விடுவார் என்று எப்படியோ சிரமப்பட்டு அவரை மீட்டு இருக்கிறார்கள்.

    அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் எங்களை எப்படி மீட்பது என்று நினைத்து பதற்றத்தில் இருந்து இருக்கிறார்கள். படகுக்கு என்ன செய்வது? படகு வேண்டுமென்றால் செகந்திரபாத்துக்கு தான் செல்ல வேண்டும். என்று கூயிருக்கிறார்கள்.

    உடனடியாக செகந்திரா பாத்துக்கு ஆட்களை அனுப்பி ஒரு மோட்டார் படகை ஏற்பாடு செய்து லாரியில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். படகு புறப்பட்டதும் எல்லோர் பார்வையும் ஏரி மீது தான்.

    தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.

     

    படகு நெருங்கி வர வர மனதில் அப்படி ஒரு சந்தோசம். அப்பாடா.. இனி எப்படியாவது தப்பிவிடலாம் என்ற சந்தோசம் அது.

    படகு வந்தது. எங்களை சுமந்தபடி கரை திரும்பியது. காலை 12 மணியளவில் தண்ணீரில் சிக்கிய நாங்கள் கரை திரும்பிய போது மாலை சுமார் 4 மணி இருக்கும் எங்களை பார்த்த பிறகு தான் படக்குழுவினருக்கும் நிம்மதி. அதுவரை அவர்களும் தவித்தபடி தான் இருந்து இருக்கிறார்கள்.

    அன்றுடன் ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்பது தான் திட்டம். ஆனால் முடியவில்லை.

    மீதி காட்சியை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று அவசர அவசரமாக விமானத்தை பிடித்து சென்னை திரும்பினோம்.

    நடந்த சம்பவத்தை பற்றி நினைக்க கூட நேரம் இல்லை. சென்னை திரும்பியதும் உடனடியாக அடுத்த படம் ஷூட்டிங்.

    அது ஒரு இந்திப்படம். பிர்லா கோளரங்கத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கிய ஷூட்டிங் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. பின்னர் வீடு திரும்பி சிறிது நேரம் தூங்கிவிட்டு மீண்டும் காலையில் எழுந்து அடுத்த ஷூட்டிங் புறப்பட்டேன். அந்த காலகட்டத்தில் அப்படித்தான். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் ஓடிக்கொண்டிருந்தேன்.

    ஆனால் என்னோடு நடித்த ஹூரோ அஜய் மிகவும் பயந்துவிட்டார். காய்ச்சல், வாந்தி, பேதி என்று நான்கைந்து நாட்கள் வீட்டிலேயே முடங்கி விட்டார் என்றார்கள்.

    மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது 'ஹிட்' ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது கூடுதலான மனச்சுமையைதான் கொடுத்தது.

    இன்னொரு விஷயம். ஆபத்தில் சிக்கி மீண்ட அந்த ஏரி பக்கம் அதன் பிறகு இதுவரை சென்றதில்லை.

    எனது சினிமா வாழ்க்கையில் இது திகில் நிறைந்த மறக்க முடியாத அனுபவம்.

    அடுத்த வாரம் ஒரு ராஜகுமாரனுடனான சந்திப்பு பற்றிய சுவையான தகவல்களுடன் சந்திக்கிறேன்...

    (தொடரும்.)

    • யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.
    • ‘சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு’ என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.

    ஹீரோயின்னா ஆப்பிள் மாதிரி இருக்கணும்... பார்க்குறவங்க கண்களுக்கு அப்படி தெரியணும்!

    -இப்படி நினைப்பவர் டைரக்டர் ராகவேந்தர் ராவ். அவர் படம் என்றாலே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால் தெலுங்கில் அவர் படத்தில் நடிக்க எல்லா நடிகைகளும் ஆசைப்படுவார்கள்.

    ஷூட்டிங்கும் சாயங்காலம் ஆறுமணிக்கு மேல் இருக்காது. 6 மணி ஆனதும் ஷூட்டிங் ஓவர். கிளம்புங்க... போய் ரெஸ்ட் எடுங்க என்று எல்லோரையும் அனுப்பி விடுவார்.

    அவரது டைரக்ஷனில் அல்லாரி மொகுடு (குறும்புக்கார கணவன்) என்ற படத்தில் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ராகவேந்தர் ராவ் டைரக்ஷன் என்றதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    ஆனால் ஹீரோ மோகன்பாபு. அவரைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கேள்விப்பட்டு இருந்தேன். ரொம்ப கோபக்காரர். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் அவருடன் எப்படித்தான் நடிக்க போகிறோமோ என்ற பயமும் மனதில் இருந்தது.

    இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடிக்க தொடங்கினேன். அவரை பொறுத்தவரை நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவர். அதில் ரொம்ப கவனமாக இருப்பார். 10 மணிக்கு ஷூட்டிங் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே தயாராக இருப்பார்.

    யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.

    நான் அவரிடமும் நல்ல பெயர் வாங்கியே தீர வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

    முதல் நாள் ஷூட்டிங்... அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்தது. முதல் காட்சியே கனவு காட்சி. பாடல்தான். அதை தான் படமாக்கினார்கள்.

    பக்கத்து ஷெட்டில் வேறொரு படத்தில் வெங்கடேஷ் நடித்து கொண்டிருந்தார். எங்கள் ஷெட்டுக்கு வந்தவர் என்னை பார்த்தார். எனது மேக் அப்பையும், காட்சியையும் பார்த்து 'ஏம்மா... இப்பதான் சாண்டி படம் பண்ணியிருக்கிறாய். அந்த கேரக்டர் மிகப்பெரிய பெயர் வாங்கி தந்தது. எனவே பார்த்துக்க...' என்றார்.

    ஆனால் எனக்கோ படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்கணும் என்ற ஆசை. இப்படிப்பட்ட கேரக்டர். இப்படித்தான் நடிக்கணும் என்றெல்லாம் நினைப்பது கிடையாது.

    நல்ல கதை. அதற்கேற்ற கதாபாத்திரம்... அதைத்தான் நினைப்பேன். அல்லாரி மொகுடு படத்தில் என்னோடு ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    படம் வளர்ந்து கொண்டிருந்தது. நான் நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவது, டயலாக்குகளை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் பேசுவது எல்லாவற்றையும் மோகன்பாபு தினமும் கவனித்து இருக்கிறார்.

    அவர் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்டமாட்டார். அவரே என்னை பாராட்டினார். 'சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு' என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.

     

    அவரை போலவே நேரம் தவறாமை, தொழில் மீதான ஈடுபாடு ஆகியவற்றை பார்த்ததும் இந்த பொண்ணு நம்மை மிஞ்சி விட்டாள் என்று என்னை பார்த்து பயப்பட்டார். அவருக்கு 2 பையன், ஒரு மகள். என்னைவிட அவரது மகளுக்கு ஒரு வயது தான் அதிகம். அதனால் நாங்கள் தோழிகளாகிவிட்டோம். நேரம் கிடைக்கும் போது ஒன்றாக விளையாடுவோம்.

    ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வு நேரத்தில் நாங்கள் 'மியூசிக்கல் சேர்' சுற்றி விளையாடுவோம்.

    அதை பார்த்து மோகன்பாபு 'ஏம்மா... நீ எனக்கு ஹீரோயின்தானே...?' என்பார். அதற்குள் அவரது மகள் உள்ளே புகுந்து விடுவாள். 'டாடி... எங்களை விளையாட விடுங்கள்' என்பாள்.

    அதை கேட்டு எல்லாம் உங்கள் ராஜ்யம்தான். விளையாடுங்க... விளை யாடுங்க.. என்பார்.

    இப்படி அந்த குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடருகிறது. அவரை பார்த்து கோபக்காரர் என்று பயந்த நான் இப்போது அவரது குணத்தை பார்த்து பெருமைப்படுகிறேன்.

    கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நானே அனுபவத்தில் பார்த்துவிட்டேன்.

    சுந்தரகாண்டா!

    தமிழில் பானுப்பிரியா நடித்து வெளிவந்த 'சுந்தரகாண்டம்' படத்தின் ரீமேக் தான் 'சுந்தரகாண்டா'.

    தமிழில் பானுப்பிரியா நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் தெலுங்கில் நான் நடித்தேன். ஹீரோ வெங்கடேஷ்.

    கதைப்படி நான் ஆசிரமத்தில் வாழ்ந்த அனாதை பெண். அங்கு சொல்லித்தரும் தேவனே... தேவனே... என்று வெகுளித்தனமாக சொல்வதையே பாடலாக பாடி வாங்கி கட்டுவேன். படம் நகைச்சுவையான படம்.

    அதே நேரம் கதாபாத்திரம் மிகவும் கனமானது. படத்தின் கிளைமேக்சில் ஏனுங்க.. ஏனுங்க... நானும் தப்பு பண்ணிட்டேன். நாளைக்கு நான் முதுகு தேய்த்து விடுறேன் என்ற படியே எனது கணவரை தேடி வர வேண்டும். அவர் வெளியே தான் படுத்திருப்பார்.

    அவரை காணாமல் நான் தேடுவேன். அப்போது ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இதை ஒரே காட்சியாக படமாக்க டைரக்டர் முடிவு செய்து இருந்தார். அதை ஒரு சவாலாகவே நினைத்து நடித்தேன்.

    முழு சீனையும் ஒரே டேக்கில் எடுத்துவிட்டனர். அது மறக்க முடியாத அனுபவம். படத்தில் நான் தெலுங்கில் திட்ட வேண்டும். அதற்காக தெலுங்கில் கெட்ட வார்த்தைகளை சொல்லித் தந்து அதனால் நான் பட்ட அவஸ்தையும் உண்டு.

    சாண்டி படத்தை போலவே சுந்தரகாண்டா படமும் பாடல் கேசட் விற்பனையிலும் சாதனை படைத்து பிளாட்டினம் விழா எடுத்தார்கள்.

    இந்த பட ஷூட்டிங் நடந்த போது தான் ஆலங்கட்டி மழையையும் முதல் முதலாக பார்த்தேன்.

    நான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்த போது வானத்தில் இருந்து பனிக்கட்டி துண்டுகள் சிதறியது போல் பொல பொல வென்று விழுந்தது. அதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அது தான் ஆலங்கட்டி மழை என்றார்கள்.

    மீண்டும் அடுத்த வாரம் புதிய அனுபவங்களுடன் வருகிறேன்.

    (தொடரும்)

    • சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.
    • ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    நவகிரகங்கள் ஒன்பது.மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உண்டு. ராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.

    சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசை சந்திப்பு கேதுவாகும்.

    சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு-கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை. அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180 டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பவுர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். அதாவது சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.

    சந்திரகிரகணம்

    மங்களகரமான சோபகிருது வருடம் ஐப்பசி 11-ம் நாள் சனிக்கிழமை (29.10.2023) அன்று 1.03 மணி முதல் 2.24 மணி வரை அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள். ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம்.

    சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவதாகும்.

    சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்டால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கிரகண நேரத்தில் நியாயமான நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிரகண நேரத்தில் தியானம் , ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    கொடிய தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கிரகணம் விடும் நேரத்தில் தங்களால் முடிந்த தொகையை ஆன்லைனில் செலுத்தினால் வாட்டி வதைத்த கடன் பிரச்சினை விரைவில் தீரும். நடு இரவில் கிரகணம் சம்பவிப்பதால் பெரும்பான்மையாக எல்லோரும் தூங்கிக் கொண்டு இருப்பதால் உணவு கட்டுபாடு அவசியமில்லை.

    கர்பிணி பெண்கள் வெளியே செல்லக் கூடாது. உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் . மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம்.

    இயன்றவர்கள் கிரகணம் நடந்து கொண்டு இருக்கும் போது காயத்திரி மந்திர ஜபம், ராம நாமப் பாராயணம் , திருக்கோளாற்றுப் பதிகம் பாராயணம் செய்யலாம் .

    பரிகார ராசிகள்

    ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது சிறப்பு.கிரகணம் முடிந்த பிறகு காலையில் நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து புதியதாக சமைத்த உணவை உண்ணலாம்.

    ஐப்பசி மாத பவுர்ணமியும் அன்னாபிசேகமும்

    ஜோதிடத்தில் சந்திரன் மனதை ஆள்பவன் சந்திரன்.

    நவகிரகத்தில் முதல் நிலை பெறுபவன் சூரியன் என்றாலும் சந்திரனை வைத்தே ராசியை குறித்தனர்.சூரியனிடமிருந்து ஒளியை கடன் வாங்கி சந்திரன் பிரகாசிக்கிறது இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் ஒரு ஜாதகத்தில் தந்தை, தாயை போன்றது. சூரியன் ஆத்ம பலத்தையும், சந்திரன் மனோ பலத்தையும் தருகிறார்கள்.

    இவ்வளவு சக்தி பெற்ற சூரிய, சந்திரனை வலுவிழக்க வைக்கும் ஆற்றல் ராகு, கேதுக்களுக்கு உண்டு. அமாவாசையில் பிறந்தவருக்கு சூரியன்+சந்திரன் சேர்க்கை இருக்கும். பவுர்ணமியில் பிறந்தவர்களுக்கு சூரியனுக்கு 7-ல் சந்திரன் இருக்கும். இவர்களோடு ராகு கேதுக்கள் நெருங்கி இணைந்து இருந்தால் மன சஞ்சலம் எளிதில் ஏற்படும். நிலையான முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறும்.


    இதே போல் சூரியன் நீசமாகி, ராகு, அல்லது கேது இணைந்தால் ஆன்ம பலமின்றி அடிமைதனமான வாழ்வும் அமையும். அது போல் சந்திரன் அஷ்டமாதிபதி நட்சத்திர சாரத்தில் அமர்ந்து ராகு கேதுக்கள் உடன் 8 டிகிரிக்குள் இணைவு பெற்றவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க கடுமையாக திணறுவர். ஒளி கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் வலுவற்று இருக்கும் நிலையில் அடுத்தவரை சார்ந்தோ அல்லது அவருடைய ஆதரவிலோ வாழ்க்கை அமையப் பெறும். அன்னை தந்தையின் ஆதரவும் முழுமையாக இருக்காது. மனநலப்பாதிப்பை கண்டிப்பாக உருவாக்கும். பணம், காதல், வேலை, குடும்பம், குழந்தை என இவற்றில் ஒன்றால் மனம் நிம்மதி இல்லாமல் வாடும்.

    அமாவாசை, பவுர்ணமி காலங்களில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும். பூரண பவுர்ணமி காலத்தில் கடல் பொங்கும், சீற்றமாகும். இத னால்தான் மன நலம் பாதித்தோர் இந்த நாட்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சூரியன் பாதிக்கப்பபட்டோர் தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சந்திரன் பாதிப்படைந்தோர் கிரிவலம் வர பிரச்சினை குறையும். பவுர்ணமி அன்று பூரண உபவாசம் இருந்த பின் மாலையில் சந்திர உதயத்திற்கு பின் வீட்டில் பூஜை செய்து, அபிராமி அம்மனையும், அண்ணாமலையாரையும் வழிபட்ட பின் சந்திரனுக்கு பச்சரிசி சாதம் படைத்து அதை பால் ஊற்றி சாப்பிட சந்திரதோஷம் குறையும்.

    ஐப்பசி மாதம் சிவன் கோவிலில் நடைபெறும் அன்னாபிசேக பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்தை சாப்பிட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.

    தானங்களில் போதும் என்ற மனதி ருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவு அளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படும்.

    அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தால் அனைத்து பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும்.

    ஐப்பசி 11, சனிக்கிழமை (28.10.2023) அன்று ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம் சிவன் கோவிலில் நடைபெறும். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. உலகத்திற்கே படியலக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் உலகிற்கே பஞ்சம் வராது என்பது உண்மை.இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்க ளுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    ஆலய வழிபாட்டில் பவுர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்தி ரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்வதால் ஐப்பசி அனனாபிசேகம் மேலும் சிறப்பு பெறுகிறது.

    அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது. அதனால் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசியை அன்னாபிஷேகம் செய்வது வழிபடுவது சிறப்பு.இந்த அபிஷேகம் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யசூர் வேத பாராயணமும், ஸ்ரீ ருத்திரம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். இரண்டு நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

    அன்னாபிஷேகப் பலன்கள்

    சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிட்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னம் கொண்டு நடக்கும் அன்னாபிஷேகத்தைக் கண்ட வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.

    வியாபாரத்தில் பிரச்சினை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். மாணவர்கள் உண்டால் கல்வி ஆர்வம் கூடும்.

    வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேகம் செய்து பிரசாதம் உண்டால் சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷம் விலகும்.

    நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும். இந்த அன்னத்தை உண்பவர்களுக்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

    வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை. மேலும் சுய ஜாதகத்தில் சந்திரன் ராகு, சந்திரன் கேது சேர்க்கையால் ஏற்படும் மன சஞ்சலம், பய உணர்வு, ஆரோக்கிய குறைபாடு சீராகும்.தோற்றப் பொலிவும், தன்னம்பிக் கையும் கூடும்.

    எனவே வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அன்னாபிசேக காட்சியை வழிபடுவதுடன் ஆலயங்களில் அன்று நடைபெறும் அன்னதானத்திற்கு உதவுவதும் நன்மையை அதிகரிக்கும். அன்று நள்ளிரவில் பவுர்ணமி முடியும் நேரத்தில் கிரகணம் சம்பவிக்க உள்ளதால் கோவிலில் அன்னாபிசேகம் நடைபெறும் நேரத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு பயன் பெறவும்.

    குடும்பத்தில் நிம்மதி இல்லாமல், திருமணம் கை கூடாமல் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    செவ்வாய் தோஷம் என்றதும் எல்லோரும் அலறும் நிலைதான் உள்ளது. செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பது போல பலரும் பேசுவது மரபு போலவே ஆகிவிட்டது. ஆனால் செவ்வாய் கிரகம் எல்லோரும் நினைப்பது போல மோசமான கிரகம் அல்ல. அதனுடைய தோற்றத்தை தெரிந்து கொண்டாலே அது நமக்கு புரிந்து விடும்.

    சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் முனிவர் நர்மதை ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். ஒருநாள் அதிகாலையில் நர்மதை ஆற்றில் நீராட சென்றார். அப்போது அங்கு தேவலோக பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். அவளை கண்டதும் அவளது அழகில் பரத்வாஜ் முனிவர் மயங்கினார்.

    அவளிடம் பேசி மயக்கி இரண்டற கலந்து விட்டார். இதன் காரணமாக அந்த தேவலோக பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் பரத்வாஜ் முனிவர் ஆசிரமத்துக்கு செல்ல முடியாது. அந்த பெண்ணும் அந்த குழந்தையை தேவலோகத்துக்கு கொண்டு செல்ல இயலாது. எனவே இருவரும் நர்மதை நதிக்கரையிலேயே அந்த குழந்தையை விட்டு சென்றனர்.

    இதை கண்ட பூமாதேவி அந்த குழந்தையை எடுத்து வளர்த்தாள். குறிப்பிட்ட வயது வந்ததும் அந்த குழந்தை தன் தந்தை யார் என்று கேட்டாள். பூமாதேவி நடந்தது அனைத்தையும் அந்த பையனிடம் சொல்லி அவனை பரத்வாஜ் முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள். பரத்வாஜ் முனிவரும் தன் மகனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அந்த சிறுவனுக்கு செவ்வாய் என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

    தாய் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததால் செவ்வாய்க்கு குடும்பம், தாய், மனைவி போன்ற விவகாரங்களில் வெறுப்பு ஏற்பட்டு போனது. இதனால்தான் ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடங்களில் குடும்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய கட்டங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு செவ்வாய் தோஷம் என்று சொல்லி விடுகிறார்கள்.

    இதே போல சந்திரன் நின்ற இடத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருப்பதும் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். இப்படி சொல்வதால் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல், திருமணம் கை கூடாமல் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    ஆனால் ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதை செவ்வாய் தோஷம் என்று சொல்லவே முடியாது என்பதுதான் உண்மை. ஜாதக கட்டங்களில் மற்ற கிரக அமைப்புகளுடன் செவ்வாய் இருப்பதை ஒப்பிட்டு பார்க்கும் சமயத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    பொதுவாக ஜாதகத்தில் 7, 8 இடங்களில் செவ்வாய் இருந்தால் கடுமையான தோஷம் என்பார்கள். 2, 4, 12 இடங்களில் இருந்தால் தோஷம் சற்று குறைவாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே 2, 4, 7, 8, 12 கட்டங்களில் செவ்வாய் இருந்து விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு செவ்வாய் தோஷம் என்று சொல்லக்கூடாது.


    செவ்வாய் தோஷம் இருந்தால் அதே மாதிரி செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது பலமொழி போல ஆகி விட்டது. செவ்வாய் கிரகம் வெப்பம் மிகுந்த கிரகமாகும். இந்த கிரக அமைப்பில் இருப்பவர்கள் ஆர்.எச். நெகடிவ் என்ற ரத்த வகை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற ரத்த வகை உடையவர்களுடன் இவர்கள் திருமணம் செய்தால் அவர்களது இல்லற இன்பம் திருப்தியாக இருக்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இதை வைத்துக் கொண்டுதான் ஜோதிடர்கள் ஆண்-பெண் இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் என்று பொதுப்படையாக சொல்லி விட்டார்கள். செவ்வாய் பகவானை சகோதர காரகன், பூமி காரகன் என்று சொல்வார்கள். எனவே ஜாதகத்தில் செவ்வாய் அமைப்பை பொறுத்து சகோதரர்களால் நல்லது-கெட்டது தீர்மானிக்கப்படும்.

    அதுபோல பூமி, விவசாயம் போன்றவற்றில் ஏற்படும் லாப-நஷ்டங்களிலும் செவ்வாய் ஆதிக்கத்தை காண முடியும். ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடம் மற்றும் அதன் திசை உள்ளிட்டவற்றை நுட்பமாக ஆய்வு செய்தால் மட்டுமே செவ்வாய் தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கணிக்க முடியும். எனவே வெறுமனே செவ்வாய் தோஷம் என்றால் நம்பாதீர்கள்.

    தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப உரிய தலங்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து நிவர்த்தி பெற முடியும். எனவே செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுவது எந்த அளவுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

    பொதுவாக விநாயகர் வழிபாடு ஒன்றே செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய போதுமானது என்று சொல்வார்கள். செவ்வாய் கிரகத்துக்கு விநாயகர் ஒரு செவ்வாய்க்கிழமை காட்சி அளித்தார். அதனால் செவ்வாய்க்கிழமை மங்களவாரம் என்று சொல்வார்கள். இதில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு மங்களன் என்ற பெயர் வந்தது.

    எனவே விநாயகரை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தை தடுத்து நிறுத்த முடியும். செவ்வாய்க்கி ழமைகளில் சதுர்த்தி திதி வந்தால் அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டு பாருங்கள். செவ்வாய் தோஷம் ஓடியே போய் விடும்.

    செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதும் மற்றொரு பரிகாரம் ஆகும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய் கிரகத்துக்கு செண்பக பூ, சிவப்பு நிற அரளி பூ கொண்டு பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 5 பேருக்கு சிவப்பு வஸ்திரங்களும் உணவும் கொடுப்பது இன்னும் நல்லது.

    செவ்வாய் தோஷத்தால்தான் திருமணம் தடைப்படுகிறது என்று உறுதியாக தெரிய வந்தால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை வீட்டிலேயே செவ்வாய் பகவானுக்கு பூஜைகள் செய்தால் சரியாகி விடும். பூஜை செய்யும்போது செவ்வாய் கிரகத்தை மனதில் நினைத்துக் கொண்டு சூடம், சாம்பிராணி காட்டினால் நிச்சயம் பலன் உண்டு.

    செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் தெற்கு திசையில் செவ்வாய்க்குரிய கோலம் வரைந்து அதன் மீது செவ்வாய் எந்திரத்தை வைத்து 108 தடவை செவ்வாய் காயத்ரியை சொன்னால் எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமும் கட்டுப்பட்டு விடும். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் இலந்துறையில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தை போக்க உதவும்.

    பொதுவாக செவ்வாய் கிரகத்தை வழிபடும்போது, "பூமித்தாய் பெற்ற தவப்பு தல்வனே, மின்னல் போன்ற ஒளி கொண்டவனே, சக்தி ஆயுதத்தை ஏந்தி இருப்பவனே, மங்களம் என்ற பெயர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். என்னை பாதுகாத்துக் கொள்" என்று சொன்னாலே போதும். செவ்வாய் பகவான் மனம் இறங்கி நிச்சயம் அருள்வார்.

    செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். எனவே முருகன் வீற்றிருக்கும் ஆலயங்களில் வழிபடுவது நல்லது. குறிப்பாக வைத்தீஸ்வரன் ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று வழிபாடு செய்வதால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து விடுபட முடியும். வைத்தீஸ்வரன் கோவில் மிக சிறந்த செவ்வாய் பரிகார தலமாக அனைவராலும் போற்றப்படுகிறது.

    இந்த தலத்தில் செவ்வாய் பகவான் தெற்கு பார்த்த நிலையில் உள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதிக்கு பின்புறம் இவரது சன்னதி அமைந்துள்ளது. நான்கு கைகள் அவற்றில் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தருவபராக செவ்வாய் காட்சி அளிக்கிறார். செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஆட்டுகிடா வாகனத்தில் செவ்வாய் வீதி உலா வருவார்.

    செவ்வாயும், முருகனும் முன்னும்பின்னு மாக உலா வருவார்கள். அப்போது வழிபட்டால் மிகவும் நல்லது. இந்த பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் தங்கள் ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு செம்பருத்தி பூ அல்லது சிவப்பு நிற பூவை அணிவித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

    செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

    வீர துவஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பவும: ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு சுத்த ஆடைகளை உடுத்தி நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து 108 முறை சொன்னால் செவ்வாய்க் கிரகத்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

    பூந்தமல்லி, திருப்போரூரில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில்கள், வில்லிவாக்கம் அகதீஸ்வரர் கோவில், நெல்லை கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில், நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநி பெருமாள் கோவில், திண்டுக்கல் தண்டாயுதபாணி கோவில், சின்னாளபட்டி சதுர்முகன் கோவில், மதுரை மன்னாடிமங்களம் நரசிங்க பெருமாள் கோவில், சோழவந்தான் பிரளயநாதர் கோவில், தேனி கோடங்கிபட்டி ஆறுமுக நயினார் கோவில், மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருப்புனவாசல் விருத்தக்கீஸ்வரர் கோவில், சென்னை அனுமந்தபுரம் வீரமந்திரர் கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில், திருப்பணந்தாள் அருணசடேஸ்வரர் கோவில், திருவாரூர் வீரா வாடி அகோரவீர பத்திரர் கோவில் ஆகியவையும் செவ்வாய் தோஷத்தை விரட்டும் மிக சிறந்த தலங்களாக திகழ்கின்றன. பயன்படுத்தி செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.
    • உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாராதியார் உணவின் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார். மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. இந்த உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    உணவின் பாதுகாப்பையும், பசி, பட்டினியை போக்கவும் 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.

    உணவு உற்பத்திக்கு முக்கியமான விவசாயிகள், உணவு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் என இதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    • நோய்களுக்கு ஏற்ப உள்மருத்துவம் மற்றும் புறமருந்துகள் தேர்வு செய்து சிகிச்சையளிக்கும்போது பிணியாளன் விரைவில் குணமடைகிறான்.
    • கோதுமை தவிடை வறுத்து துணியில் முடிந்து மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒற்றடமிட்டு வர மார்பு சளி கரையும்.

    தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். நாய்க்கு தன் உடல் கோளாறுகளுக்கு அருகம்புல்லைத் தின்னவும், பூனைக்கு குப்பைமேனியை வணங்கவும், கீரிக்கு விடம் பாதிக்காமல் இருப்பதற்கு கீரிப்பூண்டில் உருளவும் சொல்லிக் கொடுத்த இறைவனாகிய சிவபெருமானே மனிதருக்கு மருத்துவத்தை சொல்லிக்கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

    "மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும்

    மறுப்பது உளநோய் மருந்தென சாலும்

    மறுப்பது இனிநோய் வாராதிருக்க

    மறுப்பது சாவை மருந்தெனலாமே"

    என்ற திருமூலரின் வாக்கிற்கு இணங்க, சித்த மருத்துவம் காப்பு, நீக்கம், நிறைப்பு என்ற மூன்று தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. நோய் வருவதற்கு முன்பே சுகநிலையில் நோய் ஏற்படாதிருக்க மருந்து உண்டால் அம்மருந்துகள் 'காப்பு' என்றும், நோய் வந்தபின் அதனை நீக்குவதற்காக கொடுக்கப்படும் மருந்தும், சிகிச்சையும் 'நீக்கம்' என்றும், பிணியினால் உண்டாகும் இழப்புகளை ஈடு செய்வதற்கு கொடுக்கப்படும் மருந்து முறை நிறைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

    சித்த மருத்துவத்தில் உள்மருந்துகள் 32 ஆகவும், புறமருந்துகள் 32 ஆகவும் வகுக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு ஏற்ப உள்மருத்துவம் மற்றும் புறமருந்துகள் தேர்வு செய்து சிகிச்சையளிக்கும்போது பிணியாளன் விரைவில் குணமடைகிறான்.

    உடலின் புறப்பகுதியில் பயன்படுத்தப்படும் புறமருந்துகள் குறித்து விரிவாக காணலாம். கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, பொட்டணம், தொக்கணம், புகை, மை, பொடிதிமிர்த்தல், கலிக்கம், நசியம், ஊதல், நாசிகாபரணம், களிம்பு, நீர், வர்த்தி, சுட்டிகை, சலாகை, பசை, களி, குடோரி, முறிச்சல், கீறிகட்டல், காரம், அட்டைவிடல், அறுவை, கொம்புகட்டல், உறிஞ்சல், குருதிவாங்கல், பீச்சு என புறமருந்துகள் 32 வகைப்படுகிறது.

    கட்டு: தாவரங்களின் இலைகள் அல்லது பட்டைகளை இடித்தோ, அரைத்தோ, வதக்கியோ நோயுள்ள இடங்களில் கட்டுதல் கட்டு எனப்படும். வீக்கம், திறந்த காயங்கள், சதைப்பிடிப்பு, சுளுக்கு மற்றும் எலும்பு முறிவு அல்லது விலகல் போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான பருத்தி துணியில் மருந்துகளை தடவி நோயுள்ள இடங்களை சுற்றி கட்டும்போது ரத்த ஓட்டத்தை சீராக்கி, அவ்விடம் மாசுபடுவதையும் தடுக்கிறது. சித்த மருத்துவ நூல்களில் சன்னி நோய்க்கு தலையிலும், கண் நோய்க்கு கண்ணிலும், கைகால் எரிவிற்கு உள்ளங்கை உள்ளங்காலிலும், கால் வீக்கத்திற்கு காலிலும் கட்டுதல் வேண்டும் என்று கூறப்படுகிறது.

    பற்று: தாவரங்களின் இலை, பட்டை, வேர் போன்றவற்றை அரைத்து நோய்நிலைக்கேற்ப சூடு செய்தோ, சூடு செய்யாமலோ வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் திண்மையாக அப்புதல் பற்று எனப்படும்.தோல் நோய்களில் உள்ள அழற்சியை போக்கவும்,மூட்டு தேய்மானம்,விரைவீக்கம் போன்ற நிலைகளில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், மேலும் சில கட்டிகள் போன்றவற்றை கரைக்கவும் இது பயன்படுகிறது. கழற்சி விதை பொடி, தொட்டாற்சுருங்கி, நத்தைசூரி போன்றவற்றை அரைத்து முட்டை வெண்கருவுடன் சேர்த்தோ, பச்சைப்பயிறு மா போன்றவற்றுடன் சேர்த்து அரைத்தோ பற்றிட பயன்படுத்தலாம்.

    ஒற்றடம்: இது மூலிகைகளின் இலைகளையோ, கருங்கல் பாறைத்தூள், இரும்பு கிட்டத்தூள், அரிசித்தவிடு, சுண்ணாம்பு காரை, செங்கல்தூள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வறுத்து துணித்துண்டில் முடிந்து, மார்பு, தலை, கன்னம், தோள்கள், முதுகு, இடுப்பு, முழங்கால், காலடி ஆகிய இவ்விடங்களில் சூடுண்டாகும்படி ஒற்றி எடுக்கும் முறையாகும். மேற்கூறிய இடங்களில் மட்டுமல்லாமல் மூக்கு, வயிறு, தொப்புள், இரண்டு விலாப்பக்கம், இடுப்பு அரை ஆகிய இவ்விடங்களிலும் ஒற்றிடலாம்.

    கம்பளித்துணி அல்லது பருத்தி துணியைக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்து பிழிந்து வேதனையுள்ள கட்டி, வீக்கம் இருக்கும் இடங்களில் ஒற்றடமிடலாம். மேலும் தைலங்களை நோயுள்ள இடங்களில் பூசி நொச்சி, எருக்கு, தழுதாழை, ஆமணக்கு, துத்தி, போன்ற இலைகளை ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டு வீக்கத்தை போக்கும்.

    மஞ்சள், உப்பு இவ்விரண்டையும் பொட்டணமாக கட்டி கொதிக்கும் எண்ணெயில் தோய்த்து சற்று ஆறியபின் அடிபட்ட வீக்கங்களுக்கு நோயுள்ள இடங்களில் ஒற்றடம் இடலாம். இவ்வாறே எலுமிச்சம்பழத்தை இரண்டாக அரிந்து, துணித்துண்டில் முடிந்து எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடலாம்.

    கோதுமை தவிடை வறுத்து துணியில் முடிந்து மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒற்றடமிட்டு வர மார்பு சளி கரையும். ஆமணக்கு விதை பருப்பை வறுத்து விடா வயிற்றுவலிக்கு ஒற்றடமிடலாம். மேலும் குழந்தைகளின் வயிற்று வலிக்கு ஆமணக்கு இலை, வெற்றிலை போன்றவைகளை வதக்கி ஒற்றடமிடலாம்.

    பூச்சு: கொதிக்க வைத்த சில இலை இரசங்களையாவது, தைலங்களையாவது நோயுள்ள இடங்களில் பூசுவது பூச்சு எனப்படும். வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி போன்ற செடிகளின் இலைகளை அரைத்து சாறெடுத்து அரிப்புள்ள இடங்களிலும், மருக்கள் உள்ள இடங்களிலும் மேல்பூச்சாக பூசி குளித்து வரலாம். சந்தனத்தை பழச்சாற்றில் அரைத்து முகப்பருக்கள் மீது பூசலாம். மேலும் மூலிகை தைலங்களை நோய்க்கு ஏற்றவாறு மேல் பூசி வரலாம். சுண்ணாம்பு தேன் கலந்து வீக்கத்திற்கு மேல் பூசலாம்.

    வெள்ளரி விதை, சந்தனம், நெருஞ்சி முள் இவற்றை சம அளவு எடுத்து தாய்ப்பால் அல்லது பசுவெண்ணெய் சேர்த்து அரைத்து தொப்புள் மற்றும் அடிவயிற்றில் பூசி வர நீர்க்கடுப்பு குறைந்து நீர் வெளியேறும் .

    கஸ்தூரி மஞ்சளை பொடிசெய்து இளநீர் சேர்த்து அரைத்து கால் வெடிப்புக்கு பூச்சாக பயன்படுத்தலாம்.

    வேது: வெந்நீரில் நொச்சித்தழை முதலியவற்றை இட்டு அதனின்று கிளம்பும் ஆவியையாவது, செங்கலை சிவக்க காய்ச்சி நீரில் இட்டு அதிலிருந்து எழும் ஆவியையாவது பிடிப்பது ஆகும். தலையில் நீர்கோர்த்து இருந்தால் எலுமிச்சம் பழ விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை பிடிக்கலாம்.

    உடல்வலிக்கு நீரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி, அதில் உப்பு பொடியை நிரம்ப போட்டு அதிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படுமாறு செய்யலாம். இப்படி செய்வதால் வியர்வை உண்டாகி வேதனை தணியும். மேலும் குப்பைமேனி, மஞ்சள்தூள், துளசி, தும்பை, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றை தேவைக்கேற்ப வேது பிடிக்க பயன்படுத்தலாம். வேது பிடிப்பதற்கு முன் சிறிது நீர் அருந்திவிட்டு பிடிக்கவேண்டும். இதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். புளியிலை, துத்தியிலை, முசுமுசுக்கையிலை இவைகளின் சாற்றை நீரில் ஊற்றி செங்கலை சிவக்க சுட்டு போட்டு மூல நோய்க்கு ஆவி பிடிக்கலாம்.

    பொட்டணம்: இது சில மருந்துகளை துணித்துண்டில் பொட்டணமாக முடிந்து காது, மூக்கு, எருவாய், பெண்களின் கருவாய் ஆகிய இடங்களில் வைக்கப்படுவதாகும். சில சரக்குகளை இடித்து முடிச்சுக்கட்டி வேப்பெண்ணெய்யோ வேறு நெய்யோ சுடவைத்து அம்முடிச்சை அதில் நனைத்து நோயுள்ள இடங்களில் ஒற்றடம் போடவும் உதவும் முறையாகும்.

    காதுவலி, இரைச்சல் போன்றவைக்கு பூண்டு,காயம் இவற்றை சிறு பொட்டணமாக கட்டி காதில் வைத்து வரலாம். சைனுசைடிஸ், அலர்ஜிக் ரைனைட்டிஸ் போன்ற பிரச்சினைகளில் கருஞ்சீரகத்தை ஒரு சிறு பொட்டணமாக கட்டி சிறிது நசுக்கி முகர்ந்து வரலாம். மேலும் நாவல், அத்தி, கடுக்காய் தோல் ஆகியவற்றின் பொடிகளை ஒரு சிறு துணியில் முடிந்து கருவாயில் தினம் வைத்து வர யோனி தளர்ச்சி நீங்கும்.

    சம்பா அரிசி தவிடு, புண்ணாக்கு சம அளவு எடுத்து நன்றாக இடித்து வறுத்து பஞ்சு வெண்துணியில் பொட்டணம் கட்டி அளவான சூடுடன் தலையில் ஒற்றி எடுக்க ஒற்றை தலைவலி தீரும்.

    தொக்கணம்: தொக்கணம் என்பது மர்த்தனம் எனப்படும். வாதத்தால் உண்டாக்கக்கூடிய நோய்கள் எல்லாவற்றையும் நீக்குவதற்கு இது பயன்படும். வெறுங்கையாலோ, தைலங்களை தடவியோ தட்டல், இறுக்கல், பிடித்தல், முறுக்கல், கைகட்டல், அழுத்தல், இழுத்தல், மல்லாத்துதல், அசைத்தல் என ஒன்பது வகையில் செய்யப்படும். இதை தொடர்ந்து செய்து வர நரம்பில் ஊறி வருத்துகின்ற வாயுக்கள், பிடிப்புகள், சுளுக்குகள் குணமாகும். இம்முறை வாதபிணியினால் எழுந்திருக்கமாட்டாத நொண்டிபோல்வனையும் எழுந்து நடக்க செய்யும். உளுந்து தைலம், விஷமுஷ்டி தைலம், சிவப்பு குக்கில் தைலம் போன்றவற்றை பயன்படுத்தி தொக்கணம் செய்யலாம்.

    புகை: இது மருந்து பொருட்களை துணித்துண்டில் வைத்து திரியாகச் செய்து கொளுத்தி புகை பிடித்தல், புண் முதலியவற்றில் தாக்கும்படி செய்தல் போன்ற முறைககளில் பயன்படுகிறது. மேலும் இது அறைகளில் உள்ள நாற்றத்தை அகற்றும் வண்ணம் மணப்புகையாகவும் போடப்படுகிறது.

    ஊமத்தை பூவை சுவாச நோய்களில் புகை பிடிக்க பயன்படுத்தலாம். சலதோசத்தில் மஞ்சள் கொம்பை சுட்டு அந்த புகையை பிடித்து வரலாம்.மேலும் சாம்பிராணி புகையால் தலைபாரம் குறையும்.

    சுக்கு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம் போன்றவற்றை ஆடாதோடையின் இலைச்சாற்றை விட்டு அரைத்து, அதை துணியில் தடவி திரியாக திரித்து, வெயிலில் உலர்த்தி சைனசைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினம் காலை திரியை கொளுத்தி புகையை மூக்கில் பிடித்து வர நீர் வடிந்து குணம் தரும்.

    மேலும் பூச்சிக்கடியில், அகஸ்தியர் குழம்பு என்னும் சித்த மருந்தை திரியாக்கி அப்புகையில் கடிவாயை காட்டி வர பூச்சிக்கடியால் உண்டாகும் எரிச்சல் மற்றும் வலி தணிவதோடு, சுற்றியுள்ள இடங்களில் சிவந்திருப்பது படிப்படியாக குறைவதை கண்ணால் காண முடியும்.

    மேலும் இந்த அகஸ்தியர் குழம்பு புகையால் பல வகைப்பட்ட புண்கள், முக்கியமாக நீரிழிவினால் ஏற்பட்ட புண்களில் இருந்து நீர் வடிந்து எளிதில் புண் உலருகின்றது.

    மை: இது சில மருந்து சரக்குகளை அஞ்சனக்கல் எனப்படும் சரக்கோடு சேர்த்து, இலைச்சாறு விட்டு உலர உலர அரைத்து, உலர்த்தி, பிறகு தேன்விட்டு மைபோல அரைத்துக் கொள்வதும், சில சரக்குகளை கருக்கி தேன் விட்டு அரைத்து கண்களில் மைபோல தீட்டிக் கொள்ளும் முறையாகும்.

    சுக்கு, திப்பிலி, இந்துப்பு, வெள்ளைப்பூண்டு போன்ற சரக்குகளை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து மாத்திரையாக செய்து உலர்த்தி கொள்ளலாம். சன்னி போன்ற நோய்நிலையில் இம்மாத்திரையை எலுமிச்சை சாற்றில் உரைத்து மருத்துவரின் கண்காணிப்பில் மைபோல தீட்டலாம். மேலும் மாதுளை இலையை பசும்பாலில் அரைத்து கண்ணை சுற்றி பூசி வர கண்ணெரிச்சல் குணமாகும்.

    - தொடரும்

    • வாக்யும் கிளீன் செய்யும் ரோபோக்கள் பல்கிப்பெருகி விலையும் சல்லீசாக ஆகிவிட்டது.
    • ரோடிமாடிக் என்னும் ரோபோ சப்பாத்தி பூரியெல்லாம் சடுதியில் செய்து இறக்கி விடுமாம்.

    "சேகர்! எனக்கு ஒரு சோமா கலந்து கொடு!"

    "வர்ரேன் எஜமானரே!"

    குரலில் கடுப்பு தெரிகிறதோ?

    "சேகர்! எனக்கும் ஒரு சோமா தருவியா?"

    "ஆஹா இதோ ஒரே நொடியில்!"

    நித்யாவுடன் பேசும்போது மட்டும் இந்த சேகரின் குரலில் ஒரு குழைவு!

    ஆத்மா விசனப்பட்டான்….

    பல ஆண்டுகளுக்கு முன்பே சுஜாதா வீட்டில் உதவிகள் செய்யும் சேகர் என்னும் ரோபோ பற்றி எழுதிகற்பனை பண்ணிவிட்டார். அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நித்யா தன் கணவன் ஆத்மாவைக்கேலி செய்தால் "ஹஹ்ஹ்ஹ்ஹ" என்று கச்சிதமாகச்சிரிக்கும் அந்த சேகர்!

    அப்போது கற்பனையாக இருந்தது இப்போது கிட்டத்தட்ட நிஜமாகிக்கொண்டிருக்கிறது.

    இயந்திர இயலின் முன்னேற்றங்களும் இணையத்தின் வீச்சும் தகவல் தொழில்நுட்ப தொடர்பின் வாயு வேக மனோ வேக உயர்வும் ரோபோக்களின் உபயோகங்களை பல மடங்கு விஸ்தாரமாக்கிவிட்டன.

    "ஏண்டி சமையல் ரூமைப்பெருக்கி மொழுகுன்னா இப்படி மாடு கன்னு போட்ட இடம் மாதிரி பண்ணி வெச்சிருக்க!"

    அம்மாக்கள் கவலையுடன் பெண்களைக்கோபிக்கும் காலமெல்லாம் போய்விட்டன!

    வீட்டுக்குள் நச் நச்சென்று அலுப்பு தட்டும் பல வேலைகளை ரோபோக்கள் அனாயாசமாக செய்ய ஆரம்பித்துவிட்டன. வாக்யும் கிளீன் செய்யும் ரோபோக்கள் பல்கிப்பெருகி விலையும் சல்லீசாக ஆகிவிட்டது. வீட்டைச்சுத்தம் செய்யும் ரோபோவின் விலை ஏழாயிரம் தொடங்கி முப்பதாயிரம் ரூபாய் வரை தானாம். அதாவது நம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு கொடுக்கும் சம்பளத்தை வைத்துக்கணக்கிட்டால் நான்கு முதல் பதினைந்து மாதங்களுக்குப்பின் ரோபோ உங்களுக்கு பீ.ரீ. சர்வீஸ் தான்!

    முக்கியமாக எல்.ஜியின் ஹோம்பாட்(Home Bot) என்னும் ரோபோ ஒரு டைம் டேபிளைத் தந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட டயத்துக்கு அதன் இடத்தில் இருந்து நகர்ந்து போய் சுத்தம் செய்யும் வேலைகளை முடித்து விட்டு சமத்தாக மறுபடி அதன் பவர் ஸ்டேஷனுக்குப்போய் சார்ஜ் செய்து கொள்ள ஆரம்பித்து விடுமாம். என்ன, கொஞ்சம் விலை அதிகம், அவ்வளவுதான்!

    வீடு என்னங்க வீடு, இந்த ரோபோக்களில் ஒன்றான ஐ ரோபோ நீச்சல் குளத்தையே சுத்தம் செய்யக்கூடியதாம்!

    எப்பி என்னும் ஆளுயர ரோபோ ஒரே சமயம் பன்னிரெண்டு துணிகளை இஸ்திரி போட்டுத்தந்துவிடுமாம். இன்னும் கொஞ்சம் முன்னேறிய ரோபோ லாண்ட்ரெட்டானது துணிகளை இஸ்திரி போடுவதோடு அழகாக மடித்தும் வைக்குமாம்.

    "அம்மா! தினம் சாதம் சாதம்னு போரடிக்குது! இன்னிக்கு ரோட்டி சப்ஜி பண்ணேன்!"

    அடுத்த வருடம் கல்யாணமாகிப்போக வேண்டிய பெண் கேட்கும்போது அம்மா அலுத்துக்கொள்ளவே வேண்டாம். ரோடிமாடிக் என்னும் ரோபோ சப்பாத்தி பூரியெல்லாம் சடுதியில் செய்து இறக்கி விடுமாம்.

    இந்த ரோடிமாடிக் ரோபோவை கண்டு பிடித்தது பிரனோடி நாகர்க்கர் இஸ்ரானி என்னும் பெண்ணும் ரிஷி இஸ்ரானி என்னும் அவர் கணவருமே! சிங்கப்பூரில் இந்த கண்டுபிடிப்பு புதுமைக்கான முதல் பரிசை வென்றிருக்கிறது.

    பதினைந்து சப்பாத்திக்கான மாவை உள்ளே போட்டுவிட்டால் வேணும் என்கிறபோது ஸ்விட்ச் ஆன் செய்து எத்தனை ரோடி வேண்டுமோ அத்தனை ரோடிக்களை செய்து கொள்ளலாம். ஒரு பக்கம் மாவு மறுபக்கம் ரோடி என்னும் மாஜிக்கை உண்டாக்கும் ரோபோ இந்த ரோடிமாடிக்! இப்போது கிட்டத்தட்ட 70,000 ரூபாய்க்கு விற்கும் இந்த ரோபோவின் விலை சில வருடங்களில் குறையும் என்றே எதிர்பார்க்கலாம்.

    இன்னொரு சுவாரஸ்ய ரோபோ நைட்ஸ்கோப் என்னும் பாதுகாப்பு ரோபோ. இது பரந்த கோணம் கொண்ட கேமராவையும் எதிரே ஏற்படும் சலனங்களைப்பகுத்தறியும் ஸ்கேனரும் கொண்ட ரோபோ. ரோந்து சுற்றியவாறு சந்தேகாபஸ்தமான நடமாட்டங்களை மொபைல் அல்லது ஈமெயில் மூலமாக அலர்ட் பண்ணிவிடும்.

    மேற்சொன்ன ரோபோக்கள் வீட்டுக்குள் இருந்து வேலை செய்பவை. வீட்டுக்கு வெளியேயும் வேலை செய்யும் ரோபோக்கள் பெருகிவிட்டன. மேற்கத்திய நாடுகளில் தனி வீட்டில் குடியிருப்போருக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவர்கள் வீட்டு வாசல் புல் வெளி. அந்த ஊர் சட்டப்படி அவரவர் வீட்டுப்புல் வெளிகளை தாமே அவ்வப்போது வெட்டி சமனப்படுத்தியாக வேண்டும். பெண்டாட்டிகள் கணவனை பயமுறுத்த இந்த புல் வெட்டும் வேலையைச்சொல்லிச்சொல்லியே பாடு படுத்துவார்கள் என்பது அந்த ஊர் ஆண்கள் பாதுகாப்புக்கழகங்களின் ஓலமாக இருந்து வருகிறது!

    இதில் பாதிக்கப்பட்டோ என்னவோ இந்த பாழாய்ப்போன புல் வெட்டுதலுக்கு ரோபோவைக்கண்டு பிடித்து விட்டார்கள். இப்போதெல்லாம் பல அமெரிக்க வீடுகளின் வாசலில் இந்த ரோபோக்கள் புல் பிடுங்கிக்கொண்டிருக்க வீட்டு ஆண் மகன் ராயசமாக நாற்காலியில் உட்கார்ந்து டீ உறிஞ்சிக்கொண்டிருப்பது சர்வ சாதாரணக்காட்சியாம்! முக்கியமாக நகராட்சிகளில் இந்த ரோபோக்களைப்பயன் படுத்தி பொது இடங்களில் புல் வெளிகளைச்சீராக வைத்திருப்பதைச்சுலபமாக்கிவிட்டார்கள்.

    லூஜ் என்னும் ரோபோ சாக்கடைகளைச்சுத்தம் செய்து விடுகிறதாம். தன் சென்சர்கள் மூலம் வழி தேடி சாக்கடைக்குள் தானே நுழைந்து மிக வேகமான துளைக்கும் கருவி மூலம் ஐவுக்குப்பைகளை சப்ஜாடாகச்சுத்தப்படுத்திவிடும். மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை ஒரு வழியாக முடிவுக்குக்கொண்டு வர இந்த ரோபோவை நிச்சயம் நம்பலாம் போல! மனிதனின் ஆத்மத்துணையாகக்கூட ரோபோக்கள் இருப்பதைக்காண்கிறோம். வகமானு என்னும் ஜப்பானிய ரோபோ நோயாளிகள் மற்றும் வீட்டோடு முடங்கிவிட்ட வயதானவர்களுக்கு கம்பானியனாக இருக்கும். நேரத்துக்கு அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்து பற்றி நினைவு ஊட்டுவதோடு அவர்களுக்கு எமர்ஜென்சி என்றால் டாக்டரைக்கூப்பிடும் வசதிகளும் கொண்டவை இந்த ரோபோக்கள்.

    டெலிபிரசென்ஸ் என்னும் தொலைதொடர்பு ரோபோக்கள் வீட்டோடு இருக்கும் குழந்தைகள் நோயாளிகளை வேறோர் இடத்தில் இருந்து பெரியவர்களோ அல்லது டாக்டர்களோ தொலை-கண்காணிக்க உதவுபவை. இவற்றில் பொருத்தப்பட்ட காமரா, ஸ்கேனர், ஒலி பெருக்கி, ஸ்பீக்கர் போன்ற சாதனங்களின் மூலம் இவை ஒரு மனிதனைப்போலவே தொலை தொடர்பில் காட்சிகள் காண்பித்து, உரையாடி கண்காணிப்பில் பொறுப்பாற்றிவிடும்.

    இதெல்லாம் விடுங்க! நம்ம சென்னையிலேயே ஒரு ஓட்டலில் சர்வர்கள் இல்லாமல் ரோபோக்கள் வைத்தே சர்வீஸ் செய்கிறார்கள். டேபிளில் போய் உட்கார்ந்தவுடன் அங்கே இருக்கும் ஐ பாட் போன்ற வஸ்துவில் உங்கள் ஆர்டரைப்பதிவிட்டுவிட்டால், இருபதே நிமிடங்களில் நெற்றியில் விளக்கடித்துக்கொண்டு ஆளுயர ரோபொ நடந்து வந்து தன் கையில் உள்ள டிரேவில் இருக்கும் தட்டுக்களை உங்களிடம் நீட்டிவிடும்.

    "எடுத்துக்கப்பா! எவ்வளவு நாழி இங்கவே நிக்க வைப்பே!" என்றெல்லாம் அலுத்துக்கொள்ளாது என்று நம்புவோம்.

    ரோபோக்களினால் வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிடும், அவை ஆபத்தானவை. ஒரு சமூகத்தின் மனித உறவுகளைக் குறைத்து விடுவதால் பல அவலங்கள் நேரக்கூடும் என்பதெல்லாம் ரோபோக்களுக்கு எதிரான வாதங்கள்.

    உண்மைதான்! ஆனால் ரோபோக்களினால் அதன் தொழில் நுட்ப நுணுக்கங்களால் வாழ்வின் தரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

    "ஏங்க! இன்னிக்கு பாத்திரம் தேய்க்க ராணி வரவே இல்லை! கடங்காரி! கொஞ்ச உங்க வீட்டு ரோபோவை அனுப்பறீங்களா?அரை மணியில திருப்பி அனுபிச்சுருவேன்!"

    பார்க்கத்தான் போகிறோம்!

    • ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இந்த அடைப்பினால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
    • ஒரு நாளைக்கு ஒருவருக்கு, 2500 மில்லிகிராம் அளவே சோடியம் சத்து பரிந்துரைக்கப்படுகிறது.

    'உங்கள் இதயத்தை அறிந்து கொள்ளவும்'!

    இதுவே இந்த ஆண்டின் உலக இருதய தினத்தின் கருப்பொருள். நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதே இந்த இருதயமும், இருதய துடிப்பும் தான். அதனைப்பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவே உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த மிக முக்கியமான நமது உடல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் எவை? ஏன் பலர் இதய சம்பந்தப்பட்ட நோய்களாலும், திடீர் மாரடைப்பாலும் இறக்க நேரிடுகிறது? மருத்துவ ரீதியாக இதற்கு பற்பல காரணங்கள், காரணிகள் கூறப்படுகிறது. இவற்றில், நமது வாழ்க்கை முறைகளும், உணவு முறைகளும், மாற்றக்கூடிய காரணிகளைச்சார்ந்தது.

    நமது மூதாதையர்களில் சிலர் நூறு வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பதை ஊடகங்களின் மூலம் அறிந்திருக்கிறோம், எப்படி அது சாத்தியம்? அவர்களது ஆயுள் ரேகை பலமானதாக இருந்தாலும், ஆரோக்கிய ரேகை பலமானதாக இருந்ததால்தானே ஊடகங்கள்மூலம் வெளிச்சத்திற்கு வருகின்றனர்!! இத்தகைய கேள்விகள் எழ, உலகளவில், நூறு ஆண்டுகள், அதற்கு மேல் வாழ்பவர்களைக்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பல உண்மைகள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் அவர்களின் உணவு முறையும் வாழ்க்கைமுறையும். அவற்றைப்பற்றி, இக்கட்டுரையின் பிற்பகுதியில் படிக்கலாம்.

    இதயம் எனும் உறுப்பின் செயல்திறன் எவ்வெவற்றால் பாதிக்கப்படுகிறது? ஆய்வுகள் எவற்றை வரிசைப்படுத்துகின்றன? அவற்றில் சிலவற்றைக்காண்போம். அதிக உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டிலில்லாத சர்க்கரை நோய், மண அழுத்தம், சரியான தூக்கமின்மை, மது அருந்துதல், புகை பழக்கம், துரித வாழ்க்கை முறை, துரித உணவு முறைகள்

    என பட்டியல் நீளுகிறது. மேற்கூறியவற்றை கூர்ந்து நோக்கினால், இவையெல்லாம், நாம் நினைத்தால், முயன்றால், மாற்றக்கூடிய காரணிகள்தானே!. 24 மணிநேரம், 365 நாட்கள், நமக்காக ஓயாமல் உழைக்கும் நம் இருதயத்திற்காக, நாம் இக்காரணிகளை சரிசெய்துக்கொண்டால் நாமும் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வோர் பட்டியலில் இடம்பெறலாமே!!

    அதிக உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டிலில்லாத சர்க்கரை நோய் இவை நமது உடலிலுள்ள செல்களில், அதன்செயல்பாடுகளில் பல மாறுதல்களையும், இன்னல்களையும் ஏற்படுத்துகிறது. உடல் பருமன் என்றால், உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு திசுக்களில் சேர்ந்திருப்பது. இது, கணையம் சுரக்கும் இன்சுலின் ஹார்மோனின் செயல்திறனைக்குறைக்கிறது. இதனால், உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் செல்களுக்குள் எடுத்துச் செல்லப்படாமல் ரத்தத்தில் தேங்கி சர்க்கரை அளவை உயர்த்துகிறது. அது மட்டுமல்லாமல், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைட் எனப்படும் கொழுப்பின் அளவுகளை அதிகரித்து நல்ல கொலஸ்டிரால் [எச்.டி.எல்.] அளவைக்குறைக்கிறது. இவற்றால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இந்த அடைப்பினால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    இத்தனை மாற்றங்களின் வெளிப்பாடாக உடலின் செல்களில் அழற்சி, எண்டொதீலியல் திசு பாதிப்பு, ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஆகிய விளைவுகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்து இருதய நோய்கள், மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றது. மேலும், திசுக்களில் உருவாகும் இவ்வகை வேதியியல் மாற்றங்களின் காரணமாக தூக்கமின்மை, மனஅழுத்தம் என பல்வேறு உடல், மன ரீதியான உபாதைகள் உருவாகின்றன. இவற்றை தவிர்க்கவோ அல்லது மாற்றவோ முடியுமா?

    "இந்தியா என்ன சாப்பிடுகிறது?" சமீபத்தில் ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட இந்த ஆராய்ச்சி தொகுப்பு என்ன சொல்கிறது தெரியுமா? இந்தி யாவில், தினசரி தானியங்கள் உட்கொள்ளும் அளவு தேவைக்கு மிக அதிகமாக உள்ளது, அதேநேரத்தில், பருப்புகள், காய்கறி, பழ வகைகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், கொட்டை வகைகள் என உடலுக்கு பல நன்மைகள் தரும் உணவுகளின் அளவு, தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, குறைவாகவே உள்ளது. இந்த அளவுகள் மாநிலத்துக்கு மாநிலம், நகற்புறம், கிராமப்புறங்கள் என வேறுப்பட்டாலும், பெறும்பாலும் இந்த உணவுமுறைகள் பொதுவாகக்காணப்படுகிறது. மேலும் குளிர்பானங்கள், சிப்ஸ், இனிப்பு வகைகள், துரித உணவுகள், பிஸ்கட்டுகள், சாக்லெட்டுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் கலோரிச் சத்துக்கள் பத்து விழுக்காடுக்கும் மேல் அமைந்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி இடுப்புச்சுற்றளவில் அதிக கொழுப்பு அதாவது, உடல் பருமன் ஐம்பத்தி மூன்று விழுக்காடு நகற்புறங்கள் வாழ் இந்தியற்களிடையேயும், பதினெட்டு விழுக்காடு கிராமப்புறங்களில் வாழ் இந்தியர்களிடையேயும் இருப்பதாக தெரிவிக்கின்றது.

    இவற்றின் பொருள் என்ன? நமது உணவில் இருந்து கிடைக்கும் கலோரிச்சத்து, சரிவிகிதமாக இல்லாமல், பெரும்பாலும் மாவுச்சத்து நிறைந்த தானியவகைகளில் இருந்து மட்டுமே பெறப்படுவதும், புரதம், வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து போன்ற பல தாது உப்புக்கள் சரியான அளவில் உட்கொள்ளாமல் இருப்பதையுமே குறிக்கிறது. அதனால் என்ன?

    இன்றைய காலக்கட்டத்தில் உடல் உழைப்பு ஆண், பெண் இருபாலாருக்கும் குறைந்துவிட்டது என்பது நாம் அறிந்ததே. அதனுடன் கலோரி அளவு, அது தரும் உணவுகள் சரியானதாக அமையாவிட்டால், உடல் எடை அதிகரித்து, இடுப்பு சுற்றளவு அதிகரித்து, தேவையற்ற கொழுப்பு அதிகரித்து, முன் விவரித்த திசு அழற்சி மற்றும் அதைச்சார்ந்த ஆரோக்கியமில்லா மாற்றங்களை உடல் அனுபவிக்க வேண்டியதாகிறது.

    உணவில் இருந்து கிடைக்கும் புரதம், ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யவும், தசைகள் வலுப்பெறவும், கொழுப்பு சேராமலும் உதவுகிறது. வைட்டமின் நிறைந்த உணவுகள் திசு அழற்சி ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படாமல் காக்கிறது. உணவில் இருந்து பெறப்படும் சுண்ணாம்பு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருதய தசைக்களுக்கு வலு அளித்து, சீராக இயங்க உதவுகிறது. இவை அனைத்திற்கு மேலாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்த்து, தேவையற்ற கொழுப்பினை மலம் மூலம் வெளியேற்றுகிறது.

    எனவே, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, டயட்டரி டைவர்சிடி எனப்படும். இயற்கை நமக்கு அளித்திருக்கும் தானியங்கள், பருப்பு வகைகள், கீரை, காய், பழ வகைகள், பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள், மிதமான அளவில் கொழுப்பு வகை உணவுகள் என சரிவிகித்தில் உண்டால் இருதயம் சீராக துடித்துக்கொண்டிருக்கும்.

    இவற்றுடன் சேர்ந்து உடற்பயிற்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வாரத்திற்கு 150 மணிநேர உடற்பயிற்சி பரிந்துரைக் கப்படுகிறது. ஒரே நாளில் இது சாத்தியமா?!. சிறு துளி பெருவெள்ளமல்லவா? ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடங்கள் என ஐந்து நாட்கள் ஒரு வாரத்தில் கடைபிடித்தால் அது சாத்தியமானது அல்லவா?

    நமது முன்னோர்கள் வாரத்தில் சில நாட்கள் சில மணிநேரங்கள் உபவாசத்தைக் கடைபிடித்தார்கள் அல்லவா? நினைவில் இருக்கிறதா? அவ்வாறான உபவாசங்களை மேற்கொள்வது நல்லது என்று இன்று பல ஆராய்ச்சிகள் சொல்கிறது. உபவாசத்தில் பல முறைகள், அதாவது திரவ உணவுகள் மட்டுமே ஓரிரு நாட்கள் சாப்பிடுவது, காலை, இரவு சாப்பிடாமல் மதியம் மட்டுமே சாப்பிடுவது, ஆறு அல்லது எட்டு மணிநேரம் சாப்பிடாமல் இருப்பது, சூரியன் மறைவதற்குமுன் சாப்பிட்டுவிட்டு, பின் வேறேதும் சாப்பிடாமல் இருப்பது, என, இன்னும் பல வகைகள் இருந்தாலும், அவரவர் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும், வேலை சூழலுக்கும் தகுந்தவாறு, சத்துணவு மருத்துவவியல் நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று, கடைப்பிடித்தாலும் பலனுன்டு.

    முடிவாக, "ஹார்ட் ஹெல்தி டயட்" அதாவது, இருதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகள் என நம் நாட்டு, பன்னாட்டு ஆராய்ச்சிகள் குறிப்ப்டும் பட்டியல் இதோ உங்களுக்காக:

    முழு தானியங்கள்- அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை போன்ற சிறுதானியங்கள், பார்லி புரதம் நிறைந்த பருப்புவகைகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பீன்ஸ், ஒமெகா-3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் {மத்தி, கெளுத்தி, கிழங்கான், சங்கரா), முட்டை, சிக்கன், தோல்நீக்கிய இறைச்சி அனைத்து வகை கீரைகள், காய்கறிகள் அனைத்து வகை பழ வகைகள், பாதாம், பிஸ்தா, அக்ரூட், எள்ளு, சூரியகாந்தி வித்துக்கள், பூசனிவித்துக்கள், வேர்க்கடலை, பிலாக்ஸ் சீட்ஸ் கொழுப்பு குறைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட பால், பால் சார்ந்த பொருட்கள் (தயிர், பாலாடைக்கட்டி, யோகர்ட்)

    இவ்வகை உணவுகள் இருதய நோய் உள்ளவர்களுக்கும், இருதய நோய் வராமல் தடுக்க விரும்புபவர்களுக்கும் பொருந்தும். எனினும் ஏற்கனவே நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப, உடல்நிலைக்கேற்ப, உட்கொள்ளும் மருந்துகளுக்கேற்ப, சத்துணவு மருத்துவவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும். அவர்களின் ஆலோசனையின் பேரில், பயமில்லாமல் உணவு உட்கொள்ளலாம்.

    இருதய ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பதால் தவிர்க்க/ மிகக்கட்டுப்படுத்த வேண்டிய உணவுகள்

    டிரான்ஸ் பேட் எனப்படும் கெட்ட கொழுப்புகள் நிறைந்த பேக்கரி உணவுகள், மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயில் பொரித்து, வறுத்தெடுக்கப்படும் உணவுகள்

    அதீத பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், இனிப்பு அதிகமிருக்கும் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உப்பு அதிகமாக இருக்கும் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள். ஒரு நாளைக்கு ஒருவருக்கு, 2500 மில்லிகிராம் அளவே சோடியம் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு டீஸ்பூன் அளவே ஆகும். நமது உணவில் பெரும்பாலான சோடியம் சத்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றில் இருந்தே பெறப்படுகிறது. எனவே, இவற்றை வாங்கும்முன், உங்கள் இருதயத்தின் மீது கைவைத்து சிந்தித்து பின் வாங்க யோசிக்கலாம்.

    ஆக, மேற்கூறியுள்ள இரு பட்டியல்களிலும், நூறு வருடங்களுக்கு முன் எவை கிடைத்தது, எவைப் பற்றித் தெரியாமலிருந்தது என்பதை உணரமுடிந்திருக்கும்.

    இறுதியாக, 100 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களின்மேலான ஆராய்ச்சி கண்டுபிடித்ததும், முதலில் பட்டியலிட்டிருக்கும் சேர்க்கவேண்டிய உணவுகளே என்பதை விளக்கவும் வேண்டுமோ?

    • அம்பாளாக கர்ப்பரட்சாம் பிகை வீற்றிருக்கிறாள். அவளுக்கு அந்த பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.
    • தமிழகத்தில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளை நீக்கும் ஒரே தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக திகழ்பவள் கர்ப்பரட்சாம்பிகை. ஒரு பெண் கருத்தரிக்கவும், கருத்தரித்தப் பிறகு அந்த கருவை நன்கு பாதுகாத்து சுகப்பிரசவம் ஏற்படும் வரை கண்ணுக்குள் வைத்து காக்கும் கடவுளாக கர்ப்பரட்சாம்பிகை கருதப்படுகிறாள்.

    கும்பகோணத்துக்கு மிக அருகில் திருக்கருகாவூர் என்ற ஊரில் கர்ப்பரட்சாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் கை கூடுவதற்கும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கும், சுகப்பிரசவம் அடையவும் கர்ப்பரட்சாம்பிகையை வேண்டிக் கொண்டால் போதும் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    திருக்கருகாவூர் தலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தலமாகும். இங்கே எழுந்தருளி இருக்கும் சிவலிங்கம் தானே எழுந்த சுயம்புலிங்கம் ஆகும். இந்த லிங்கத்தை கிரேதாயுகத்தில் தேவர்களும், திரேதா யுகத்தில் முனிவர்களும் வழிபட்டதாக குறிப்புகள் உள்ளன.

    அம்பாளாக கர்ப்பரட்சாம் பிகை வீற்றிருக்கிறாள். அவளுக்கு அந்த பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.

    ஆதிகாலத்தில் இந்த தலத்தில் நித்துருவர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி வேதிகை. இல்லற வாழ்வின் பயனாக வேதிகை கர்ப்பம் அடைந்தாள். கருவை சுமந்த அவள் அந்த குழந்தையை சுகப்பிரசவத்துடன் பெற்று வளர்க்க வேண்டும் என்று மனம் முழுக்க ஆசையுடன் இருந்தாள்.

    ஆனால் அவளுக்கு திடீரென்று ஒரு சோகம் ஏற்பட்டது. அவளது கணவர் நித்துருவர் ஒரு சமயம் அவளை ஆசிரமத்தில் தனியே விட்டுவிட்டு வருணனை பார்க்க புறப்பட்டு சென்று விட்டார். தனிமையில் இருந்த வேதிகை சற்று உடல் சோர்வாக இருந்ததால் அயர்ந்து தூங்கிவிட்டாள்.

    அப்போது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் அந்த ஆசிரமத்துக்கு வந்தார். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும் பசி போக்க உணவு தருமாறும் வாசலில் நின்று கேட்டார். ஆனால் அவரது குரல் வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேதிகைக்கு கேட்கவில்லை.

    இதனால் அந்த முனிவர் சற்று உரக்க குரல் கொடுத்து உணவு கேட்டார். ஆனால் உடலில் இருந்த சோர்வு காரணமாக வேதிகையால் உடனே எழுந்து வர இயலவில்லை. இது முனிவர் ஊர்த்துவபாதருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் முனிவர்கள் கோபம் வந்தால் உடனே ஏதாவது சாபம் கொடுத்து விடுவார்கள்.

    ஊர்த்துவபாதர் முனிவரும் வேதிகைக்கு சாபமிட்டார். ராசயட்சு என்ற வகை நோயால் பாதிக்கப்பட்டு வருந்துவாயாக என்று முனிவர் சாபமிட்டார். அந்த சாபத்தால் வேதிகையின் வயிற்றில் இருந்த கருவில் பாதிப்பு ஏற்பட்டது. கரு கலைந்து விடுமோ என்ற நிலை உருவானது.

    உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு வேதிகை மனம் கலங்கினாள். இந்த நிலையில் வருணனை பார்க்க சென்றிருந்த நித்துருவர் திரும்பி வந்தார். முனிவர் கொடுத்த சாபத்தை அறிந்து கவலை அடைந்தார். நித்துருவரும், வேதிகையும் இந்த தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் மனமுருக வேண்டினார்கள். வேதிகையின் மேல் இரக்கம் கொண்ட அம்பாள் அங்கு தோன்றினாள். வேதிகை வயிற்றில் பாதிப்புடன் இருந்த கருவை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாள்.

    அந்த கருவை மீண்டும் முன்பு போல நல்ல ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வந்தாள். இதன் காரணமாக வேதிகையின் வயிற்றில் வளர்ந்த கரு காப்பாற்றப்பட்டது. திட்டமிட்டபடி அவள் வயிற்றில் குழந்தையை சுமந்து சுகப்பிரசவத்துடன் சிசுவை பெற்றெடுத்தாள்.

    கருவை பாதுகாத்து சுகப்பிரசவத்துக்கு உதவி செய்ததால் அந்த அம்பாளை கர்ப்பரட்சாம்பிகை என்று அழைத்தனர். தன்னை போன்று கரு உண்டாகும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அம்பாளை வேதிகை கேட்டுக் கொண்டாள். அதை ஏற்று அந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகை வீற்றிருந்து தற்போதும் அருள்பாலித்து வருகிறாள்.

    இப்போதும் கரு உண்டாகவும், கருவை பாதுகாக்கவும், சுக பிரசவம் ஆகவும் வேண்டுதல்களுடன் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் திருக்கருகாவூருக்கு வருவதை காண முடிகிறது. கருவை பாதுகாக்க நினைக்கும் பெண்கள் இந்த தலத்தில் குறிப்பிட்ட பூஜையையும், வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

    கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக இந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கு எண்ணையை வைத்து மந்திரித்து கொடுப்பார்கள். அந்த எண்ணையை பிரசவவலி ஏற்பட்டதும் வயிற்றில் தடவி வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    குறிப்பிட்ட மாதத்துக்கு முன்னதாகவே வயிற்றில் வலி ஏற்பட்டால் அது அசாதாரண பிரசவ வலியாக கருதப்படும். அந்த சமயத்தில் இந்த தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை வயிற்றில் தடவி கொண்டால் அந்த வலி நீங்கி விடும்.

    சில பெண்கள் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியத்தை பெற முடியாமல் இருப்பார்கள். அவர்கள் கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை பயன்படுத்தினால் உரிய பலன் கிடைக்கும்.

    அதாவது இந்த தலத்தில் தரும் நெய்யை கணவன்-மனைவி இருவரும் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சாப்பிட்டு வர வேண்டும். அப்படி சாப்பிட்டால் நிச்சயம் கருத்தரிக்கும்.

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த தலத்தில் உள்ள தங்க தொட்டில் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பரட்சாம்பிகை அருளால் சுகப்பிரசவம் ஆனவர்களும் தங்கள் குழந்தையை தங்க தொட்டிலில் போட்டு தாலாட்டுவது முக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகிறது. இந்த பிரார்த்தனைக்கு தனி கட்டணம் உண்டு.

    இந்த தலத்தில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் மட்டுமே காலை 8 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் செய்ய விரும்பும் தம்பதிகள் ஆலயத்தில் முன்பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    குழந்தை வரம் வேண்டி செல்லும் பெண்கள் கர்ப்பரட்சாம்பிகை முன்பு நின்று மனம் உருக வழிபட வேண்டும். கர்ப்பரட்சாம்பிகை இடது கையை இடுப்பில் வைத்த நிலையில் அழகாக காட்சி தரும் வடிவ அமைப்பில் இருக்கிறாள். சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் அருள்கி றாள். அவளிடம் எந்த அளவுக்கு மனம் உருக வேண்டுகிறோமோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

    கர்ப்பரட்சாம்பிகை அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பிறகு மீண்டும் அங்கு சென்று அவசியம் வழிபட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு ஏற்ப அம்பாளின் சன்னதியில் தங்கள் குழந்தையின் எடைக்கு எடை கல்கண்டு, வாழைப்பழம், சர்க்கரை போன்றவற்றை துலாபாரம் கொடுக்கலாம். சிலர் நாணயங்களையும் எடைக்கு எடை துலாபாரம் கொடுப்பது உண்டு.

    மேலும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழி படலாம். புடவை சாத்தி வழிபடலாம். இந்த தலத்து ஈசன் சுயம்புவாக தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புணுகு சட்டம் சாத்தி வழிபடலாம். கும்பகோணத்துக்கு தென் மேற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தில் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என்று எண்ணற்றவர்கள் வந்து வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.

    மூலவர் முல்லைவன நாதருக்கும், அம்பாள் கர்ப்பரட்சாம்பிகைக்கும் இடையே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இந்த மூன்று சன்னதிகளையும் அடுத்தடுத்து தரிசிப்பது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. சோமாஸ்கந்த அமைப்பில் உள்ள இந்த சன்னதிகளை தரிசிப்பவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பது என்பது ஐதீகமாக உள்ளது. இந்த மூன்று சன்னதிகளையும் ஒரே ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.

    இந்த தலத்தில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை உஷக்கால பூஜையும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை காலசந்தி பூஜையும், 12.30 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும். மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை சாயரட்ச பூஜையும், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும்.

    தமிழகத்தில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளை நீக்கும் ஒரே தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. இதனால் இந்த ஊருக்கு கர்ப்பபுரி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தில் வழிபடும் பெண்களுக்கு கருச்சிதைவோ, குறை பிரசவமுமோ ஏற்படுவது இல்லை.

    அடுத்து என்ன? நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். அதற்கு செல்ல வேண்டிய தலம் வைத்தீஸ்வரன் கோவில். அடுத்த வாரம் வைத்தீஸ்வரன் தலம் பற்றி காணலாம்.

    ×