என் மலர்
நீங்கள் தேடியது "summer rain"
- வட்டக்காடுவில் உள்ள ஒரு தோட்டத்தில் சூறாவளிக்காற்றில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது.
- வாழைகள் சேதம் அடைந்து இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது.
அதன்பின்னர் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 8.30 மணி வரை சுமார் அரைமணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புதுக்காடு, கிழங்கு குழி, வட்டக்காடு காந்திநகர், விளாங்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்திருந்த மொந்தன், ரொபஸ்டா ரகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.
மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் தோட்டங்களில் மூங்கில் கம்புகள் மீது படரவிடப்பட்டிருந்த 5 ஏக்கர் பரப்பளவிலான வெற்றிலை கொடிகளும் கீழே விழுந்து நாசமானது.
வட்டக்காடுவில் உள்ள ஒரு தோட்டத்தில் சூறாவளிக்காற்றில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. மேலும் தென்னை மரம் முறிந்து விழுந்தது. புதுக்காடுவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அந்த பகுதி இருளில் மூழ்கியது.
இதேபோல் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டுப்பாளையம், குருமந்தூர், காரப்பாடி, ஒட்டர் கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்து இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் மழை பெய்தது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அதிகாலையில் பலத்த மழை கொட்டியது.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக அதிகளவு மழை பெய்தது.
திருவள்ளூர்:
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிகழ்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அதிகாலையில் பலத்த மழை கொட்டியது. இன்று 4-வது நாளாக அதிகாலை கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக அதிகளவு மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பூண்டி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை பகுதியில் அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 33 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-8
பள்ளிப்பட்டு-28
ஆர்.கே.பேட்டை-19
சோழவரம்-5
பொன்னேரி-4
செங்குன்றம்-18
ஜமீன்கொரட்டூர்-3
பூந்தமல்லி-2
திருவாலங்காடு-16
பூண்டி-31
தாமரைப்பாக்கம்-7
திருவள்ளூர்-10
ஊத்துக்கோட்டை-24
ஆவடி-23.
- நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23, 24, 25ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.
- சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதூா், மாலைமேடு, கா்ணாவூா், குப்புகல்மேடு, கூத்தம்பாக்கம், மங்கலம் கீழ்வீராணம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பெய்த கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமானது.
சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.
இந்நிலையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது.
- பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது.
பொன்னேரி:
தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ்அடுக்குகளில் கிழக்குதிசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்ந சில நாட்களாக விட்டு விட்டு கோடை மழை கொட்டி வருகிறது. பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் பச்சை பயிர் சாகுபடி செய்திருந்த சுமார் 300 ஏக்கர் மழை நீர் தேங்கி வெளியேற முடியாமல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும், மீஞ்சூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார், வேளாண்மை துணை அலுவலர் விநாயகம் மற்றும் அதிகாரிகள் சின்னக்காவனம், மெதூர், விடதண்டலம், பெரும்பேடு, ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கி உள்ள தண்ணீரை நேரில் சென்றுஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.62 அடியாக உள்ளது.
- அணைக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம் அடித்துக்கொண்டிருக்க அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சிற்றாறு-1 அணை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.62 அடியாக உள்ளது. அணைக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33.75 அடியாக உள்ளது. அணைக்கு 111 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 8 அடியாகவும், சிற்றாறு-2 நீர்மட்டம் 8.10 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 14.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட் டம் 2.30 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.50 அடியாக சரிந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிபாறை 17.2, பெருஞ்சாணி 6.6, சிற்றாறு 1-20, சிற்றார்2-7.4, சுருளோடு 2.6, பாலமோர் 5.2, கன்னிமார் 2.2, முக்கடல் 6.3 புத்தன் அணை 6.
- தொடர் மழையால் சாலையில் செல்லும் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை மெதுவாகவே இயக்கி சென்றனர்.
- சில வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் இதமான வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் திரண்டு, இருளாக காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது.
மாலையில் சாரல் மழையாக தொடங்கி இரவில் பலத்த மழையாக மாறியது. இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழையால் குன்னூர் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் சாலையில் செல்லும் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை மெதுவாகவே இயக்கி சென்றனர். சில வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.
விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால், குன்னூர் அய்யப்பன் கோவில் பகுதி, இன்கோசர்வ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடின.
குன்னூர் பஸ் நிலையம் முன்பு பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்ட கழிவு பொருட்கள் தேங்கி அந்த பகுதியே சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.
இதேபோல் குன்னூர் புறநகர் பகுதிகளான பர்லியார், வண்டிச்சோலை, ஒட்டுப்பட்டரை உள்பட கிராம பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
திடீரென கொட்டி தீர்த்த மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் அதிக அளவில் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள், கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. ஆனால் இரவு 10 மணி முதல் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கி பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரட்டூர் நாயக்கன்காடு, மொடச்சூர், வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் 2 மணி நேரம் இடி உடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
இந்த நிலையில் இன்று காலையும் வானம் மேகத்துடன் காணப்பட்டது. கோபிசெட்டிபாளையம் பகுதியில் மட்டும் 9 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் இந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரி பள்ளம் அணை பகுதியில் 10 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் நேற்று 2-வது முறையாக குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. குண்டேரிபள்ளம் அணையின் முழு கொள்ளளவு 41.75 அடியாகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி குண்டேரிபள்ளம் அணைக்கு வினாடிக்கு 91 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 91 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் மாவட்டத்தில் தாளவாடி, அம்மாபேட்டை, பவானி, வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம், கொடிவேரி அணை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
தொட்டகாஜனூர், பாசூர், திகினாரை, அருள்வாடி,போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு திடீர் மழையால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
குண்டேரி பள்ளம்-100, கோபிசெட்டி பாளையம்-90.2, கொடிவேரி அணை-15.2, தாளவாடி-12.4, அம்மாபேட்டை-12.2, பவானி-6.4, வரட்டு பள்ளம்-4.8, சத்திய மங்கலம்-3.
- சுசீந்திரம், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், சாமிதோப்பு, தெங்கம்புதூர், புத்தளம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது.
சுசீந்திரம், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், சாமிதோப்பு, தெங்கம்புதூர், புத்தளம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மயிலாடியில் அதிகபட்சமாக 9.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 5 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மழை பெய்ததையடுத்து வெப்பம் தணிந்து காணப்பட்டது. இன்று காலையில் வழக்கம்போல் வெயில் அடித்தது.
- சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.
- சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
திருவொற்றியூர்:
சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது.
தற்போது வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.
வெயிலை சமாளிப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பாக விற்பனையும் அதிகரித்து வருகிறது. தர்பூசணி பழங்களும் குவிந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டப்பட்டு சென்னையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையின் பல பகுதிகளிலும் மதிய வேளையில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.
மணலி, விச்சூர், ஆரம்பாக்கம் ஆகிய இடங்களில் விளையும் நுங்குகளை சென்னைக்கு கொண்டு வந்து அன்னக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது நுங்கு வரத்தொடங்கியுள்ள நிலையில் நுங்கின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உள்ளது.
8 நுங்கின் விலை ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் நுங்கை வாங்கி செல்கிறார்கள்.
- கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.
- முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது.
கூடலூர்:
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெரியகுளம், ஆண்டிபட்டி, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையால் பெரியகுளம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோடை வெயிலால் கும்பக்கரை, சுருளி அருவி, சின்னச்சுருளி அருவி உள்பட பல்வேறு அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் உற்சாகமடைந்தனர். இதே போல் ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் பெய்த கனமழையால் சின்னச்சுருளியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 204 கன அடி நீர் வரத்தொடங்கியது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 53.94 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.70 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 58.64 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 29, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அணை 17.6, வைகை அணை 8.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 60, பெரியகுளம் 28, அரண்மனைப்புதூர் 1 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது.
- குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்பட்டனர். இந்த நிலையில் வளி மண்டலம் மாற்றம் காரணமாக குமரி, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாகவே காணப்பட்டது. நகர் பகுதியை விட புறநகர் பகுதியில் தான் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
சிற்றாறு-2 பகுதியில் 41.4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பூதப்பாண்டி, அடையாமடையில் 19.2, சுருளகோடு பகுதியில் 15.4, திற்பரப்பில் 10.5, பேச்சிப்பாறையில் 9.2, குழித்துறையில் 8, தக்கலையில் 7.4. மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.