என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surgery"

    • மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
    • விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    கேரளாவில் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடிய சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த மார்ச் 25 ஆம் தேதி கேரளாவின் காஞ்சங்காடு உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள், 46 வயதுடைய ஒருவரின் பிறப்புறுப்புகளில் சிக்கிய இரும்பு வாஷரை (iron washer) அகற்ற போராடியுள்ளனர். ஆனால் அவரின் நிலை மோசமடைந்தால் மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

    தீயணைப்பு வீரர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, ரிங் கட்டரைப் பயன்படுத்தி வாஷரை பாதிப்பு இல்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சங்காடு தீயணைப்புத்துறை அதிகாரி பி.வி. பவித்ரன்,

    "இது ஒரு சவாலான, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையாக இருந்தது. விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    இது மிகவும் பயமுறுத்தும் காட்சியாக இருந்தது. இரும்புத் வாஷர் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தியிருந்தது, இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை" என்றார்.

    கடந்த மூன்று வாரமாக பிறப்புறுப்பில் சிக்கிய இரும்பு வாசருடன் அந்த நபர் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி இருந்துள்ளது.

    வாசர் எப்படி பிறப்புறுப்பில் சிக்கியது என்பது குறித்து கேட்டபோது, தான் குடிபோதையில் இருந்தபோது யாரோ ஒருவர் அதை தன் மீது மாட்டியாக தெரிவித்துள்ளார். தற்போது வாசர் நீக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
    • பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது

    உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே கிருஷ்ண புரத்தைச் சேர்ந்தவர் சிவனா பிள்ளை. இவர் கீழக்கரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39).

    இவர் 8 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    இதையடுத்து காளீஸ்வரி கீழக்கரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன், எலும்பு சிகிச்சை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இவரை பரிசோதனை செய்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காளீஸ்வரிக்கு செயற்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிரகாஷ் தலைமையில் கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் மருத்துவர் உமா சங்கரி, செவிலியர் ஆனந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

    அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளீஸ்வரி கூறுகையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அரசுமருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டனர்.

    இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயற்கை மாற்று எலும்பு அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும்.
    • குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை ரதம் .

    திருப்பூர் : 

    மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்ட குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரதம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நகர்வலம் வரும். இதுகுறித்த விளம்பர கையேடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் விளக்க கையேடு, முகாம் நடைபெறும் தேதிகள் அடங்கிய கைபிரதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இருவார விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (குடும்பநலம்) கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும்.
    • அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும், ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும் என அரசு டாக்டர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர், மருத்துவக் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு:- அறுவை சிகிச்சைக்கு நோயாளி தகுதியானவரா என்பதை உறுதி செய்த பிறகே அது தொடர்பான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு 200க்கும் குறைவாகவும், ரத்த அழுத்தம் குறைந்தபட்சம் 90. அதிகபட்சம், 150க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன், சிகிச்சையின் தன்மை உள்ளிட்ட பிற விபரங்களை நோயாளியிடம் அல்லது அவர்களது உறவினர் ஒருவரிடம் தெளிவாக எடுத்து கூறி, ஒப்புதல் பெற வேண்டும்.

    அறுவை சிகிச்சை அரங்கு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒன்றுக்கு இருமுறை வழிகாட்டுதல்களை சரிபார்த்து அதனடிப்படையில் சிகிச்சைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் அடைந்ததையடுத்து, அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.அவை குறித்து அரசு டாக்டர்கள், அறுவைசிகிச்சை பிரிவில் பணியாற்றுவோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
    • மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அரசு தலைமை மருத்துவஅலுவலர் டாக்டர் சேபானந்தம் மேற்பார்வையில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, திட்டக்குடி அடுத்த கிழச்செருவாய்ள கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்(வயது58), இவர் பைக்கிலிருந்து தானகவே தவறி விழுந்து வலது தோள்பட்டை எலும்பு 5 பாகமாக உடைந்ததை கணினி உதவியுடன் இயங்கும் ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

    திட்டக்குடி அரசு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆனந்த், தினேஷ், கார்த்திக், மயக்கமருந்து நிபுணர் டாக்டர் கிருத்திகா, அறுவை அரங்கு செவிலியர்கள் மகேஸ்வரி, மாலா, லட்சுமி, மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    • சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
    • குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    காஞ்சிபுரம்:

    கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

    பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.

    வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.

    அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.

    அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.

    இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

    இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.

    அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.

    இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.

    தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    • தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
    • வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தருவதாக மருத்துவ குழுவி–னர் தெரிவித்தனர்

    கரூர் :

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகு–திகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொது–மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நெல்லை–யில் இருந்து ஒரு கால்நடை மருத்துவக்குழுவினர் புக–ழூர் நகராட்சிக்கு வந்த–னர். அவர்கள் அங்கு சுற்றித் திரிந்த 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். இந்த பணிகளை புகழூர் நகராட்சித்தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையாளர் கனி–ராஜ், துப்புரவு ஆய்வா–ளர் ரவீந்தி–ரன் மற்றும் பணியா–ளர்கள் பார்வை–யிட்டனர். தினமும் 30 நாய்கள் வீதம் பிடிப்பதாகவும், சுமார் 500 நாய்களைப் பிடித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தருவதாக மருத்துவ குழுவி–னர் தெரிவித்தனர்.


    • ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதுகுதண்டு அறுவை சிகிச்சை நடந்தது.
    • தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 29). இவர் கடந்த 7-ந்தேதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் .

    அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டுள்ளதை அறிந்த டாக்டர்கள் முதன் முறையாக ராஜ பாளையம் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தனர். இதை வெற்றி கரமாக செய்துமுடித்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

    தற்போது மாரியப்பன் நலமாக உள்ளார். அறுவை சிகிச்சை நடைபெற்றதை அடுத்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    இதில் தலைமை மருத்துவர் மாரியப்பன், மருத்துவர் சுரேஷ், திருமுருகன், சேத்தூர்சேர்மன் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன், கருப்பழகு, தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் நடந்தது
    • டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்.இவரது வீட்டில் வளர்த்து வந்த 2 மாத கன்று குட்டி பிறவி குறைபாடு காரணமாக தொப்புள் கொடி பகுதியில் ஒரு பெரிய கட்டியுடன் பிறந்தது.

    2 மாத கன்று குட்டி

    இதனால் பிறந்ததிலிருந்தே சாணம் ஆசன வாய் வழியாக வெளிவராமல் தொப்புள்கொடி வழியாக வெளியேறியது. சரியாக உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது.

    அதனை பரிசோதித்துப் பார்த்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் வயிற்றுப் பகுதியை திறந்து பார்த்தால் தான் என்ன பிரச்சனை என்று அறிய முடியும் என்று தெரிவித்தார். இதனையடுத்து வேலூர் அரசு கால்நடை பெரு மருத்துவமனையில் டாக்டர்கள் ரவிசங்கர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர்.

    அறுவை சிகிச்சை7

    2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் பகுதி சீராக இல்லை என்பதும் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையாமல் இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குடல் பகுதியையும் ஒன்றாக இணைத்தனர்.

    வெளியில் இருந்த சுமார் ஒரு கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கன்று குட்டி நல்ல நிலையிலும், ஆசனவாய் வழியாக சாணத்தை வெளியேற்றியது.

    இந்த அரிய வகை பிறவி குறைபாடு நோயினை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் கன்று குட்டிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை விவசாயின் முகத்தில் புன்னகை தென்பட்டதோடு அவரது வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது.

    இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.

    • ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும்.
    • பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றி வந்தது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 4 குட்டிகளை ஈன்ற அந்த நாய் இறந்துபோனது. இதனால் பரிதாபப் பட்ட அப்பகுதி மக்கள் பிறந்து சில நாட்களே ஆன 4 நாய்க்குட்டிகளுக்கும் உணவு கொடுத்து பராமரித்தனர். ஆனால் சில நாட்களிலேயே அதில் மேலும் 3 நாய்குட்டிகள் இறந்து போனது.

    இதைத்தொடர்ந்து மீதம் இருந்த ஒரு நாய்க்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஸ்நூசி என்று செல்லமாக பெயர் வைத்து வளர்த்தனர். அந்த நாயும் அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் பாசமாக பழகியது. இதனால் அப்பகுதியில் ஸ்நூசி நாய் பிரபலமாக வலம் வந்தது.

    இதற்கிடையே அந்த நாயை வளர்த்து வந்த குடும்பத்தினர் வீடு மாற்றலாகி வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் செல்லும் புதிய வீட்டில் விலங்குகளை வளர்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த குடும்பத்தினர் கனத்த இதயத்துடன் ஸ்நூசியை அப்பகுதியில் வசிக்கும் ஷமீம் என்பவரிடம் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் அவர் வெளியில் செல்லும் போது நாயை வீட்டின் 2-வது மாடியில் விட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் வழக்கம் போல் ஷமீம் வேலைக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டின் இரும்பு கேட்டில் உள்ள கம்பியில் குத்திய நிலையில் நாய் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நாயை மீட்க முயன்றபோது முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அருகில் கட்டிட பணியில் இருந்த தொழிலாளர்களை வரவழைத்து இரும்பு கம்பியை துண்டாக அறுத்து நாயை மீட்டனர். பின்னர் அதனை அடையாறில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நாய் நலமாக உள்ளது. வீட்டின் 2-வது மாடியில் இருந்து நாய் கீழே விழுந்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ஷமீம் கூறும்போது, 'ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும். அதன் தாயார் இறந்த போதும், அதனுடன் பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தற்போது இரும்பி கம்பியில் விழுந்தும் உயிர் பிழைத்து இருக்கிறது. வெளியில் செல்லும் நேரத்தில் நாயை பராமரிப்பது கடினமாக உள்ளது. இதனை விருப்பப்பட்ட வர்கள் வாங்கி பராமரிக்கலாம்' என்றார்.

    இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு கூறும்போது, 'காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் குத்தி இருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து நாய் நலமாக உள்ளது.

    எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கம்பி குத்தியதில் அதன் உள்உறுப்புகள் ஏதுவும் பாதிக்கப்பட வில்லை என்பது உறுதியானது' என்றார்.

    • மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது.
    • மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு மனைவி பவுன் (வயது 50) கூலி தொழிலாளி, இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 27- ந் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது. 

    அதன்படி கடந்த 2- ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் பவுனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கழிவறை செல்வதற்காக எழுந்து சென்றவர் மயக்கம் வருவதாக கூறி மீண்டும் வந்து படுக்கையில் படுத்துள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவரது உறவினர்கள் பவுன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது உடற்கூறு ஆய்வு முடிவு தெரிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறி உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை ஏற்று உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து செல்வராசு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக வந்த பெண் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×