என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி"

    • சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன.
    • தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், கன்னெரு கொய்யா பாடுவை சேர்ந்தவர் பல்லையம்மா (வயது 86). வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

    நேற்று அவரது இறுதி சடங்குக்கான பணிகள் நடந்தன. இதையடுத்து உறவினர்கள் பல்லைய்யமாவின் பிணத்தை பாடையில் வைத்து தோளில் இடுகாட்டிற்கு சுமந்து சென்றனர்.

    அப்போது சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் நடனமாடியபடி பட்டாசுகளை வெடித்தனர்.

    சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. சவ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பறந்து சென்று தேனி கூட்டில் விழுந்தது.

    இதனால் கூடு கலைந்து தேனீக்கள் பறந்து வந்து சவ ஊர்வலத்தில் சென்றவர்களை விரட்டி, விரட்டி கொட்டின.

    இதனால் வலி தாங்காத அவர்கள் பிணத்தை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மூதாட்டியின் பிணம் நீண்ட நேரம் நடுரோட்டிலேயே கிடந்தது.

    தேனீக்கள் சென்ற பிறகு மாலை மூதாட்டியின் உறவினர்கள் வந்து அவரது பிணத்தை எடுத்துச் சென்று இடுகாட்டில் இறுதி சடங்கு செய்தனர்.

    தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேர் பத்ராசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சின்னக்கரையை கடந்து செல்லும்போது அவர் மயக்கமடைந்தார். சக பெண் பயணிகள் இது குறித்து கண்டக்டர் சக்திவேலிடம் தெரிவித்தனர்.

    அவர் ஆம்புலன்சை தொடர்பு கொண்டதில், தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். பஸ்சில் உள்ள பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கிளை மேலாளர் உத்தரவிட்டார்.

    அதன்படி பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர். பயணித்த சில பெண்கள் மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச்செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து துரிதகதியில் செயல்பட்ட டிரைவர் ராசு கண்ணன், அரசு பஸ்சை ஆம்புலன்சாக கருதி வேகமாக இயக்கினார். அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    • நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது. கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 30-தேதி வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

    இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது.இந்த நிலையில் வசுமதியிடம் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை

    இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள

    பெற்றோர் வீட்டில் கடந்த

    30-தேதி வீட்டில்தூ க்குப்போட்டு தற்கொ லைக்கு முயன்றார்.

    சேலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாப மாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத் ,மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை , தற்ெகாலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகினர்.

    உடலை வாங்க மறுப்பு

    இதனிடையே அவர்கள் 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே வசுமதியின் உடலை வாங்குவோம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உடலை வாங்க மறுத்து கடந்த 9-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார் நேற்று மல்ல சமுத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வசுமதியின் கணவர் வினோத்தை அதிரடியாக கைது ெசய்தனர். அவரிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இருப்பி

    னும் இன்று 4-வது நாளாக

    உடலை வாங்க மறுத்து வசுமதியில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

    னர். மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோ தரி காவியா ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.இதனால் 4-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது . 

    • மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.
    • படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன்.

    இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷீலா (வயது 52) மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.

    இதில் படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
    • பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

    நாகர்கோவில்:

    சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    • தட்டி கேட்டவருக்கு அடி-உதை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வெள்ளை யம்பலம் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. சம்பவ தினம் இரவு இங்கு ஐரேனி புரம் எட்வின் ஜேக்கப் (வயது 32) என்பவர் பணி யில் இருந்துள்ளார்.

    அப்போது முஞ்சிறை பகுதி ராஜு மகன் ரீகன், அவரது சகோதரர் ரெஜின், நெடுமானி வயலங்கரை பாபு மகன் மனோஜ் உள்பட 4 பேர் உடல் நிலை பாதித்த ரீகனின் தாயாரை மருந்து வாங்க அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது அங்குள்ள நர்சு களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும் இதை தட்டிக் கேட்ட எட்வின் ஜேக்கப்பை ரீகன், ரெஜின், பாபு உள்ளிட்ட 4 பேரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் அதே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    இது போன்று ரெஜின் அளித்துள்ள புகாரில் உடல் நிலை பாதித்த எனது தாயாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள பணியாளர் எட்வின் ஜேக்கப் மற்றும் மேலும் 3 பேர் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.

    இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
    • உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் கரையங்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது41).

    விவசாயி. இவருக்கு தொடர்ச்சியாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த ஆண்டும் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை எப்படி கட்டுவது?

    என்று விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருடைய மனைவி தேவசேனா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).

    இவர் கடந்த 1-ம் தேதி இரவு திருமருகல் முடிக்கொண்டான் ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் தலையில் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பரபரப்பு
    • அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22).

    இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார். அந்த சமயத்தில் மாணவியிடம் திடீரென காதலை அபிஷேக் வெளிப்படுத்தி உள்ளார்.

    ஆனால் மாணவி அதனை ஏற்கவில்லை. எனினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் மாணவியிடம் நைசாக பேசிய அபிஷேக், அவரை நண்பரின் வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். இதனை குடித்த சற்று நேரத்தில் மாணவி மயங்கிய தாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி மாணவியை அபிஷேக் பலாத்காரம் செய்து உள்ளார்.

    அந்த காட்சியை அவர் வீடியோவாகவும் எடுத்து உள்ளார். மயக்கம் தெளிந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலை தளத்தில் பரப்பி விடுவேன் என அபிஷேக், மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதனால் நடந்த விஷ யத்தை மாணவி வெளியே தெரிவிக்க வில்லை. கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் அபிஷேக் தொடர்ந்து மாணவியை மிரட்டி வந்து உள்ளார். எனவே வேறு வழியின்றி மாணவி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இதற்கிடையே படிப்பை முடித்த அபிஷேக், மாணவி புகார் கொடுத்ததை அறிந்த தும் துபாய் நாட்டுக்கு சென்று தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    மேலும் இந்த விவகா ரம் தெரிந்து தான், அபிஷேக்கை, அவருடைய தந்தை வில்சன்குமார் வெளிநாட்டுக்கு அனுப்பி யது போலீசாரின் விசார ணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீதும், அபிஷேக்கின் செய லுக்கு உடந்தையாக இருந்த நண்பர் அனீஸ் மீதும் போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அவரை பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அபிஷேக் கூறி னார்.

    இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கொலை வழக்காக மாற்றம்
    • ஆரல்வாய் மொழி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே சீதப்பால் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ செபஸ்தியான் (வயது 50).

    இவர் சீதப்பால் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது கோழிபண்ணையில் இருந்த தார்ப்பாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது.இது தொடர்பாக சீதப்பால் மேற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணிய பிள்ளை (50) அவரது மகன் சங்கர் (30) ஆகியோருக்கும் ஆன்றோ செபஸ்டியானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 17-ந்தேதி தந்தை-மகன் இருவரும் ஆன்றோ செபஸ்தியானிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் ஆன்றோ செபஸ்தியானை சரமாரியாக தாக்கினார்கள். காயமடைந்த ஆன்றோ செபஸ்தியானை சங்கர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆன்றோ செபஸ்தியன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சங்கர், சிவசுப்பிரமணிய பிள்ளை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.சங்கரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆன்றோ செபஸ்தியான் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான ஆன்றோ செபஸ்தியான் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.
    • டெல்டா பகுதியில் 2-வது முறையாக இந்த விருதை பெறும் ஆஸ்பத்திரி.

    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்தியா சுகாதார வழங்குநர்கள் சங்கம் சார்பில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.

    இந்தியா முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன.

    அந்தந்த மருத்தவ மனைகள் ஆற்றிய சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் சிறந்த செவிலியர் சேவைக்கான விருது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஏ.எச்.பி.ஐ சார்பில் இந்த விருது வழங்கப்பட்டன.

    டெல்டா பகுதியில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறும் முதல் மற்றும் ஒரே மருத்துவமனை மீனாட்சி மருத்துவமனை என்பது குறிப்பிடதக்கது.

    இந்த விருதை மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், செவிலியர் பிரிவின் கண்காணிப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் மருத்துவமனையின் சார்பில் பெற்று கொண்டனர்.

    ×