என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகாம்"

    • முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.
    • அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்களை பற்றி விளக்கி பேசினர்.

    சாத்தான்குளம்:

    முதலூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், தாசில்தார் தங்கையா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லெனின், உதவி வேளான்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், முதலுர் கனரா வங்கி மேலாளர் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விளக்கி பேசினார்கள்.

    மேலும் அனைத்து துறை அலுவலர்கள் மனுக்கள் பெற்றுக்கொண்டனர். பொது மக்கள் திராளாக கலந்து கொண்டனர். மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசாணமுத்து, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோண த்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணி முதல் நடை பெற உள்ளது.

    மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்று தற்போது வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் தொழிற்பழகுனர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.7,700 மற்றும் 2 வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8,050 தொழிற்பழகுனர் பயிற்சி காலத்தில் உதவி தொகையாக வழங்கப்படும்.

    தொழிற்பழகுனர் பயிற்சி யினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற் பழகுனர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுனர் சான்று வழங்கப்படும். இச்சான்று பெற்றவர்கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலைவாய்ப்புகளில், ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரை விட முன்னுரிமை பெற்ற வராக கருதப்படுவர்.

    தொழிற்பழகுனர் சட்டத்தின் படி குறைந்த பட்சம் 30 பணியாளர் களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற் பழகுனர் இணைய தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தொழிற்பழகுனர் திட்டத்தினை செயல்படுத்து வது கட்டாயம் என்ப தால், அரசின் சட்ட நடவடிக்கை களை தவிர்க்கும் வகை யில் குறைந்த பட்ச பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்பழகுனர் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

    குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் தங்கள் முழு விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் திறன் வாய்ந்த மனிதவளம் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், ஒரு தொழிற்பழகுனருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.1500 வீதம் அனைத்து தொழில் பழகுன ர்களுக்கான ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.

    கூடுதல் விவரங்களுக்கு கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 356 பசுக்கள், 800 ஆடுகளுக்கு சிகிச்சை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த பூண்டி கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை ஊராட்சி தலைவர் சுந்தராம்பாள் சாம்பசிவம் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் அரியலூர் சொக்கலிங்கம் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜா, கார்த்திகேயன் , கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, இளங்கோவன் , செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 356 பசுக்கள், 620 வெள்ளாடுகள், 180 செம்மறியாடுகள், 250 கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    200 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் 13 மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.

    நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • பெரம்பலூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணிகளுக்கு கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ டிப்ளமோ, பட்டப்படிப்பு, டி.பார்ம், லைபரியன் முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
    • மாவட்ட தொடர்பு அலுவலர் ஆய்வு செய்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உ ள்ள கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்ற சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத் தில் நடைபெற்றது.ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பெயரில் மாணவர்கள் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு முகாமை மாவட்ட தொடர்பு அலுவலர் எம். சீனிவாசன் ஆய்வு செயது பேசினார்.

    • நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
    • ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்து விவசாயி–களுக்கு விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள், மானிய விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியின் இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் சுள்ளிபாளையம் கிராம உழவர் ஆர்வலர் குழுக்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.

    • காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    திருச்சி :

    முசிறி அருகே காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முசிறி கோட்ட உதவி இயக்குனர் சையது முஸ்தபா அனைவரையும் வரவேற்றார்.

    மண்டல இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா திட்ட விளக்க உரையாற்றினார். முகாமில் தீவன அபிவிருத்தி மற்றும் கால்நடை மேலாண்மை குறித்து கண்காட்சி நடத்தப்பட்டது.

    சிறந்த கிடேரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு மேலாண்மை விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உலர் தீவன வைக்கோல் கட்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 550 கால்நடைகளுக்கு தடுப்பூசி , குடற்புழு நீக்கல் , செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சினை பரிசோதனை, மற்றும் தாது உப்பு கலவை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கால்நடை உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் பாரிவேல், சுகுமார், கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திக், குமரேசன், கோபி, முருகேசன், விவேகானந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

    • உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் ஹரிதா, வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் திலிப்குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் உழவன் முருகன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை வாழப்பாடி உதவி இயக்குநர் மருத்துவர் முருகன் வரவேற்றார்.

    துக்கியாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் முகாமை தொடங்கி வைத்தார். மாரியம்மன்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, கறவைமாடுகள், எருது மற்றும் ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, கால்நடை மருத்துவர்கள் செல்வராஜ், கோவிந்தன், கால்நடை பாராமரிப்பு உதவியாளர் மூர்த்தி, சுதாகர்

    ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட இலவச சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முகாமில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாபு, சுரேஷ், செந்தில், முருகன், பார்த்திபன், தமிழ், பாஸ்கர், வசந்தா, ரஞ்சிதா, ராஜாத்தி, அருணா சந்திரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது
    • வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    வெள்ளகோவில்:

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவில், எல்.கே.சி.நகரில் நடைபெற்றது.

    வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். டி.ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் ஆர்.மோகன் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த இரவுநேர மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 9 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர். நேரு , மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.
    • பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

    இந்த மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டார். இந்த முகாமில், பொது மருத்துவம், நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய், தோல், இருதயம், காது, மூக்கு, தொண்டை, கண் நோய், மகளிர், ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், இசிஜி பரிசோதனை, சளி பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள், உயர் சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரமேஷ்குமார், தொற்றாநோய் அலுவலர் டாக்டர்.திருலோகன், டாக்டர்கள் சுசித்ரா, செல்வி, விமல்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தமிழ்வாணன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ராமச்சந்திரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ×