என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள்"

    • சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வேல்கேர் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
    • விழாவில் 80 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் வருவாய்த்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வேல்கேர் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், டாக்டர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கரவடிவு, தலையாரி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன் ஆகியோர் சுமார் 80 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்
    • உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி நடக்கிறது

    நாகர்கோவில் :

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி பசுமை மாவட்டம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் காடு வளர்ப்பை அதிகரிக்கவும், கடலோர கிராமங்களில் கடலரிப்புக்கு எதிரான இயற்கை அரணை உருவாக்கவும், மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரை கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நாளை (4-ந்தேதி) பிற்பகல் 3 மணி அளவில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப்பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    அதனைத்தொடர்ந்து அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளான கோவளம், மணக்குடி, பள்ளந்துறை, முட்டம், மிடாலம், இனயம் புத்தன்துறை, பைங்குளம், தூத்தூர், கணபதிபுரம், புத்தளம், குளச்சல், கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

    இம்முகாம்களில் அனைத்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் தகவல்
    • மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்

    வேலூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு மைதானத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வன பாதுகாப்பு அலுவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவிவன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை அவர்கள் நட்டு வைத்தனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு வனத்துறையும் இணைந்து சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரம் மற்றும் பாலாற்று கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.

    இதேபோல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக இலக்கை எட்ட முடியவில்லை.

    இந்தாண்டும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடப்படுகிறது வேலூரை வெயிலூர் என்று அழைக்கின்றனர்.

    இந்த நிலை மாற வேண்டும்.சூரிய ஒளி நேரடியாக நிலத்தில் படுவதால் தான் அதிக தாக்கம் உள்ளது எனவே மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்.

    ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
    • பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகளை நட்டார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

    முதற்கட்டமாக பேரூராட்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ராஜேஸ்வரி, சித்ரா, ஜெயலட்சுமி, சாவித்திரி, பேரூராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதிகள் முழுவதும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நகர் பகுதிகள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என செயல் அலுவலர் வீரபாண்டியன் தெரிவித்தார். 

    • நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.ஈஸ்வரன், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தில் 1,800 வேம்பு மரக்கன்றுகளும், 1,800 புங்கன் மரக்கன்றுகளும், 2,000 வசந்த ராணி மரக்கன்றுகளும், 1,700 பாதணி மரக்கன்றுகளும், 1,700 நாவல் மரக்கன்றுகளும், 1,500 நீர்மருது மரக்கன்றுகளும், 1,500 அத்தி மரக்கன்றுகளும் என மொத்தம் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.

    மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, உதவி கோட்டப்பொறியாளர் தமிழரசி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன், உதவி பொறியாளர்கள் சுதா, சையது ரசீம் ஆகியோர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
    • இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாழப்பாடி உட்கோட் டத்தில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் துரை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் காரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மனோசூரியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலைச்செல்வன், பொன்னுமலை, மாரியப்பன் மற்றும் உதவிக்கோட்டப் பொறியாளர் கவிதா, உதவிப்பொறியாளர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் 200 மரக்கன்றுகளும், அயோத்தியாப்பட்டிணம் – பேளூர்- கிளாக்காடு சாலை பகுதியில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டன. 2 மாதத்திற்குள் 1,600 மரக்கன்றுகளும் நடப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.
    • கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை -உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நாகதேவம்பாளையம் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வரவேற்று வேளாண்துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இடு பொருட்களின் மானிய விவரங்கள் உள்ளிட்ட நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கமளித்ததுடன் உலக சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உழவர் ஆலோசனைக் குழுத் தலைவர் ரவீந்திரன் தலைமையேற்றார். ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு , வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பதில் வேளாண் துறையின் பங்குகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்வணிகம், வேளாண் விற்பனைத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை,

    கோபி மைராடா வேளாண் அறிவியல் நிலைய ஆராய்சியாளர் மற்றும் சத்தி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு அவரவர் துறை சார்ந்த அரசின் மானிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியதுடன் கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

    மேலும் கால்நடைத் துறையின் சார்பாக கால்நடைகளுக்கான குடற்புழுநீக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இவ்விழாவின் முடிவில் வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

    சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இலவசவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன். நாகதேவன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கடுக்காம்பாளையம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் நடப்பட்டது.

    இந்நிகழ்சியில் நாகதேவம்பாளையத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜனரஜ்ஜனி, வான்மதி, குமார், பெரியசாமி மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட போலீசார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை மைதானங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பலன் தரும் 600 மரக்கன்றுகள் உள்பட 2400 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    • முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.
    • சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

    மங்கலம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி-கிடாதுறை பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தலைமையிலும் தி.மு.க.வை சேர்ந்த கிடாதுறை கே.பி.சீனிவாசன் ஏற்பாட்டிலும் 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.பின்னர் முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடுவேலம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.17,62,000 மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டிடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    பின்னர் சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ., ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.மேலும் கட்சியின் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல்குமார், மாவட்ட மகளிர்அணி துணைச்செயலாளர் நந்தினி, பல்லடம் ஒன்றியகுழு தலைவர் தேன்மொழி, மாவட்ட பிரதிநிதியும், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான செந்தில்தியாகராஜன், பூமலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பிரியங்கா, பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், அவைத்தலைவர் பரமசிவம், பூமலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தங்கராஜ் , தி.மு.க. சரண்சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூர் பகுதியில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர் உத்தண்டி, ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், உதவி கோட்ட பொறியாளர் பி.கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், கண்காணிப்பாளர் செந்தில், சாலை ஆய்வாளர்கள் கவிதா, சுமத்ரா, சுஜாதா, மரியசூசை,ஒன்றிய அவைத்தலைவர் குணசேகரன், கிளைக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

    • அறந்தாங்கியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    அறந்தாங்கி,

    தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கியில் சாலையோரத்தில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக விக்னேஷ்வரபுரம், ஆவுடையார்கோவில் ஆகிய பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து, வட்டார தலைவர் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் அசாருதீன், கிருபாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் மோகன், சுந்தரராஜ், உதவிப் பொறியாளர்கள் சுபாஷினி, அருண்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • தொண்டி அருகே சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    தொண்டி அருகே வட்டாணம் சமுதாயக் கூடத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் தலை மையில் கொண்டா டப்பட்டது. வட்டாணம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தாயி முன்னிலை வகித்தார்.

    ஆசிரியர் குந்தப்பன் வரவேற்று பேசினார். பஞ்சாயத்து தலைவர்கள் ராமநாதன் மற்றும் மோகன் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    ×