என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர்"

    • சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
    • சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது

    தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.

    சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

     

    • வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கி இறந்தார்.
    • மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையை சேர்ந்த நடராஜன் மனைவி சாரதாம்பாள் (வயது 55). இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி இறந்தார்.

    இந்த நிலையில் தமிழக அரசின் மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகையை திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் சாரதாம்பாள் மகன் பாரதிராஜாவிடம் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபரகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயசீலன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சிமன்றத் தலைவர் ரேவதி முருகானந்தம், ஆகியோர் உடனிருந்தனர்.

    • பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
    • கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;

    நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    • சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.

    கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர்.
    • மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபா் முதல் நவம்பா் வரை வடகிழக்குப் பருவ மழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.

    இது மலைப் பிரதேசம் என்பதால் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுவதால் பெரும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுதவிர நீலகிரியின் குறுகிய மலைச்சாலை வழியாக தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட காலதாமதம் ஆகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து 200 பேருக்கு பேரிடர்மீட்பு பயிற்சி தருவது என்று முடிவு செய்தனர். இதற்காக பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பேரிடர்மீட்பு தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவா்.

    இதற்காக அவா்களுக்கு தனி அடையாள அட்டை, பயிற்சி சான்றிதழ், பேரிடா் கால மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.

    • நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
    • போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    நாமக்கல்:

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மேலாண்மை மீட்புக்கு ழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    போலீசாருக்கு பயிற்சி

    நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    3 நாட்கள்

    தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியை அதிரடி கமாண்டோ படை சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழங்கி வருகிறார். இப்பயிற்சியில் 25 பெண் போலீசார் உள்பட 60 போலீசார் பங்கேற்றனர்.

    • ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
    • ரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குழித்துறை, கோதையாறு பகுதிகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தொடர் மழையால் மேற்கு மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் சானல்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்புகளையும் வெள் ளம் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பொது மக்களை பாதுகாத்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து போலீஸ் துறையை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தனர்.

    நாகர்கோவிலுக்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினரை குமரி மாவட்டத்தில் ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் முன்னேற்பாடு பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    • தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள்.

    கோவை:

    மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. 1 அரை லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, 1 டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3 ஆயிரம் மெழுகுவர்த்தி, 13 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் லாரி மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை கொண்ட தனி விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை சென்றதும் அங்கு மண்டலவாரியாக பிரித்து சரியான முறையில் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நாளை (ஜூன் 1) மாலை வரை விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தியானத்திற்கு இடையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.

    அதில், "அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரெமல் புயல் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. எனது எண்ணமும், பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டோருடனேயே உள்ளது. அங்குள்ள கள சூழல் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததோடு, அங்குள்ள கள நிலவம் குறித்தும் கேட்டறிந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்," என குறிப்பிட்டுள்ளார்.


    மற்றொரு பதிவில், "2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன.

    கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

    இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது.

    இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்க மத்திய அரசு மறுத்து வந்தது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

    இருப்பினும், பேரிடராக அறிவித்த மத்திய அரசு கேரள மாநிலத்திற்கான சிறப்பு நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தாளவாடி, ஜூன்.16-

    ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×