என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள்"

    • விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.
    • மருத்துவ உதவிகள் வழங்க உச்சநீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    பஞ்சாப் மாநிலத்தில விவசாயிகளின் தலைவர் ஜெக்ஜித சிங் தல்லேவால், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோட்டீஸ்வர் சிங் தலைமையிலான பெஞ்ச் முன்பு, பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் புர்மிந்தர் சிங், பஞ்சாப் அரசு கனௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், தல்லேவால் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர். மேலும், அரசியல் நோக்கம் இல்லாத ஒரு உண்மையான விவசாயிகளின் தலைவர் எனத் தெரிவித்தனர்.

    அத்துடன் "விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஐவரி டவர் மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்றனர்.

    மேலும், "களத்தில் நிலவும் நிலைமை குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    தல்லேவாலுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜபி ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் கைவிட்டது.

    கடந்த 19-ந்தேதி மத்திய அரசு குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சர்வான் சிங் பந்தேர், தல்லேவால் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தலைவர்களை மொகாலியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஷம்பு மற்றும் கனௌரி போராட்டப் பகுதியில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.

    டெல்லியை நோக்கி விவசாயிகள் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பேரணி செல்ல முடிவு செய்தனர். ஆனால் பாதுகாப்புப்படையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
    • ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.

    மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.

    இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.

    இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.

    ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.

    தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். 

    • மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
    • போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    திருச்சி:

    விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அந்த மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.

    இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.

    அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன்உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
    • விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.

    பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய நீர் இறைப்பானை மாநில த்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2021-22-ம் ஆண்டில் வட்டியில்லா விவசாய கடன் அட்டை பயிர்க்கடன் வழங்கியதில் முதல் 3 இடங்கள் பெற்ற சங்க செயலாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் காட்டுப்பன்றிகளை விரட்டும் நுகர்மருந்துகளை விவசாய பயனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பனை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தோட்டக்க லைத் துறையின் மூலம் பனைவிதைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இதில் கலெக்டர் பேசுகையில், நடப்பு நிதியாண்டின் ரபி பருவத்திற்கு விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்க ளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 84 ஆயிரத்து 399 விவசாயிகளையும் கள ஆய்வு செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் போது மான அளவில் இருப்பில் உள்ளது.

    விவசாய கடன் அட்டைகள் பெற விண்ணப்பித்த 25 ஆயிரத்து 290 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்ப ட்டுள்ளது. வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் விவசாயிகளிடமிருந்து வேளாண்மை தொட ர்பான பொதுவான கோரிக்கைகளுக்கு கருத்துக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.
    • திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.

    திருப்பூர்:

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். சுல்தான்பேட்டை, எம்.செட்டிப்பாளையம், அக்ரஹாரபுத்தூர், வேட்டுவபாளையம், மங்கலம் போன்ற பகுதிகளுக்கு மங்கலத்தில் ஒரு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படும் நிலை உள்ளது. கட்டிட தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடவு பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குறுவை சாகுபடி முடிந்து, சம்பா நெல் சாகுபடி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் தாளடி நெல் சாகுபடியினையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    தற்போது பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் நடவுப் பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.

    மழை பெய்ய தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு பருவமழை தீவிரமடைவதற்குள் நடவு பணிகளை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள சம்பா நெல் வயல்களில் நடவுப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

    கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி நடவுப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    இதுபோல் தாளடி நெல் விவசாயத்திற்கு வயல்களை தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வயல்வெளிகளில் தண்ணீர் பாசனம் நடைபெற்று வருகிறது.

    இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் வருவதோடு பருவமழையும் சரிவர பெய்யும் என்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு நெல் சாகுபடியினை, இயற்கையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நெல் சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் இருப்பில் வைத்து வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    • விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    திருப்பூர்:

    விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவது, விவசாய நகைக்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் பயன்பெறும் போதும் பல்வேறு வகை நில உடைமை ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள நில உடைமை ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கின்றனர்.

    அனைத்து வகை ஆவணங்கள் இருந்தாலும், வருவாய்த்துறையில் உரிமைச்சான்று பெற்று கொடுக்க வேண்டும் என வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் வற்புறுத்துகின்றன. இதனால் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் நில உரிமைச்சான்று பெற்று வழங்கிவந்தனர்.

    இந்நிலையில் வருவாய்த்துறையை சேர்ந்த யாரும், நில உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உரிமை சான்று வழங்கப்படுகிறது. ஆனால் யாருக்கும் உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மின் வாரிய சேவைகளுக்கு உரிமைச்சான்று கட்டாயம்.

    பயிர்க்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் கடன் பெறுவது என கூட்டுறவு சங்கமும், வங்கிகளும் உரிமைச்சான்று கட்டாயம் வேண்டும் என்கின்றனர். இதனால் நடப்பு ஆண்டு பயிர்க்கடன் பெற முடியாத சூழல் உள்ளது.உரிமைச்சான்று வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டால், எந்த அரசுத்துறையும் உரிமைச்சான்று கேட்கவும் கூடாதென அறிவுறுத்த வேண்டும்.

    கூட்டுப்பட்டா, பாகசாசனம் செய்யாத நிலங்களுக்கு, அரசு சேவைகளை பெற, உரிமைச்சான்று கட்டாயம் தேவைப்படும். எனவே, விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் கூறுகையில், உரிமைச்சான்று வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிமைச்சான்று தொடர்பான உத்தரவுகள் மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார்.

    • நாகையநல்லூர் ஏரியில் நீர்க்கசிவை விவசாயிகள் உடனே சரிசெய்தனர்
    • தியாகராஜன் எம்.எல்.ஏ. உத்தரவின்பேரில் நடவடிக்கை

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் மிகப்பெரிய ஏரியான நாகையநல்லூர் ஏரி சுமார் 452 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலமாக நஞ்சை ஆயிரம் ஏக்கருக்கும் மேலாகவும், புஞ்சை 4000 ஏக்கருக்கு மேலாகவும் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த ஏரியின் சுற்றளவில் உள்ள 20 கி.மீ. அளவுக்கு மேல் நிலத்தடி நீர் மேலோங்கி 800-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீர் சேர்ந்து வறட்சி காலத்தில் விவசாயத்துக்கு பயன்படும்.

    இந்த பெரிய ஏரிக்கு தற்பொழுது கொல்லிமலையில் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகாமி தற்பொழுது நிரம்பும் தருவாயில் உள்ளது. இதில் இரண்டு மதவுகள் உள்ளன. அவை நாகையநல்லூர் குமுளிகரையிலும், பெரிய நாச்சிப்பட்டியிலும் உள்ளது, நாகையநல்லூர் குமுளிக்கரையில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் அதை உடன் சரி செய்ய முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளமான காடுவெட்டி ந.தியாகராஜன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தீவிர பணி மேற்கொண்டு எந்திரங்கள் மற்றும் மோட்டார்களை கொண்டு குமுளிக்கரையில் நீர்க்கசிவை தடுத்து வருகின்றார்கள். மேலும் ஏரி நிரம்பினால் ஏரி நீர் குடியிருப்பு பகுதிகளிலோ அல்லது விவசாய பகுதிகளை பாதிக்காத வண்ணம் நீரை காவேரியில் கலக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பணியில் தி.மு.க. தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள், நாகையநல்லூர் பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.
    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் தெற்கு அவிநாசிபாளையம் செங்காட்டுபாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் இல்லாததால் விவசாயிகள் உள்பட பலா் சிரமத்தை சந்தித்து வருகின்றனா் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.

    இதற்கிடையே, போராட்டத்துக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, விவசாயிகளுடன் வட்டாட்சியா் கோவிந்தராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதில், பி.ஏ.பி. வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு, விவசாயிகளுக்கு நீா் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.

    • நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவை பயன்படுத்துவோம்.
    • இயற்கை முறையில் சாகுபடி செய்வதை பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இயங்கிவரும் வேளாண்மை பாரம்பரியம் மற்றும் புதிய நெல் ரகங்களை ஊக்கப்படுத்ததுல் பயிற்சி பந்தநல்லூரில் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலெட்சுமி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் நளினி முன்னிலை வகித்தார்.

    கதிராமங்கலம் முன்னோடு விவசாயி ஸ்ரீராம் 75 பாரம்பரியம் புதிய நெல் ரகங்களையும் அதன் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ குணங்களையும் பற்றி மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    40 பாரம்பரியம் புதிய நெல் ரகங்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, மரதுண்டி, நிச்சிலிசம்பா, வாலஞ்சம்பா, குள்ளங்கார், பவானி, நீலஞ்சம்பர், நாட்டுப்பொன்னி சிறுமிளகு சிவப்புகவுனி, சம்பா, காளாண் நமக்1, செம்பாலை மாபாபிளாக், தூரியமல்லி, பால்குடை வாழை, திருப்பதி சாரை கருவாச்சி, மருமுமூங்கி, ஆணைகொம்பன், ஆத்தூர் கிச்க்ஷ, நவரா, ஆற்பாடு சிச்சடி, முற்றின சன்னம், கண்பாலை, ரத்த சாளி செந்நெல், சொர்ணாமகூரி, துளசி வாசனை, குதிரைவாலி சம்பா, சேலம்சென்னா, குடவாழை, கருப்பகவுனி, கருடன்சம்பா, கூப்பாலை. ஆகியவை ஆகும்.மேலும் பாரம்பரியம் நெல் ஜெயராமனின் பாதுகாப்பு மையத்திலிருந்து அசோகள இயற்கை முறையில் சாகுபடி செய்வதை பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

    வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் மற்றம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும் பாரம்பரியம் நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவை பயன்படுத்துவோம் என்பதை எடுத்துரைத்தார்.

    இறுதியாக அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றி கூறினர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் செய்தார்.

    • ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா நடவு செய்த விவசாயிகள்.
    • பயிர்களை கணக்கீட்டு செய்து நிவாரண தொகை வழங்க வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு மற்றும் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நாற்றுகள் கடந்து சில தினங்களாக மூழ்கிய நிலையில் நாற்றுகள் உள்ளன.

    ரெகுநாதகாவேரி வாய்க்கால் பல வருஷமாக தூர்வாராத காரணத்தால் மழைநீர் வெளியேற வழியின்றி வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்திருந்த சம்பா விவசாயிகள், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலையில் உள்ளதால் சம்பா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.

    மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு உடனடியாக அரசு உரிய நிவா ரண தொகையை வழங்க உத்திரவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×