என் மலர்
நீங்கள் தேடியது "வேலை நிறுத்தம்"
- வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன.
- இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.
அவுரங்காபாத்
அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன.
இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. நிர்வாகம்-பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றன.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சோனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கி ஊழியர்களிடையே பரவலாக கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வருகிற 19-ந் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஈரோட்டில் வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
- இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் இருந்து ஜவுளிகள், மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்துகள் உள்ளிட்டவைகள் பெரிய சரக்கு லாரிகள் மூலம் டெல்லி, மும்பை, மகாரா ஸ்டிரா உள்ளிட்ட வடமாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
இதற்காக ஈரோடு பார்க்ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளி மாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கு வதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களே சுமை தூக்கும் பணியாளர்களை நியமித்துள்ளது.
இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முன்பணம் மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவை நிறுவனம் வழங்கவில்லை என்று சுமை தூக்கும் தொழிலா ளர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவனத்தின் இந்நடவ டிக்கையை கண்டித்து நேற்று பவானி சாலையில் பல்வேறு சுமை தூக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த ஈரோடு கூட்ஸ் டிரா ன்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர்.
இதை கண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் அசோசியேசன் நிர்வாகி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த நிர்வாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட போவதாக வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்தது.
அதன்படி ஈரோட்டில் பவானி ரோடு, பார்க்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 100 லாரிகளில் சரக்குகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றது. இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து 50 லாரிகள் ஈரோட்டிற்கு சரக்கு கொண்டு வருகின்றது.
இப்பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி, ஆயில், கெமிக்கல், தானியங்கள் ஆகியவை புக்கிங் செய்யப் படாமல் தேக்கமடை ந்துள்ளது.
- சேலத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் இன்று முதல் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
- வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சேலம்:
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்க ளின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
- மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
- திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பல்லடம்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்வது, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த அரசை கேட்டு கொள்வது.
திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட தலைவர் ஞானசேகரனுக்கு, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிரணி அமைப்பாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி வேலை நிறுத்தம்.
- அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே . கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிவரும் 21ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடர்பான கூட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயின் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் வேலவன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.
- போராட்டத்தில் ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.
உடுமலை:
உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியுள்ளது. போராட்டத்தில் ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-
எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 25 மாத பி.எப்., தொகையை ஆலை நிர்வாகத்தினர் செலுத்தாமல் உள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பி.எப்., மற்றும் குடும்ப பென்ஷன் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 4 மாத ஊதியம் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள உள்ள 3 ஆண்டு ஈ.எல்., தொகையை வழங்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.
- விசைத்தறி தொழிலாளர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
- கஞ்சித்தொட்டி திறப்பு அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதி யில் 400-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி (சம்பளம்) வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் 2021-23 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு 75 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி யும் தோல்வியில் முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அவர்கள் இன்று 9-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏ.ஜ.டி.யு.சி. வட்டார தலைவர்கள் அய்யனார், ராசு தலைமையில் செட்டி யார்பட்டி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு இன்று கஞ்சி தொட்டி திறப்போம் என்று அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தளவாய்புரம் விசைத்தறி தொழிலா ளர்கள் வாழ்வாதார பிரச்சினை என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறை வேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி கூடுதாழை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை மீனவர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது நேற்று மாலை திடீர் என கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் சுமார் 30 மீட்டர் அளவிற்கு வெளியேறியது. இதன் காரணமாக கடற்கரையில் நின்ற மின்கம்பம் சரிந்தது. மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மீன்பிடி பைபர் படகுகளை கடல் அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றது. கடற்கரையில் சுமார் 7 அடி உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் வலைபின்னும் கூடம் (பண்டகசாலை) இடிந்துவிழுந்தது. எந்த நேரத்திலும் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று அங்குள்ள ஆலய ஒலிபெருக்கி மூலம் மீனவர்கள் அழைக்கப்பட்டனர். பின்பு பங்குதந்தை வில்லியம் தலைமையில் நடந்த ஊர் கூட்டத்தில் நாளை (ஞாயிற்றுகிழமை) காலை கூடுதாழை விலக்கில் (திருச்செந்தூர்- உவரி ரோடு) பங்குதந்தை தலைமையில் தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி கூடுதாழை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தூய்மைப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம்
கோவை,
கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மார்ச் 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகரில் குப்பைகள் அகற்றிட தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் வருகிற 23-ந் தேதி முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:-
வருகிற 23-ந் தேதி தொடங்கப்படும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை லேபர் யூனியன், கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம், தமிழ்நாடு தூய்மைக் காவலர் பொது தொழிலாளர் சங்கம், கோவை மாவட்ட அண்ணா சுகாதாரப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு நம்மவர் தூய்மைப் பணியாளர் தொழிற் சங்கம், கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மைப் பணியாளர் சங்கம் ஆகியவை பங்கேற்கின்றன.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வைக்க துண்டுப் பிரசுரங்கள் மூலமாக அழைப்பு விடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எங்கள் போராட்டத்தால் குப்பைகள் அகற்றுதல், டெங்கு ஒழிப்புப் பணி உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் என்றார். தூய்மைப் பணியாளர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 115-ஐ ரத்து செய்திட வேண்டும்.
அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தவுடன் வழங்கிட வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பை வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
சிறப்புக்காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
- இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
கடலூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத ஊழியர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணிக்கு வரவில்லை. ஆனால் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.
- வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர் காலியாகஞ்ச் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.
வெளிநபர்களை கொண்டு வந்து காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பழங்குடியினர் சமூகத்தின் மீது அராஜகம் நடப்பதாக கூறி, மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் நாளை 12 மணி நேர பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சுகந்த மஜூம்தார் கூறுகையில், 'மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வடக்கு வங்காள மாவட்டங்களில் பழங்குடியினர் சமூகத்தின் மீது மாநில நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சியினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 12 மணி நேர பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இது போன்ற அட்டூழியங்கள், முன்னெப்போதும் இருந்ததில்லை. வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். மாணவர்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அவசரகால சேவைகள் வழக்கம்போல் இயங்கும்' என்றார்.
இந்த போராட்ட அழைப்பு தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.