search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "talk show"

    • பாகிஸ்தானில் இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜாகிர் நாய்க் ஆச்சார்யரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்ல வந்தார்.

    தொலைக்காட்சி நேரலைகளில் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள் காரசாரமாக விவாதிப்பதை பார்த்திருப்போம். சில நேரங்களில் அவை வார்த்தைப் போராக வெடித்து கைகலப்பாக மாறும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி ஒரு விவாத நிகழ்ச்சி அடிதடியில் முடிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா விக்ரமாதித்யா என்ற அந்த உள்ளூர் பிரபலம், நாங்கள்[இந்து மாதத்தில்] அனைவரையும் மனிதர்களாக மாற்ற சொல்லித் தருகிறோம், மிருகங்களாக மாற்ற அல்ல.

    ஒரு மனிதன் மற்றொருவரிடம் எப்போதும் தவறாக நடக்கவே கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர் விவாதம் செய்யும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாய்க் உடனே அவரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்லி முடிக்கும் முன்னர் அவர் மீது பாய்ந்த ஆச்சார்யா விக்ரமாதித்யா கன்னத்தில் அரைந்து சரமாரியாகத் தாக்கினார்.

    பின் இருவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமாதானம் செய்தார். புராணக் கதை ஒன்றின்படி கிருஷ்ணருக்கு 16,000 மனைவிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜாகிர் பேசியதே ஆச்சார்யர் பொறுமையிழக்க காரணம் ஆகும். 

    • மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பசும்பொன்னில் உள்ள மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நேரு யுவகேந்திரா ,முத்தமிழ் அறக்கட்டளை இணைந்து யுவா சாம்வாட் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்நிகழ்ச்சியில் 2047-ல் இந்தியா எவ்வாறு இருக்கும் என்றும், நமது இந்தியாவின் கலாச்சாரம் எவ்வாறு பாதுகாக்க பட வேண்டும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக மீனாட்சி சுந்தரம், அன்புதுரை, ஜெயசந்திரன், பாண்டீஸ்வரி,டெய்சி ராணி, சிறப்பு விருந்தி னார்களாக கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கியாஸ் உரிமையாளர் பாலா என்ற பதினெட்டாம்படியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் அமலி வரவேற்றார்.கல்லூரி செயலாளர் சேசு மேரி, நேருயுவகேந்திரா தலைவர் பிரவீன்குமார் ஆகியோர் பேசினர்.விழா ஏற்பாடுகளை முத்தமிழ் அறக்கட்டளை உறுபினர்கள் சுரேஷ் கண்ணன், நாகராஜ் கண்ணன், வேலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவின் முடிவில் முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×