search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilaga Vettri Kazhagam"

    • நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.
    • பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. மாநாட்டு முன்னேற்பாடுகள் பற்றி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.

    இதுபற்றி மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அடுத்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி சாலை என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மாநாடு முன்னேற்பாடுகள் பற்றி கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தவறாமல் பங்கேற்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பங்கேற்போரின் எண்ணிக்கை வாகனங்களின் எண்ணிக்கை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழத் தலைவர் விஜய் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பெரியார் பிறந்தநாளில் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என இன்று காலை விஜய் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

    பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும்.
    • அதிமுக வலிமையான கட்சி என்பதால் அவதூறு பரப்புகின்றனர்.

    சேலம்:

    சேலம் நரசோதிப்பட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டினேன். குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. இதற்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தெந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையோ அதை சரிசெய்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு நான் சொன்ன கருத்துக்கு எதிர்மறை கருத்து என்பது எந்த விதத்தில் நியாயம்.

    கேள்வி: வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் 99 சதவீதம் சாதி பாகுபாடுகள் தமிழகத்தில் அப்படியே தான் இருக்கிறது என சொல்லியுள்ளார்?

    பதில்: ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

    கே: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் பரவியுள்ளது குறித்து?

    ப: இதுபற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வேண்டும் என்று இதுமாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க. அ.தி.மு.க. என்பது ஒரு கடல். இதில் அவரை மாதிரி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கட்சியில் அங்கம் வகிக்கிறாங்க. கட்சிக்காக உழைத்து கொண்டிருக்காங்க. அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் வதந்தியை கிளப்பிக்கிட்டு இருக்கு. இது கண்டிக்கத்தக்கது.

    கே: பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து?

    ப: அரசாங்கம் அவர்களை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும். அந்த மக்களின் பிரச்சினை என்ன? அவர்கள் என்ன? என்ன? கோரிக்கை வைக்கிறாங்க? என அதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலமாக தீர்வு காண வேண்டும். அதுதான் என்னுடைய நிலைபாடு.

    கே: தமிழகத்தில் மருந்து தட்டுபாடு நிலவி இருப்பதாக கூறப்படுவது குறித்து?

    ப: நேற்று கூட ஊடகத்தில் வந்த செய்தி. கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். தமிழகத்தினுடைய பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. ஏற்கனவே நான் இந்த மருத்துவமனையில் உள்ள இந்த குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினேன். அதற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்களே தவிர அதை சரி செய்யாமல் விட்டுவிட்டு வேண்டும் என்றே எடப்பாடி பழனிசாமி தவறான கருத்து சொல்கிறார் என கூறுகிறார்கள்.

    நாங்கள் அங்கு இருக்கிற நிலைபாட்டை எடுத்து சொல்கிறோம். குறைபாடுகளை தீர்ப்பது அரசினுடைய கடமை. மக்கள் எங்களிடம் விண்ணப்பம் மூலம் கோரிக்கை வைக்கிறாங்க. இப்படியெல்லாம் குறைபாடு இருக்கிறது, இதையெல்லாம் நீங்கள் வெளியே தெரிவிக்க வேண்டும். சரி செய்ய வேண்டும் என சொல்றாங்க. அதன் அடிப்படையில் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஊடகத்தின் வாயிலாக பேசுகிறோம். அரசாங்கம் எந்தெந்த மருத்துவமனையில் குறைபாடுகள் இருக்கிறதோ? அதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 23-ந் தேதி விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

    மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்தார்.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழகம் மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.
    • சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    விழுப்புரம்:

    தமிழக வெற்றிக்கழகத்தினை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு 6 நாட்களை கடந்த நிலையில், விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் மாநாடு நடைபெறும் இடத்தில் மாநாட்டு மேடை எவ்வளவு நீளம், அகலத்தில் அமைக்கப்படுகிறது. எந்த பகுதியிலிருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள் அவர்களுக்கு இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது.

    பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது. 85 ஏக்கர் நிலம் குத்தகை பெறப்பட்டுள்ளதால் அவர்களிடம் உரிய அனுமதிக்கான கடிதம் எத்தனை நபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை டி.எஸ்.பி. சுரேஷ் விக்கிரவாண்டி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் விளக்கமளித்த பின் மாநாட்டிற்கான அனுமதி அளிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.

    மாநாட்டிற்கு அனுமதியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆராய்ந்து தெரிவிப்பார் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார்.
    • விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்டம்பர் 23-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விஜய் மும்முரம் காட்டி வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார். தனி விமானத்தில் அவர் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.

    விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி, பாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். சமீபத்தில் இந்த கட்சியின் கொடி மற்றும் பாடலை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார்.

    அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களை கொண்டுள்ளது. அதன் மத்தியில் இரு போர் யானைகளும், அதன் இடையில் வாகை மலர் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஏற்கனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை எந்த மாநில கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    கட்சிக் கொடியில் இடம்பெற்றிருந்த யானைகளை அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஆனந்தன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், "அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்று பகுஜன் சமாஜ் அங்கீகாரம் பெற்ற கட்சியாகும். எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்."

    "நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம் ஆகும். யானை சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது."

    "தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார்."

    "அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.
    • விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் இவர்களுக்கு போட்டியாக பா.ஜனதா தனி அணியை உருவாக்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய அவர் கட்சிக்கான கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் 22-ந் தேதி பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இதன் பின்னர் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் விஜய் தீவிர கட்சி பணிகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

    புதிதாக ஓட்டு போட ஆயத்தமாகி வரும் இளம் வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெண்கள் பலரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.

    இவர்களோடு மாற்றத்தை விரும்புபவர்களும் ஓட்டுபோட்டுவிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே விஜய்யின் கணக்காக உள்ளது.


    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் சேருவதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பண்ருட்டி ராமச்சந்திரன், பழ.கருப்பையா, தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் விஜய் கட்சியில் சேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சிக்கு தாவ திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.

    இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் தற்போது இருக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு உள்ளவர்களே விஜய் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளனர்.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு பிறகு இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்து பேசி கட்சியில் இணைவதற்கு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றுடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அரசியல் நிபுணரின் ஆலோசனையின் பேரிலேயே கட்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவர்தான் புதிதாக சேர உள்ள அரசியல் கட்சி தலைவர்களை இப்போதே கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று தடை போட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    கொடி அறிமுக விழாவிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க தயாராக இருந்துள்ளனர். ஆனால் அரசியல் ஆலோசகர்தான் இப்போதே வேண்டாம். சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். இதனாலேயே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் இணைவது காலதாமதமாகி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பிறகு விஜய் கட்சியில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி, பாடல் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

    சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. அதன் தொடர்ச்சியாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார்.

    நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று (ஆகஸ்ட் 22) காலை அறிமுகம் செய்து வைத்தார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் சௌந்தரராஜா, அவர்மீது உள்ள பாசத்தின் காரணமாக, அவரின் அன்புதம்பியும், மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக அறக்கட்டளை சார்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை தனது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து சென்று, அங்குள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வைத்து விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சணையும், பூஜையும் செய்து, கட்சி கொடியை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

     

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய்யிடம் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும், விஜய் மற்றும் அவர் துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோவிலில் வேண்டினார்.

    சிறப்பு பூஜையை தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா மதுரை மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுகத்தை கொண்டாடும் வகையில், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மீது தான் கொண்டுள்ள தீரா அன்பு மற்றும் தமிழக மக்கள் மீது தலைவர் விஜய் வைத்துள்ள பேரன்பின் வெளிப்பாடாக நடிகர் சௌந்தரராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.
    • தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.

    சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.

    இந்நிலையில் விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என கூறியுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய பிரம்மாண்டமான இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன.
    • 4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன.

    தமிழக வெற்றிக் கழக பாடல் இன்று வெளியிடப்பட்டது. பின்னணியில் போர்க்கள காட்சிகளுடன் கூடிய வீடியோ பாடலாக வெளியாகி இருக்கும் அந்த பாடலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

    போர்க்களத்தில் 2 யானைகளில் அமர்ந்துள்ள இருவர் போர் வீரர்களை யானையை கொண்டு விரட்டி கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத யானைகளான அந்த 2 யானைகளையும் அடக்கி மக்களை காப்பதற்கு போர் வீரன் (விஜய்) குதிரையில் மின்னல் வேகத்தில் வருகிறார்.

    அதே போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன. போர் வீரன் குதிரையில் வந்து இறங்கியதும் 2 யானைகளும் அவனது உத்தரவுக்கிணங்க செயல்பட்டு 2 மாத யானைகளையும் துதிக்கையில் தாக்கி கீழே சாய்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோக்களை பரப்பி வரும் விஜய் கட்சியினர் அரசியல் களத்தில் எதிரிகளை இப்படித்தான் விஜய் சாய்க்கப் போகிறார் என்கிற வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன. தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பொறக்குது.

    தமிழா தமிழா நாம் வாழப் போறோமே... சட்டசபையை அலங்கரிப்போம் ரெட்டை யானை பலம் கொடுக்கும் என்பது போன்ற வரிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

    ×