search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilaga Vettri Kazhagam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார்.
    • மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ந்தேதி மற்றும் ஜூலை 3-ந்தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.

    முதல் கட்டமாக வருகிற 28-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

    சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    • புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார்.
    • புதுக்கோட்டையின் கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது.

    இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.

    இதை தொடர்ந்து விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடுவிதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது, அந்நிகழ்விற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.

    அப்போது விஜய் என்ற பெயர் கொண்ட நிர்வாகிகளின் பெயரை விஜய் என சொல்லாமல் 'தளபதி பெயர் உடையவர்களே' என புஸ்ஸி ஆனந்த் படித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது.
    • மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது. இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.


    இதை தொர்ந்து விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடுவிதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சென்னை பனையூரில் வரும் 18 ஆம் தேதி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் பிறந்தநாளில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது.
    • 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

    சென்னை:

    மாநிலத்தில் உள்ள கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற அக்கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது. இதே போல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


    நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் படங்கள், அவருடன் ஏற்பட்ட இனிமையான அனுபவங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
    • நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் 50-வது பிறந்த தினம் அடுத்த மாதம் (ஜூன்) 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் இதை மிக மிக கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை அவரது ரசிகர்கள் இப்போதே செய்ய தொடங்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக விஜய் பெயரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    அந்த ஹேஷ்டேக் சமூக வலைதள பக்கங்களில் டிரெண்டிங்காக மாறி உள்ளது. கடந்த 2 தினங்களாக அந்த ஹேஷ்டேக் வைரலாக மாறி இருக்கிறது.

    அதில் நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் படங்கள், அவருடன் ஏற்பட்ட இனிமையான அனுபவங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

    நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    அதற்கு முன்னதாக நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    அதற்கு முன்னதாக மற்றொரு மிகப்பெரிய பணியை செய்து முடிக்க நடிகர் விஜய் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க நடிகர் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

    அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

    அப்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். மாணவ-மாணவியரை விஜய் ஊக்கப்படுத்திய சம்பவம் ஒருபக்கம் அரசியலாக பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான போது தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கு வாழ்த்துத் தெரிவித்த விஜய், 'விரைவில் நாம் சந்திப்போம்' என தனது 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை அடுத்து, விஜய் கட்சி நிர்வாகிகள், அந்தந்த தொகுதிகளில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியரின் பெயர் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்று, அனைத்து தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியரின் பெயர் பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து விஜய் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், மாணவர்களின் பட்டியலை தயார் செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டோம். அதுமட்டு இல்லாமல், மாணவர்களின் சுயவிவரங்கள், பெற்றோர் பெயர், வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்று தலைமைக்கு அனுப்பி இருக்கிறோம். அடுத்த மாதம் விஜய், மாணவர்களை சந்திக்க இருக்கிறார்.

    வார இறுதி நாளில் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆனால், இதுவரை தேதி இறுதி செய்யப்படவில்லை. அந்த சந்திப்பின் போது, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியருக்கு விஜய் தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்க இருக்கிறார் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
    • காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு த.வெ.க. வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    தொடர்ந்து கட்சியின் பெயரை புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பதிவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைனில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கான சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்சியில் சேர்ந்துள்ள புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது.

    இந்நிலையில் மக்களுக்கு சட்ட உதவி வழங்க காவல் நிலையங்களை கணக்கிட்டு தலா 2 வழக்கறிஞர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு த.வெ.க. வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள். வழக்கறிஞர்கள் நியமனத்தை இந்த வாரத்திற்குள் முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    • இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கட்சியின் முதல் அரசியல் மாநாடாக நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு எனவும் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக விஜய் தெரிவித்திருந்தார்.

    இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடைபெற்று வருகிறது. இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதிதாக கட்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக இணைந்துள்ளனர். 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதை இலக்காக கொண்டு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விஜய் ஆலோசனையின் பேரில் தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

    புதிய கட்சி தொடங்கியதை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கட்சிக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணைய விதிமுறைப்படி விளம்பரமாக வெளியிட்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணி அசுர வேகத்தில் நடைபெற உள்ளது.

    விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு இடைவெளியில் கட்சி வளர்ச்சி பற்றி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வரும் விஜய் தனது பிறந்த நாளை அடுத்த மாதம் 22-ந்தேதி கொண்டாட இருக்கிறார்.

    இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் மாநாடு நடைபெற இருக்கும் இடத்தை நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கட்சியின் முதல் அரசியல் மாநாடாக நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் கோடிக்கணக்கான தொண்டர்கள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    மாநாட்டில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் கொடி வடிவமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சியில் புதிதாக திரையுலக நடிகர், நடிகைகள் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணைய இருக்கின்றனர்.

    மாநாடு நடைபெற இருப்பதை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைதளத்தில் விரைவில் மாநாடு.... என ஆர்வத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். புதிதாக தொடங்கிய போதும், தே.மு.தி.க.வை விஜயகாந்த் தொடங்கிய போதும் மதுரையில் முதல் மாநாட்டை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைனில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கான சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
    • தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    தொடர்ந்து கட்சியின் பெயரை புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பதிவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைனில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கான சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுவரை கட்சியில் சேர்ந்துள்ள புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது.

    தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி புதிய கட்சி தொடங்குவதற்கு கட்சி பெயர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பட்டியலை பத்திரிகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பாக வெளியிட வேண்டும். அதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை.

    அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ஏ-ன்படி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் பெயர் வருமாறு:-

    தலைவர்- ஜோசப் விஜய்.

    பொதுச் செயலாளர்- ஆனந்து என்ற முனுசாமி

    பொருளாளர்-வெங்கடராமணன்

    தலைமை நிலைய செயலாளர்- ராஜசேகர்

    இணை கொள்கை பரப்பு செயலாளர்- தாஹிரா

    இவ்வாறு புதிய நிர்வாகிகள் பெயர் முகவரியுடன் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.

    சென்னை:

    வருடந்தோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் என்பது உலகின் அனைத்து தாய்மார்களையும் போற்றி வணங்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

    குழந்தையை பெற்றெடுக்கும்போது எதிர்கொள்ளும் பிரசவ வலியையும், வேதனையையும் பொறுத்துக்கொள்ள அவளால் மட்டுமே முடியும். குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சிக்காக தன் ஒட்டுமொத்த விருப்பு, வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிடுவாள். காலங்கள் உருண்டோடிக்கொண்டே இருக்கலாம். நாகரிகம் என்ற போர்வையில் வாழ்வியல் முறை மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை. 

    இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம்! என்று தெரிவித்துள்ளார்.


    • 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
    • மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இத்தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அதே போல் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தேர்வில் பெற்று பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக்குவித்து வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    விரைவில் நாம் சந்திப்போம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.
    • தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

    2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு என அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடந்து வருகிறது. இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.


    விஜய் தற்போது 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்துக்காக கடந்த சில நாட்களாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் விஜய் டப்பிங் பேசி முடித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×