search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2024"

    • கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
    • முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அவுட்டானார். நிதானமாக விளையாடிய ஜெகதீசன் 57 ரன்கள் அடித்தார்.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.

    3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரையை வெற்றி பெற வைத்த முருகன் அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • முதலில் ஆடிய சேலம் 180 ரன்களை குவித்தது.
    • அந்த அணியின் கவின், விஷால் வைத்யா அரை சதமடித்தனர்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி 144 ரன்கள் எடுத்து தோற்றது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் 33 ரன்னில் வெளியேறினார்.

    திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

    அந்த அணியின் ராஜ்குமார் 17 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் அந்தோனி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கேப்டன் அஸ்வின் 5 ரன்னிலும், விமல்குமார் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித், ஷிவம் சிங் ஜோடி 82 ரன் சேர்த்தது.

    பாபா இந்திரஜித் 33 ரன்னிலும், ஷிவம் சிங் 78 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தினார்.

    • 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
    • அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    சேலம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார்- ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். 2-வது பந்திலேயே சந்தோஷ் குமார் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த பாபா அப்ரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மறுமுனையில் தடுமாற்றத்துடன் விளையாடிய ஜெகதீஷன் 22 பந்தில் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் அப்ரஜித் 38 ரன்னில் அவுட் ஆனர்.

    அடுத்து வந்த டேரில் ஃபெராரியோ வித்தியசமான முறையில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய ஜிதேந்திர குமார் 21 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் சதீஷ் மற்றும் அபிஷேக் தன்வர் வெற்றிக்காக போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கோவை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய கோவை 142 ரன்களை எடுத்தது.

    சேலம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் ஆன சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும் போட்டி நடைபெறுகிறது.
    • இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது.

    நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், சேப்பாக் கில்லீஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • டி. நடராஜனை 11.25 லட்சம் ரூபாய்க்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
    • ஆர். சஞ்சய் யாதவை 22 லட்சம் ரூப்ய் கொடுத்து திருச்சி அணி எடுத்துள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபிஷேக் தன்வரை 12.2 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஏற்கனவே அணியில் விளையாடிய ஜி. பெரியசாமியை 8.8 லட்சம் ரூபாய் கொடுத்து மீண்டும் அணியில் இணைத்துள்ளது.

    மேலும், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-

    1. ஆர். விவேக் (ரூ. 11 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்

    2. எஸ். ஹரிஷ் குமார் (ரூ. 15.4 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்

    3. ஆர். சஞ்சய் யாதவ் (ரூ. 22 லட்சம்)- திருச்சி கிராண்ட் சோலாஸ்

    4. டி. நடராஜன் (ரூ.11.25 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்

    5. சந்தீப் வாரியார் (ரூ. 10.5 லட்சம்)- திண்டுக்கல் டிராகன்ஸ்

    6. சாய் கிஷோர் (ரூ. 22 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்

    • டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது.
    • நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து விட்டது. இந்த ஆண்டு நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடக்கிறது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள், டி.என்.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்கள் ஏலத்துக்கான இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். ஏலப்பட்டியலில் 690 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 62 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களையும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

    டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது. பி.அபராஜித், என்.ஜெகதீசன், அருணாச் சலம், அய்யப்பன், ஜிதேந்தர் குமார், லோகேஷ் ராஜ், மதன்குமார், பிரதோஷ் ரஞ்சன் பவுல், ரஹீல்ஷா, சிபி, சிலம்பரசன் ஆகி யோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.28.70 லட்சம் செலவழித்து உள்ளது. 8 வீரர்களை விடுவித்துள்ளது.

    நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக ரூ.70 லட்சம் செலவழிக்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கைவசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது. அந்த அணி ஏலத்தில் 9 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    சேலம் அணியில் தான் அதிகபட்சமாக 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியின் கைவசம் தான் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் அணியிடம் ரூ.45.90 லட்சம் உள்ளது. அந்த அணி 10 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    ×