search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • 2022ல் 4599 டிரிப்கள் 348 சிறப்பு ரெயில்கள் மூலம் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    • 380 சிறப்பு ரெயில்களில் 25,794 பொதுப் பெட்டிகளும் 55,243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன.

    கோவை,

    இந்தியன் ரெயில்வேயில் நாடு முழுவதும் 380 கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு கோடை சீசனில், ரெயில்வே பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரெயில்வே 380 சிறப்பு ரெயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளது.

    2022ல் 4599 டிரிப்கள் 348 சிறப்பு ரெயில்கள் மூலம் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரெயில்வே இந்த ஆண்டு கூடுதலாக 1770 டிரிப்களை இயக்குகிறது.

    கடந்த கோடையில் சராசரியாக ஒரு ரெயிலுக்கு 13.2 டிரிப்புகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு சிறப்பு ரெயிலுக்கு 16.8 டிரிப்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த வருடம் பாட்னா-செகந்திராபாத், பாட்னா-யஸ்வந்த்பூர், பரௌனி-முசாபர்பூர், டெல்லி-பாட்னா, புது தில்லி-கத்ரா, சண்டிகர்-கோரக்பூர், ஆனந்த் விஹார்- பாட்னா, விசாகப்பட்டினம்-புரி-ஹவுரா, மும்பை-பாட்னா, மும்பை-கோரக்பூர் டிரிப்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    இந்த 380 சிறப்பு ரெயில்களில் 25,794 பொதுப் பெட்டிகளும் 55,243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன. ஜெனரல் கோச்களில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது, அதே சமயம் ஸ்லீப்பர் கோச்களில் 72 பேர் பயணிக்க முடியும். கோடை கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரெயில்வே சிறப்பு பயணங்களை இயக்கத் தயாராகியுள்ளன.

    இந்த சிறப்பு ரெயில்கள் மூலம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது.

    தேவையின் அடிப்படையில், ரெயில்களின் எண்ணிக்கை மற்றும் டிரிப்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றது.
    • மொத்தம் 526 சேவை இதன்மூலம் வழங்கப்படும்.

    கோடைகால விடுமுறையில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோடைகாலத்தை முன்னிட்டு ரெயில்கள் மூலம் சுற்றுலா தலங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக 50 சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றது. அதன்படி, தாம்பரம்-திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை, சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் வேளங்கண்ணி, திருவனந்தபுரம்-மங்களூரு, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும், தெற்கு ரெயில்வேயில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 37 கோடைகால சிறப்பு ரெயில்களை இயக்க மற்ற ரெயில்வே மண்டலங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மொத்தம் 526 சேவை இதன்மூலம் வழங்கப்படும். இதுதவிர, ஊட்டி மற்றும் குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருதி நீலகிரி மலை ரெயிலில் கோடைகால (முன்பதிவு) சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, வழக்கமான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் விதமாக கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிவேக காற்றும் மழையும் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
    • திருப்பூர் ரெயில் நிலையம்அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் சிக்னல் கம்பம், ஓங்கியடித்த காற்றுக்கு, உடைந்துவிழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூரில் காலை நேரங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், வியர்க்க விறுவிறுக்க பயணிக்கின்றனர். இந்நிலையில், திருப்பூர் நகர பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. சுழன்றடித்த காற்று, ரோட்டோரம் கிடத்த குப்பை,பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள், சருகுகள், மண்ணை வாரி, இறைத்தது. இதனால் சாலை தெளிவாக தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறினர்.இருசக்கர வாகன ஓட்டிகள், மேற்கொண்டு பயணிக்க முடியாமல், அருகிலிருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து அரைமணி நேரம் பலத்தமழை பெய்தது. நேற்றும் மாலை பலத்த காற்று வீசியது. காற்றுக்கு முறிந்து விழுந்து விடுவதுபோல், மரக்கிளைகள் அசைந்தாடின.சில நிமிடங்களிலேயே, மழை பெய்யத்துவங்கியது. அதிவேக காற்றும் மழையும் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    திருப்பூர் ரெயில் நிலையம்அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் சிக்னல் கம்பம், ஓங்கியடித்த காற்றுக்கு, உடைந்துவிழுந்தது. அதனை சீரமைக்கும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டனர். மழை பெய்தும் திருப்பூர் மாநகரில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். 

    • பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாக அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.
    • தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    சென்னை :

    சென்னை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாகவும் ரெயில்வேயின் உதவி மையத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.

    இந்த நிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி வியாசர்பாடி அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலில் நின்றபோது ரெயில் பயணியிடம் அடையாளம் தெரியாத 2 திருநங்கைகள் ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து, ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா மற்றும் சகிதா ஆகியோரை ரெயில்வே போலீஸ் எஸ்.பி.பொன்ராமு நேற்று நேரில் அழைத்து பேசினார். அப்போது சங்க உறுப்பினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராத வகையில் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார். தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    • மறுமார்க்கத்தில் சேலம்- கோவை (06803) ெரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ெரயில் 31ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவை- சேலம் மெமு ெரயில் சேவை 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

    இது குறித்து சேலம் ெரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு- சேலம் ரெயில் நிலையம் இடையே தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆகையால் வருகிற 31ந்தேதி வரை கோவை- சேலம் (06802) மெமு ெரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் சேலம்- கோவை (06803) ெரயிலும் ரத்து செய்யப்படுகிறது.இது போன்றே, ஆலப்புழா- தன்பாத் (13352) ெரயில் 31-ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 30 நிமிடங்கள் வரை நின்று செல்லும். எர்ணாகுளம்- டாடாநகர் (18190) புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ெரயில் 31ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில், 17-ந் தேதி வரையில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
    • ஜம்முதாவிக்கு பாரத் கவுரவ்ரெயில் இன்று இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    மதுக்கரை பகுதியில் ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால் திருப்பூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் சில ெரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை - கேரளா மாநிலம் பாலக்காடு டவுன் மாலை 6மணி பயணிகள் ரெயில் 12, 13, 15, 16, 27-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.கேரளா மாநிலம் சொரனூர் - கோவை காலை 8:20 மணி சிறப்பு ரெயில் 17-ந் தேதி வரையில் பாலக்காடு டவுன் வரை மட்டுமே இயக்கப்படும்கோவை - சொரனூர் மாலை 4:30 மணி சிறப்பு ரெயில் 17ந் தேதி வரையில் பாலக்காட்டில் இருந்து மாலை 5:55 மணிக்கு இயக்கப்படும். மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 9 மணி விரைவு ரெயில் 17-ந் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்பாலக்காடு டவுன் - ஈரோடு மதியம் 2:40 மணி பயணிகள் ரெயில் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையில் கோவையில் இருந்து மாலை 4:28 மணிக்கு இயக்கப்படும்ஈரோடு - பாலக்காடு டவுன் காலை 7:15 மணி பயணிகள் ரெயில் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையில் கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு டவுன் மதியம்1மணி ரெயில், 17-ந் தேதி வரையில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.சொரனூர் - கோவை மாலை 3:10 மணி பயணிகள் ரெயில் 12, 13, 15, 16, 17ந் தேதிகளில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 11:05 மணி இன்டர்சிட்டி விரைவு ரெயில் 17ந் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ரெயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜம்முதாவிக்கு பாரத் கவுரவ்ரெயில் இன்று இயக்கப்படுகிறது.

    கோவை - ஜம்முதாவி(06903) ரெயில் இன்று காலை, 7:45 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நாளை மறுநாள் 13-ந் தேதி இரவு, 1:30 மணிக்கு ஜம்முதாவி சென்றடையும்.ரெயிலில் தலா ஒரு முதல் வகுப்பு ஏ.சி., மற்றும் ஏ.சி., இரண்டடுக்கு, 8ஏ.சி., மூன்றடுக்கு, ஒரு தூங்கும் வசதி உள்ளிட்ட 14 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    திருப்பூர், ஈரோடு, சேலம், ஒயிட்பீல்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சீராலா, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜான்சி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெரிசலான வழித்தடத்தில் போதிய ரெயில்கள் இயக்கப்படாததுதான், காரணம் என்று கருதப்படுகிறது.
    • 1 கோடியே 76 லட்சம் பி.என்.ஆர். எண்கள் தானாகவே ரத்து ஆகிவிட்டன.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், காத்திருப்போர் பட்டியல் ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு ரெயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த நிதிஆண்டில் (2022-2023) கோடியே 72 லட்சம் பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் கடைசிவரை உறுதி ஆகவில்லை. அதனால், அவர்களது 1 கோடியே 76 லட்சம் பி.என்.ஆர். எண்கள் தானாகவே ரத்து ஆகிவிட்டன.

    அவர்களால் ரெயிலில் பயணிக்க முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கு கட்டணம் திருப்பித்தரப்பட்டது.

    இதுபோல், 2021-2022 நிதிஆண்டில், 1 கோடியே 65 லட்சம் பயணிகளும், 2020-2021 நிதிஆண்டில் 61 லட்சம் பயணிகளும், டிக்கெட் உறுதி ஆகாததால் பயணம் செய்ய முடியவில்லை.

    2018-2019 நிதிஆண்டில் 68 லட்சத்து 97 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2017-2018 நிதிஆண்டில் 73 லட்சம் பி.என்.ஆர். எண்களும், 2016-2017 நிதிஆண்டில் 72 லட்சத்து 13 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2015-2016 நிதிஆண்டில் 81 லட்சத்து 5 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2014-2015 நிதிஆண்டில் 1 கோடியே 13 லட்சம் பி.என்.ஆர். எண்களும் ரத்தாகி விட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நெரிசலான வழித்தடத்தில் போதிய ரெயில்கள் இயக்கப்படாததுதான், டிக்கெட் உறுதி ஆகாததற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

    இதை கருத்திற்கொண்டு, சிக்னல் பராமரிப்பு, தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும், இதன்மூலம் கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும் என்றும் ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். அதிகமான ரெயில்கள் இயக்கும்போது, காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் பெறும் வாய்ப்பு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • பாலருவி விரைவு ரெயில் நெல்லையில் இருந்து வ 11.30-க்கு புறப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை-கொல்லம் இடையே கடந்த சில மாதங்களாக மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை-செங்கோட்டை இடையே பணிகள் நிறைவு பெற்றுவிட்டது.

    இதையடுத்து இந்த வழித்தடத்தில் நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 70 கிலோமீட்டரில் இருந்து 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் ரெயில்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரெயில்(16791) நெல்லையில் இருந்து வழக்கமான நேரமான 11.20-க்கு பதிலாக 11.30-க்கு புறப்படுகிறது. தென்காசிக்கு வழக்கமான நேரமான 12.35 மணிக்கு செல்லும். பாலக்காடு - நெல்லை விரைவு ரெயில்(16792) செங்கோட்டைக்கு வழக்கமான நேரமான அதிகாலை 3 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 4.40 மணிக்கு வந்தடைகிறது.

    காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை - செங்கோட்டை ரெயில் செங்கோட்டையை 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.05-க்கு சென்றடையும். காலை 9.10-க்கு புறப்பட வேண்டிய ெரயில் 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டையை மதியம் 11.50-க்கு சென்றடையும்.

    இதேபோல் மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு வழக்கமான மணியை விட 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவும் சென்றடைகிறது. மறுமார்க்கமாக காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரெயில் நெல்லை டவுன் வரை வேகம் அதிகரிக்கப்பட்டு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அதே நேரமான 8.50 மணிக்கு வந்தடையும்.

    காலை 10.05 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக இரவு 12.15 மணிக்கும், மதியம் 2.55-க்கு புறப்படும் ரெயில் 20 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மதியம் 11.50 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் செங்கோட்டை - மதுரை ரெயில் 11.50 மணிக்கு பதிலாக 12.10 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு மாலை 3.40 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    • திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும், பாசஞ்சர் ெரயில் (எண்: 16843) ஈரோடு வரை மட்டும் இயங்கும்.
    • நாளை (5ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ஈரோட்டுடன் நிறுத்தப்படும்.

    திருப்பூர்:

    சேலம் கோட்ட ரெயில்வே பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு ரெயில் நிலையம் - தொட்டிபாளையம் இடையே கான்கீரிட் சிலாப் மாற்றப்பட்டு, தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் நாளை 5-ந்தேதி, திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும், பாசஞ்சர் ெரயில் (எண்: 16843) ஈரோடு வரை மட்டும் இயங்கும். திருப்பூர், சோமனூர் செல்லாது.

    அதைப்போல் மறுமார்க்கமாக, மே, 6-ந் தேதி, பாலக்காட்டுக்கு பதில், ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு பாசஞ்சர் (எண்:16322) இயக்கப்படும். இதைப்போல் நாளை (5ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ஈரோட்டுடன் நிறுத்தப்படும். திருப்பூர், கோவைக்கு வராது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது.
    • ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.

    திருப்பூர் :

    போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், வருகிற 30-ந் தேதி ரெயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து, ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பயணிக்காது. மாறாக சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும். அங்கிருந்து கேரளா நோக்கி செல்லும்.சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு செல்லும் ரெயில் திருச்சியில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கேரளா சென்று மங்களூரு செல்லும்.

    வழக்கமான வழித்தடமான குளித்தலை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் ரெயில் நிலையம் செல்லாது. ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.பாலக்காடு செல்லாது.

    ஷாலிமர் - நாகர்கோவில், திப்ரூகர் - கன்னியாகுமரி, இரு ரயில்களும் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.புது டெல்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.

    நாளை 30-ந் தேதி பாட்னா - எர்ணாகுளம் நான்கு மணி நேரம், சில்சார் - திருவனந்தபுரம் ரெயில்கள் 3 மணி நேரம் 20 நிமிடம், புதுடில்லி - திருவனந்தபுரம், கேரளா எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் வழித்தடத்தில் ஏதுவான பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக, சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜோத்பூர்- தாம்பரம் (06056) இடையேயான சிறப்பு ரெயில் நாளை 30, மே 7 ஆகிய தேதிகளில் மாலை 5:30 மணிக்கு ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 7:15மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்- ஜோத்பூர் (06055) சிறப்பு ரெயில் மே 4-ந் தேதி பிற்பகல் 2மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு சனிக்கிழமை மாலை 5:20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.இந்த ெரயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, பன்வால், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் ஓட்டுனர்களுக்கு தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி. கலந்து கொண்டு ரெயில் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான ரஹீம், நிர்வாகிகள் கல்யாணி, மணிக ண்டன், சரவணன், மேரி, ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி, துணைத் தலைவா் ராஜேந்திரராவ், செயலாளா் கிருஷ்ணன், துணைச் செயலாளா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா் சுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலா் ராமர், நகர்மன்ற உறுப்பினா்கள் பொன்னு லிங்கம், வேம்புராஜ், செண்பகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை-தாம்பரம் தாமிரபரணி அதிவிரைவு ரெயில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    பாவூர்சத்திரம்

    செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரெயில் ஓட்டுனர்களுக்கு சால்வை, மரக்கன்றுகள் மற்றும் தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ரெயிலுக்கு கடையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் பெற்றுத்தர வேண்டி ஞானதிரவியம் எம்.பி.யிடம் தோரணமலை முருகபக்தர்கள் குழுவினர் மனு அளித்தனர்.

    மேலும் ரெயில் பயணிகள் கோரிக்கையாக இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்ட வேண்டும் எனவும் பாவூர்சத்தி ரம் ரெயில் நிலையத்திற்கு பேன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கடையம் ெரயில் நிலையத்திற்கு நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது .

    • இந்த ரெயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 4 சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் - 06035) எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    இந்த ரயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06036) வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    இந்த ரயில் 16 மற்றும் 23-ந் தேதிகளில் நீடிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×