search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanuvampet church"

    • கொடியேற்ற திருவிழாவும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது.
    • இரண்டாம் நாளான நாளை (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது.

    சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு ஆலய 47-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர், இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு. இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் அமைந்துள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால், எல்லா மதத்தினரும் இந்த திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 47-வது ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று மாலை கொடியேற்ற திருவிழாவும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது.

    அருட்தந்தை பா.எஸ்.தாக்கியூஸ் தலைமையில் நடந்த இந்த வழிபாட்டில் பாதிரியார்கள் இம்மானுவேல், மைக்கேல் அலெக்சாண்டர், எட்வின் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    இரண்டாம் நாளான நாளை (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது. குரோம்பேட்டை புனித அமல அன்னை ஆலயத்தின் முன்னாள் ஆயரின் பொது பதில் குரு பங்குத்தந்தை ஞா.பாக்ய ரெஜின் தலைமை தாங்குகிறார். இதில் பாதிரியார்கள் ஜேம்ஸ், இ.ஜேம்ஸ் தம்புராஜ், சி.ல.பிரதீப், அ.டேவிட் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து, 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக பேராசிரியரும், பங்கு தந்தையுமான ஜேம்ஸ் பொன்னையா தலைமையில் பங்கு குடும்பப் பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபமும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலி மற்றும் திருத்தேர் மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் புனித பத்திரிசியார் ஆலய பங்கு தந்தை கு.ரா.பால் ஜான் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    28-ந்தேதி திருக்கொடி இறக்கம் மற்றும் நன்றி பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு ஜெப மாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபம், இரவு 7 மணிக்கு நன்றி ஆராதனையும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் நடைபெறுகிறது.

    இதில் அருட்தந்தைகள் ரவி ஜோசப், விக்டர் வினோத், பிரான்சிஸ் கிளாட்வின் உள்ளிட்டர் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் பாதிரியார்கள் அந்தோணி ராஜ், அந்தோணிசாமி மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    • பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 46-வது ஆண்டு விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • புனித யூதா ததேயு திருத்தலத்தின் நிருத்தேர் பெருவிழா நாளை நடைபெறுகிறது.

    இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு.

    இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனித் திருத்தலம் உள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால் அனைத்து மதத்தினரும் இத்திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 46-வது ஆண்டு விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பூவிருந்தவல்லி இருதய கிறித்துவ கல்லூரியின் ஆண்மீக இயக்குனர் அருட்பணி அருள்ராஜ் அவள்கள் தலைமையில் ஜெபமாலை, நவநாள், கொடியேற்றத்துடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து, 2ஆம் நாளான இன்று மாலை 6.00 மணிக்கு தற்கருளை பெருவிழா. புனித தோமையார் தேசிய திருத்தவ அதிபர் அருட்பணி ஏ.டி.மைக்கேல் அவர்கள் தலைமையில் ஜெபமாலை, தவநாவி, நற்கருனை ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சென்னனையை அடுத்த வாணுவம்பேட்டையில் அமைந்துள்ள புனித யூதா ததேயு திருத்தலத்தின் திருத்தேர் பெருவிழா நாளை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேர் திருவிழா நாளை மாலை (28.10.2023) 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    செங்கற்பட்டு மறைமாவட்ட பொருளாளி அருட்பணி டேமியன் அருணனந்த தலைமையில் ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து பக்தர்களின் உற்சாக வேண்டுதலோடு திருத்தேர் வீதிஉலா வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பக்தியோடு கலந்துகொண்டு அனைத்து மக்களின் நலனுக்காக வேண்டுதல் செய்து சிறப்பிக்கின்றனர்.

    இறுதி நாளான 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுகிறது. காலை 7.00 மணிக்கு தமிழில் அருட்பணி லாசர் தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலியும் நடைபெறுகிறது.

    மாலை 6.00 மணிக்கு புனித தோமையார் மலை மறைவட்ட புனித பத்ரீசியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி ஸ்டீபன் ஷைலக் தலைமையில் ஜெபமாலை, நவநாள், திருவிழா திருப்பலி அதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொடியிறக்க விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புனித யூதா ததேயு திருத்தல அதிபர் அருட்பணி ஏ.மார்ட்டீன் ஜோசப் மற்றும் உதவி பங்கு தந்தை அருட்பணி எஸ்.ஏ.பிரான்சிஸ் சேவியர், ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

    இந்த அருள் நிறைந்த கோலாகலமான திருவிழாவில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டு வருவதால் வாணுவம்பேட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • இந்த ஆண்டு விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடந்தது.
    • முன்னதாக திருப்பலியும், ஜெபமாலை நவநாள் திருப்பலியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் உற்சாக கோஷத்துடன் தேர் திருவிழா நடந்தது.

    சென்னை:

    சென்னையை அடுத்த வாணுவம்பேட்டையில் உள்ள யூதா ததேயு திருத்தலத்தின் திருத்தேர் பெருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இயேசுவின் சீடர்களில் முக்கியமானவரும், முதன்மையானவருமான யூதா ததேயுவுக்கு சென்னையை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் நிறுவப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தலத்தின் ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழாவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பார்கள். மனதில் நினைத்த வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றித் தரவல்ல திருத்தலமான இங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் யூதா ததேயு திருத்தலத்தில் 45-வது ஆண்டு விழா, கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாளை நற்கருணை பெருவிழா நடந்தது.

    இந்த ஆண்டு விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக திருப்பலியும், ஜெபமாலை நவநாள் திருப்பலியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் உற்சாக கோஷத்துடன் தேர் திருவிழா நடந்தது. இதில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமை தாங்கினார். இதனால் வாணுவம்பேட்டையே நேற்று உற்சாக கோலம் பூண்டது. பக்தர்கள் மனமுருக இறைவனை வழிபட்டனர். பலர் தங்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி சென்றனர்.

    இறுதி நாளான இன்று திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுகிறது. காலை திருப்பலி நிகழ்வு அரங்கேறியது. தாமஸ் அகாடமியின் இயக்குனர் தந்ததை சி.பால்ராஜ் ஆங்கிலத்தில் திருப்பலியை முன்னெடுக்கிறார். மாலை ஜெபமாலை, நவநாள், திருவிழா திருப்பலி அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. செங்கல்பட்டு மறை மாவட்டத்தைச் சேர்ந்த மேய்ப்பு பணி மைய இயக்குனர் அருட்பணி இயேசு அந்தோணி தலைமை தாங்குகிறார்.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் அதிபர் தந்தை ஏ.மார்ட்டின் ஜோசப் மற்றும் உதவி பங்கு தந்தை ஜான் ராபர்ட் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    4 நாட்கள் நடந்த இந்த கோலாகலமான திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு திருத்தலத்தின் 45வது ஆண்டு விழா இன்று தொடங்கியது.
    • 45-வது ஆண்டு விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சென்னை:

    இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு. இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனித் திருத்தலம் உள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால் அனைத்து மதத்தினரும் இத்திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 45-வது ஆண்டு விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை நவநாள் திருப்பலி நடந்தது. மாலை ஜெப மாலை திருப்பலி நடக்கிறது. செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் போஸ்கோ தலைமையில் இந்த கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    2-ம் நாளான நாளை நற்கருணை பெருவிழா நடக்கிறது. காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. மானாம்பதி கண்டிகையில் உள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை விக்டர் வினோத், ஆர்.என்.கண்டிகையில் உள்ள தூய அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ரவி ஜோசப், பல்லாவரம் புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தின் உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் கிளாட்வின் ஆகியோர் தலைமை தங்குகிறார்கள்.

    சிகர நிகழ்ச்சியான திருத்தேர் பெருவிழா 29-ம் தேதி நடக்கிறது. காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெறுகிறது.

    செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இறுதி நாளான 30-ம் தேதி திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுகிறது. செயிண்ட் தாமஸ் அகாடமி இயக்குனர் தந்தை சி.பால்ராஜ் ஆங்கிலத்தில் திருப்பலியை முன்னெடுக்கிறார். மாலை ஜெபமாலை, நவநாள், திருவிழா திருப்பலி அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. செங்கல்பட்டு மறை மாவட்டத்தைச் சேர்ந்த மேய்ப்பு பணி மைய இயக்குனர் அருட்பணி இயேசு அந்தோணி தலைமை தாங்குகிறார்.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் அதிபர் தந்தை ஏ.மார்ட்டின் ஜோசப் மற்றும் உதவி பங்கு தந்தை ஜான் ராபர்ட் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    ×