T20 உலகக் கோப்பை திருவிழா 2024
null

போட்டியெல்லாம் அப்புறம்தான்.. ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் - வீடியோ

Published On 2024-06-29 08:47 GMT   |   Update On 2024-06-29 08:48 GMT
  • கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பேசியுள்ளனர்
  • தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

அணியில் உள்ள ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனம் குறித்த விவாதமே இப்போது திரும்பிய இடத்திலெல்லாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

ரோகித் சர்மா பயம் என்பதையே அறியாத சிறந்த ஆட்டக்காரர் என்றும் தான் அவரின் பெரிய ரசிகன் என்றும் கேசவ் மஹராஜ் கூறியுள்ளார். க்ளாஸன் ரோகித் பற்றி கூறுகையில், அவர் கிரிக்கெட்டில் நம்பமுடியாத வகையில் சிறந்த மூளைக்காராக உள்ளார். அவருடன் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி பேச நான் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

டேவிட் மில்லர் பேசுகையில், ரோகித் டி- 20 யில் சிறந்த பினிஷராக உள்ளார். களத்தில் பதற்றம் அடையாத அவரின் நிதானத்தைப் பார்த்து வியக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரபாடா ரோகித்தை தலைசிறந்த பேட்டர் என்றும் உலகின் தலைசிறந்த பவுலர் என்றும் புகழ்ந்துள்ளார்.  

Tags:    

Similar News