ஆன்மிக களஞ்சியம்
null

ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்

Published On 2023-07-14 11:05 GMT   |   Update On 2023-07-14 11:13 GMT
  • நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும்.
  • பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு.

திருவோண விழாவின் நாயகனும், பிரகலாதனின் பக்திக்குள் கட்டுண்டவனும், இரணியனை வதம் செய்தவனுமாகிய ஸ்ரீ நரசிம்மரே மனிதர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுள் ஆவார். பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு.

பரமகாருணிகனான சர்வேச்வரன் அவதரிக்கும் போதே, பக்தனுக்குத் தீங்கு விளைவிக்கத் தொடங்கிய கொடியவகை சம்கரித்து இந்த ஒரு அவதாரத்திலே தான்.

ஆகையால் பக்தர்களின் இன்னல் இடையூறுகளைக் களைத்தெறிந்து காக்க வேண்டிய நிலையில் தனக்குள்ள பாரிப்பையும் பரபரப்பையும் உலகுக்கு நன்கு வெளிப்படுத்திய அவதாரம் நரசிங்க அவதாரம். எனவே ஆபத்தும் அவசரத் தேவையுமான வேளைகளில் இரணியனை வணங்கினால் அவன் நம்மைக் காப்பது நிச்சயம்!

நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான்.

இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை இங்கிதமாய் போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.

Tags:    

Similar News