ஆன்மிக களஞ்சியம்

ஐந்து தலை கொண்ட சர்ப்ப விநாயகர்

Published On 2024-06-27 11:45 GMT   |   Update On 2024-06-27 11:45 GMT
  • விநாயகர் துதிக்கை இடம் சுழித்திருப்பின் இடம்புரி விநாயகர் எனவும் வலம் சுழிந்திருப்பின் வலம்புரி விநாயகர் எனவும் கூறுவர்.
  • வலம்புரி விநாயகர் வெற்றியைத் தரும் வடிவமாகும்.

டிரான்ஸ்பர் விநாயகர்

கோவை நகரில் அமைந்துள்ள பல்வேறு விநாயகர்களுள் டிரான்ஸ்பர் விநாயகர் மிகவும் பிரசித்தம்.

தங்களுக்கு விருப்பமான ஊர்களுக்கு மாறுதல் வேண்டும் பணியாளர்களுடைய கோரிக்கையினை இவ்விநாயகர் நிறைவேற்றி வைப்பதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகின்றது.

வலம்புரி விநாயகர்

விநாயகர் துதிக்கை இடம் சுழித்திருப்பின் இடம்புரி விநாயகர் எனவும் வலம் சுழிந்திருப்பின் வலம்புரி விநாயகர் எனவும் கூறுவர்.

வலம்புரி விநாயகர் வெற்றியைத் தரும் வடிவமாகும்.

துதிக்கை வலம் சுழிக்கப்பெற்ற வலஞ்சுழி விநாயகரை திருவலஞ்சுழியிலும் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும், பிள்ளையார்பட்டியிலும் காணலாம்.

சர்ப்ப விநாயகர்

பாபநாசம் நகரின் மையப்பகுதியில் ஐந்துதலை சர்ப்ப விநாயகர் உள்ளார். இவர் நாகதோஷங்களை நீக்கியருளுகின்றார்.

Tags:    

Similar News