ஆன்மிக களஞ்சியம்

அன்னபூரணி சிலையை அரிசிக்குள் போடாதீர்?

Published On 2023-08-17 13:31 GMT   |   Update On 2023-08-17 13:31 GMT
  • அன்னபூரணிக்குரிய நைவேத்தியம் அரிசி அல்ல. அவளுக்கு லட்டே பிரியமானது.
  • அரிசி போடும் பாத்திரத்தில் அன்னபூரணியை போட்டு மூழ்கடித்து விடுகின்றனர்.

அன்னபூரணி சிலையை அரிசிக்குள் போடாதீர்?

அன்னபூரணி சிலை இல்லாத வீடுகளே இப்போது குறைவு.

இந்த சிலைகளை பத்து ரூபாய்க்கு கூட செய்து கடைகளில் விற்கின்றனர்.

இதை வாங்கி வந்து ஒரு தட்டில் வைத்து சுற்றிலம் அரிசி தூவி திருவிளக்கின் முன் வைத்து பூஜை செய்கின்றனர். இன்னும் சிலர் அரிசி போடும் பாத்திரத்தில் அன்னபூரணியை போட்டு மூழ்கடித்து விடுகின்றனர்.

இது முற்றிலும் தவறான வழிபாடாகும்.

அன்னபூரணிக்குரிய நைவேத்தியம் அரிசி அல்ல. அவளுக்கு லட்டே பிரியமானது.

காசியில் லட்டுத் தேரில் தீபாவளியைன்று அவள் பவனி வருவாள். அன்னபூரணிக்கு தினமும் லட்டு படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

முடியாதவர்கள் அன்னபூரணி சிலையை ஒரு சிறிய தடடில் வைத்து சுற்றிலும் சுத்தமான தண்ணீர் விட வேண்டும். இதை காலையும் மாலையும் மாற்றி விட வேண்டும்.

தண்ணீர் விடுவதன் மூலம் அன்னபூரணி மனம் குளிர்ந்து மழை பெய்ய வைத்து ஊருக்கே அன்னம் கொடுப்பாள் என்பது ஐதீகம்.

அன்னபூரணியை அரிசி டப்பா அல்லது பானைக்குள் போட்டு வைத்தால், வீட்டில் அரிசி குறையாமல் இருக்கும் என்பது மூட நம்பிக்கை.

இன்னும் சிலர் அன்னபூரணி படத்தை சமையலறையில் ஒட்டி வைக்கின்றனர். கேட்டால் சில கோவில்களில் மடப்பள்ளியில் அன்னபூரணி இருக்கிறாளே என்கின்றனர்.

கோவில்கள் புனித இடங்கள், நமது வீடுகள் சிலவற்றில் அசைவம் கூட சமைக்கப்படுகிறது. சமையலறைகளில் அன்னபூரணி படத்தை வைக்கக் கூடாது. எந்த தெய்வமாக இருந்தாலும், அது பூஜை அறையிலேயே இருக்க வேண்டும்.

Tags:    

Similar News