ஆன்மிக களஞ்சியம்

அனுமனுக்கு உபதேசித்த மந்திரம்

Published On 2024-01-10 11:06 GMT   |   Update On 2024-01-10 11:06 GMT
  • அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும்.
  • கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர்.

அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும்.

ஒருமுறை அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார்.

சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது.

இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது.

விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான்.

மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயுவின் மகனே அனுமன்).

கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர்.

தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன் அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார்.

அன்று முதல் அனுமன் சர்வவியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.

வியாகரணம் என்றால் இலக்கணம்.

Tags:    

Similar News