ஆன்மிக களஞ்சியம்

எதிலும் இரட்டை சிறப்பு

Published On 2024-07-17 11:21 GMT   |   Update On 2024-07-17 11:21 GMT
  • திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலியை திருமணம் செய்வார்.
  • இத்தகைய இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனி பெருமையாக உள்ளது.

பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும். எல்லா அம்சங்களும் இங்கு இரட்டைச் சிறப்புகளாக அமைந்திருக்கிறது.

இங்குள்ள விருட்சம் அத்தி, மகிழம் & இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் & இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் என இரண்டு பேர் உள்ளனர்.

அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்டபாறையம்மன் என இரண்டு அன்னையர்கள் உள்ளனர்.

விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர் என இருவிதமாக உள்ளார்.

முருகரும், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர் என இரண்டு பேர், நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இரண்டு பேர்.

திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம்வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார்.

பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்டபாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலியை திருமணம் செய்வார்.

இத்தகைய இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனி பெருமையாக உள்ளது. 

Tags:    

Similar News