ஆன்மிக களஞ்சியம்

இம்மை மறுமை பலன்கள் அருளும் திருவாசகம்

Published On 2023-11-25 12:23 GMT   |   Update On 2023-11-25 12:23 GMT
  • மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.
  • இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.

இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமனிதன்தாள் வாழ்க!

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க!

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!

கரங்கு விவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க!

சிரங்கு விவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க!

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி!

தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி!

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!

மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி!

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை

மகிழச் சிவபுராணந்தன்னை

முந்தை வினைமுழுவதும் ஓயவுரைப்பன்யான்

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயராய்க் கணங்களாய்

வல் அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்ய விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா பெனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா

பொய்யா யின வெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற - மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழுப்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற்போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி

புறந்தோல் போர்த் தெங்கும் புழுஅமுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைனந்துன் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்

நலந்தானில்லாத சிறியேற்கு நல்கி

நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப்பாரிக்கும் சூரியனே

நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா வமுதே அளவிலாப் பெருமானே

ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே

நீராயுருகியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந்துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமைனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நாக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்

ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப என்று

ஆற்றேன் எம்ஐயா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற்பிறவி அறுப்பானே ஓவென்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிகீழ்ப்

பல்லோரு ஏத்தப்பணிந்து.

Tags:    

Similar News