ஆன்மிக களஞ்சியம்

பழ ஆகாரமே பலகாரம் ஆனது! பங்குனி உத்திர விரதம்

Published On 2024-07-31 11:45 GMT   |   Update On 2024-07-31 11:45 GMT
  • சிவாலயங்களிலும், முருகனின் குன்றுகளிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படும்.
  • பங்குனி உத்திரத்தில்தான் பார்வதி பரமேஸ்வரனின் திருக்கல்யாணம் நடந்தது.

சிவாலயங்களிலும், முருகனின் குன்றுகளிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படும்.

பங்குனி உத்திரத்தில்தான் பார்வதி பரமேஸ்வரனின் திருக்கல்யாணம் நடந்தது.

பங்குனி உத்திரத்தன்று காவடிகளும், பால்குடங்களும் எடுத்து முருகனை வழிபடுவது மரபாகும்.

அன்று உபவாசத்துடன் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு, அவனுக்குரிய ஸ்லோகங்களை பாடிப்பரவி இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

பழ ஆகாரங்கள் சாப்பிடலாம்.

விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது.

அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். பழத்தை உணவாகக் கொள்வதே பழ ஆகாரம் அதாவது பலகாரம் ஆகும்.

ஆனால் சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் "பலகாரம்' என்று தவறாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது உண்மையான விரதம் ஆகாது.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

Tags:    

Similar News