ஆன்மிக களஞ்சியம்

பிரபஞ்சத்தில் கேட்கும் ஓம் ஒலி

Published On 2024-05-21 11:13 GMT   |   Update On 2024-05-21 11:13 GMT
  • பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
  • உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும். உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

மந்திரங்கள் மிக,மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன.

ஓம் கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா, ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய, ஜெய சாய் என்றெல்லாம் சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.

இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக உச்சரிக்கலாம்.

இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.

எந்த மந்திரம் உச்சரித்தாலும் ஓம் என்று முதலில் சொல்லி தொடங்குங்கள்.

ஓம் என்று அடி வயிற்றில் இருந்து உச்சரிக்கும் போது உடலும், மனமும் வலு அடையும்.

குறிப்பாக இதயத்துக்கு நல்லது.

பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

வாழ்க வளமுடன் என்று சொல்வது கூடமிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக கருதப்படுகிறது.

திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை.

பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக புதைந்து கிடப்பதை காணலாம்.

Tags:    

Similar News