ஆன்மிக களஞ்சியம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம்

Published On 2024-01-05 12:39 GMT   |   Update On 2024-01-05 12:39 GMT
  • ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த ஆலயம் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
  • அந்த தகவல்கள் ஒவ்வொன்றும் ஈசனின் சிறப்பையும், தலப்பெருமையும் நமக்கு உணர்த்துகின்றன.

சிவபெருமான் திருவதிகையில் முப்புரத்தை எரித்ததைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் நடந்தன.

அந்த நிகழ்வுகள் தமிழ் நாட்டில் தோன்றி சிவாலயங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள ஆலயம் காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது.

ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த ஆலயம் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

அந்த தகவல்கள் ஒவ்வொன்றும் ஈசனின் சிறப்பையும், தலப்பெருமையும் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைத்து விட்டு வருகிறார்களோ... அவர்கள் வாழ்வில் ஈசன் நிகரற்ற ஒளியேற்றி ஓங்கச் செய்வார் என்பது நிச்சயமானது.

Tags:    

Similar News