ஆன்மிக களஞ்சியம்

திருவாதிரை களி

Published On 2024-02-10 10:38 GMT   |   Update On 2024-02-10 10:38 GMT
  • திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர். அதுவே ஆருத்ரா என மாறியது.
  • பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர்.

அதுவே ஆருத்ரா என மாறியது.

அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரசபதவியிலிருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகினாலும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல், தான் உண்பதில்லை என்ற கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார்.

கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது, ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாதபோதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசி மாவில், சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர்.

இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர்.

இதனால், சிவனே அடியவர் வேடம் போட்டு சேந்தனார் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்டார்.

அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர்.

களி மிக ருசியாயுள்ளது என சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.

மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல் நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.

அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும்.

அன்றிலிருந்து, ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிவிட்டது.

களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்லை.

களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும்.

அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும்.

சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுகிறது.

இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார்.

கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.

பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும்.

பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வர்.

Tags:    

Similar News