கிரிக்கெட்

ஆப்கான்.. தொடக்க வீரர்கள் மந்தமான ஆட்டம்- வங்காளதேசத்துக்கு 116 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு

Published On 2024-06-25 02:20 GMT   |   Update On 2024-06-25 02:20 GMT
  • மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 55 பந்தில் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
  • வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

செயின்ட் லூசியா:

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஆப்கானிஸ்தான் இப்ராஹிம் சத்ரான்- குர்பாஸ் களமிறங்கினர். இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பவர் பிளேயில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரி அடிக்க முயற்சிக்கவில்லை.

டெஸ்ட் போட்டி விளையாடி இப்ராஹிம் சத்ரான் 29 பந்தில் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 12 பந்தில் 10 ரன்களுடன் வெளியேறினார். தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 55 பந்தில் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 16 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 88 ரன்களே மட்டுமே எடுத்தது. இதற்கு குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் அடுத்து வரும் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட கூடிய கட்டாயத்தில் இருந்தனர். எனவே வந்த வேகத்தில் அனைவரும் பெவிலியன் திரும்பினர். கடைசியில் ரஷித்கான் 3 சிக்சர்களை பறக்கவிட்டதால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

Similar News