கிரிக்கெட் (Cricket)

இன்ஸ்டாவில் முட்டிக் கொண்ட ஹர்திக்- ரோகித்?

Published On 2024-02-08 13:17 GMT   |   Update On 2024-02-08 13:17 GMT
  • ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.
  • ரோகித்- பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும். அந்த வகையில் இந்த தொடரின் 17-வது சீசன் எப்போது நடக்கும் என்பதற்கான அதிகாரபூர்வ தேதி இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை எனபது சரியாக தெரியவில்லை.

ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ரோகித் கேப்டனாக செயல்படாதது குறித்து பேட்டியளித்தார். இதற்கு ரோகித்தின் மனைவி ரித்திகா எதிர்ப்பு தெரிவித்தது பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு கூட ஆகாத நிலையில் ரோகித் - பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான செய்தி வதந்தி எனவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்ததில்லை என்று சிலரும், ரோகித்தை பின்தொடர்வதை நிறுத்தியது ஹர்திக் தான் என்றும் சிலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News