கிரிக்கெட் (Cricket)

சேப்பாக்கம் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது

Published On 2024-09-21 04:13 GMT   |   Update On 2024-09-21 04:13 GMT
  • சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குமா? என்ற சந்தேகம்.
  • மைதானம் முழுமையாக மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டதால் ஆட்டம் 9.30 மணிக்கு தொடங்கியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை பெய்து வந்தது. இதனால் போட்டியில் சரியான (காலை 9.30 மணி) நேரத்திற்கு தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

அதேவேளையில் ஆடுகளம் மற்றும் மொத்த மைதானமும் மூடப்பட்டிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழைச்சாரல் முற்றிலுமாக நின்றது. இதனால் போட்டி சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது.

லேசான மழை பெய்து கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அதிக திரண்டு வந்து டிக்கெட் வாங்கினர்.

நேற்று முன்தினம் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.

Tags:    

Similar News