கிரிக்கெட் (Cricket)

சேப்பாக்கம் டெஸ்ட்: சுப்மன் கில், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டம்- இந்தியா 205/3

Published On 2024-09-21 06:24 GMT   |   Update On 2024-09-21 06:24 GMT
  • சுப்மன் கில் 79 பந்தில் அரைசதம் அடித்தார்.
  • ரிஷப் பண்ட் 88 பந்தில் அரைசதம் விளாசினார்.

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது. 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றை 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 33 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 79 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 88 பந்தில் அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த பின்னர் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். இந்த ரன்கள் வேகமாக வந்தன.

இருவரும் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். சுப்மன் கில் 137 பந்தில் 86 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 108 பந்தில் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இந்தியா 432 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News