கிரிக்கெட் (Cricket)

வந்தா கேப்டனாதான் வருவேன்.. பாண்ட்யா விதித்த நிபந்தனை

Published On 2023-12-16 11:10 GMT   |   Update On 2023-12-16 11:10 GMT
  • மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார்.
  • அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2024-ம் ஆண்டு நடைபெறும்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை தனக்கு கொடுத்தால்தான் குஜராத் அணியை விட்டு வருவேன் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் பாண்ட்யா நிபந்தனை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்று அவரை கேப்டனாக நியமிக்கப்போவதாக உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு ரோகித்திடம் மும்பை அணி நிர்வாகம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News