கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பில் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவார்: தினேஷ் கார்த்திக்

Published On 2024-07-27 11:48 GMT   |   Update On 2024-07-27 11:49 GMT
  • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.
  • சுப்மன் கில் கடின உழைப்பாளி, அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் போகிறது என்றார்.

புதுடெல்லி:

தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல். தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்தநாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.

இதற்கிடையே, ஆர்.சி.பி. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சுப்மன் கில் சில காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சுற்றி வருகிறார். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் ஒரு துணை கேப்டன். அவருக்கு திறமை இருப்பதாக நான் நம்புகிறேன்.

அவர் தனது பேட்டிங்கில் தொடர்ந்து பணியாற்றினால், பல ஆண்டுகளாக கேப்டனாக அவர் இன்னும் நிறைய மேம்படுத்த முடியும். கேப்டனாகவும் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு உள்ளது.

இந்த ஆண்டு அவர் குஜராத்துக்காக (டைட்டன்ஸ்) தொடங்கினார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வைப்பது கொஞ்சம் வேலை என அவருக்குத் தெரியும். அதை நோக்கி அவர் செயல்படுவார். சுப்மன் கில் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால் அவர் மிகவும் கடின உழைப்பாளி. அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்குத் தள்ளப் போகிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News