கிரிக்கெட்

பெண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கைக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு

Published On 2024-07-28 09:42 GMT   |   Update On 2024-07-28 09:42 GMT
  • 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது.
  • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தம்புல்லா:

9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.

இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே இறுதி சுற்றில் 5 முறை இந்தியாவிடம் உதை வாங்கியுள்ள இலங்கை அணி அதற்கு பழிதீர்த்து முதல்முறையாக பட்டம் வெல்வதற்கு தீவிரம் காட்டுகிறது.

எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

Tags:    

Similar News