கிரிக்கெட் (Cricket)

ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள்- மும்பை கேப்டன் ரோகித் சர்மா சாதனை

Published On 2023-04-17 07:18 GMT   |   Update On 2023-04-17 07:18 GMT
  • சென்னை அணிக்கெதிராக ஷிகர் தவான் 1029 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
  • சென்னை அணிக்கெதிராக விராட் கோலி 979 ரன்கள் எடுத்து 4-வது இடத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் 22-வது போட்டியில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணிக்கெதிராக அதிகபட்ச ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையை மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

கொல்கத்தா அணிக்கெதிராக இதுவரை 1040 ரன்களை ரோகித் சர்மா குவித்துள்ளார். அதற்கடுத்த இடங்களில் சென்னை அணிக்கெதிராக ஷிகர் தவாணும் (1029 ரன்கள்), கொல்கத்தா அணிக்கெதிராக டேவிட் வார்னரும் (1018 ரன்கள்), சென்னை அணிக்கெதிராக விராட் கோலியும் (979 ரன்கள்) உள்ளனர்.

Tags:    

Similar News