கிரிக்கெட் (Cricket)

தொடர்ந்து 30 முறை...!!! ரோகித் சர்மா சாதனை

Published On 2023-07-24 04:00 GMT   |   Update On 2023-07-24 04:00 GMT
  • ஜெயவர்தனே 29 முறை தொடர்ச்சியாக இரட்டை இலக்க ரன்னை கடந்திருந்தார்
  • ரோகித் சர்மா கடந்த 2021-ல் இருந்து ஒற்றையிலக்க ரன்னில் அவுட்டாகவில்லை

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

2-வது இன்னிங்சில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 80 ரன்களும், 2-வது இன்னிங்சில் 57 ரன்களும் சேர்த்தார்.

இதன்மூலம் தொடர்ச்சியாக 30 இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து இரட்டை இலக்க ரன்களுக்கு கீழ் அடித்தது கிடையாது.

இதற்கு முன் இலங்கை வீரர் ஜெயவர்தனே 2001-02-ல் 29 இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்கள் அடித்திருந்தார்.

1951-53-ல் லென் ஹட்டன் 25 முறையும், 1961-65-ல் ரோஹன் ரஹ்காய் 25 முறையும, ஜெயவர்தனே 2002-2004-ல் 24 முறையும், 2012-14-ல் டி வில்லியர்ஸ் 24 முறையும் தொடர்ச்சியாக இரட்டை இலக்க ரன்களை சேர்த்திருந்தனர்.

Tags:    

Similar News