கிரிக்கெட் (Cricket)

ட்ரெண்டாகும் RIP Mumbai Indians.. 4 லட்சம் பாலோயர்ஸ்களை இழந்த சோகம்

Published On 2023-12-17 13:38 GMT   |   Update On 2023-12-17 13:38 GMT
  • ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமானது துபாயில் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது.
  • ரோகித் சர்மாவுக்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவளித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

மும்பை:

இந்தியாவில் 17-வது ஐபிஎல் தொடர் வரும் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமானது துபாயில் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து மும்பை அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும் ரோகித் சர்மாவுக்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவளித்து வருவதாகவும் பதிவிட்டு வந்தனர். இது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் நேற்று வரை 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. 

இந்நிலையில் இன்று வரை 4 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துள்ளது. மேலும் RIP Mumbai Indians என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.



Tags:    

Similar News