கிரிக்கெட் (Cricket)

கடந்த 10 ஆண்டில் ரோகித் சர்மாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: சூர்யகுமார்

Published On 2024-07-26 09:05 GMT   |   Update On 2024-07-26 09:05 GMT
  • இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது.

புதுடெல்லி:

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்டு தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது. இதனால் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

இந்நிலையில், ரோகித் சர்மா ஒரு தலைவராக இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேப்டன்சி பற்றி, குறிப்பாக ரோகித் சர்மாவிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News