உலகக் கோப்பை: சேசிங் மற்றும் சிக்சரில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா
- இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது.
- இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும்.
உலகக் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாகிப் ஆல் ஹசன் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார். அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 754* 2. ஷாகிப் அல் ஹசன் : 743 3. அர்ஜுனா ரணதுங்கா: 727 ஆகியோர் உள்ளனர்.
மேலும் இப்போட்டியில் 2 சிக்சர் அடித்ததன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர் அடித்த கேப்டன் என்ற இயன் மோர்கன் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் 1. ரோகித் சர்மா : 61 (2023இல்) 2. இயன் மோர்கன் : 60 (2019இல்) 3. ஏபி டீ வில்லியர்ஸ் : 59 (2015இல்)