null
ஐந்து தலை நாகம் வெளிப்பட்ட நாகராஜர் கோவில்
- இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு.
- இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
நாகராஜா மற்றும் நாகரம்மன் என்னும் நாக தெய்வத்தின் பெயரையே தனதாக்கின் கொண்ட திருத்தலம் "நாகர்கோவில்" ஆகும்.
இத்தலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராக விளங்குகிறது.
இந்த நாக தெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செய்வதன் மூலம் (உப்பு, மிளகு சமர்ப்பித்தல்) தோல் வியாதிகள் நீங்குவதோடு, உடல் உறுப்புகளும் நலம் பெறும் என்று நம்பிக்கை காலங்காலமாக இப்பகுதி மக்களிடையே பரவிக் கிடக்கிறது.
நாகர்கோவிலின் மத்தியில் அமைந்துள்ள இந்த நாகராஜர் ஆலயத்தில் ஐந்து தலை நாகராஜர் மூலவராகக் காட்சி தருகிறார்.
மூலவரைச் சுற்றி எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படுகிறது.
அர்ச்சகர் அந்த நீரில் நின்று கொண்டுதான் வழிபாடுகள் செய்கிறார்.
இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
இதிலிருந்து எடுக்கப்படும் மண்ணே பக்தர்களுக்குப் பிரசாதமாகத்தரப்படுகிறது.
இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு.
குடும்ப குலதெய்வம் தெரியாதவர்களும் இவரை வணங்குகின்றனர்.
இத்தலத்தில் ஆயில்ய நட்சத்திர நாட்கள் மற்றும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு கேரளா மற்றும் தமிழ்நாடு மக்கள் வந்து வழிபாடுகள் செய்கின்றனர்.
ஒன்பது ஆயில்ய நட்சத்திர நாட்களில் விரதமிருந்து நாகரை வழிபட பிள்ளைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.
கோவில் முகப்பில் காணப்படும் நாகர் சிலைகளால் சூழப்பட்ட இரு அரச மரங்களை மகப்பேறு வேண்டுவோர் சுற்றி வலம் வந்து வழிபடுகின்றனர்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் நகரம் திருவிழாக் கோலத்துடன் காட்சியளிக்கும்.
இந்த ஆலயத்தை நாகங்கள் காவல் புரிவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
இத்தலத்தில் உள்ள ஐந்து தலை நாகம் போன்று காட்சியளிக்கும் நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவ அடையாளமாகவே எண்ணுகின்றனர்.
ஆலயத்தில் நிறைய நாகலிங்க மரங்கள் உள்ளன. இந்தப் பூவைக் கொண்டே நாகராஜருக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
தற்போது மூலவர் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் புல்லும் புதரும் மண்டிக்கிடந்ததாம்.
அங்கே புல்லறுத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் அரிவாள்பட்டு, புதருக்குள்ளிருந்த ஐந்து தலை நாகத்தின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டதாம்! அதைக்கண்டு அஞ்சிய அந்தப் பெண் ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த இடத்தில் சிறு கோவில் கட்டி வணங்க ஆரம்பித்தனர்.
அவ்வாறு உருவானதே இந்தக் கோவில் என்கிறார்கள்.