ஆன்மிக களஞ்சியம்

அம்பாளை வணங்குவதன் பலன்

Published On 2024-08-01 11:06 GMT   |   Update On 2024-08-01 11:06 GMT
  • நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,
  • அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

தேவியரின் வாகனம்

இந்திராணி - யானை

வைஷ்ணவி - கருடன்

மகேஸ்வரி - ரிஷபம்

கவுமாரி - மயில்

வராகி - எருமை

அபிராமி - அன்னம்

நரசிம்மி - சிங்கம்

சாமுண்டி - பூதம்

அம்பாளை வணங்குவதன் பலன்

அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்

விலகும், போரில் வெற்றி கிடைக்கும்,

மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

Tags:    

Similar News