லட்சுமி அருள் பாலிக்கும் தலங்கள்-ஓடைக்குப்பம் அஷ்ட லட்சுமி ஆலயம்
- இத்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வழங்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள்.
- கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.
சென்னையில் காமக் கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் அலைகடல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக்கோவில், திருவான்மியூருக்கு அருகிலுள்ள ஓடைக் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வழங்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள்.
கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.
இவர்களைத் தரிசித்து விட்டு வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம்.
மீண்டும் மகாலட்சுமி சந்நிதிக்குள் சென்று இடது கைப்பிடிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்துக்குச் செல்லலாம்.
இந்தத் தளத்தில் கிழக்கு நோக்கி கஜலட்சுமி, தெற்கு நோக்கி சந்தான லட்சுமி, மேற்கு நோக்கி விஜய லட்சுமி, வடக்கு நோக்கி வித்யா லட்சுமி காட்சி தருகிறார்கள்.
அங்கேயிருந்து மூன்றாவது தளத்திற்குச் செல்லலாம். அங்கே கிழக்கே பார்த்தபடி தனலட்சுமியைத் தரிசிக்கலாம்.
ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தளங்கள் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
மற்றொரு விசேஷம் இக்கோவிலில் குருவாயூரப்பனுக்கும், ஆஞ்சநேயருக்கும், கணபதிக்கும் தனித் தனியே சந்நதிகள் அமைந்துள்ளன.