ஆன்மிக களஞ்சியம்

லட்சுமி அருள் பாலிக்கும் தலங்கள்-மாயவரம் தலைச்சங்க நாச்சியார் கோவில்

Published On 2024-10-09 12:03 GMT   |   Update On 2024-10-09 12:03 GMT
  • கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார் கோவில் என்னும் தலம் உள்ளது.
  • அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார் கோவில் என்னும் தலம் உள்ளது.

அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.

துறையூர்

துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது.

தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம்.

பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும்.

இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.

தலச்சங்காடு (மாயவரம்)

மாயவரம் தரங்கம்பாடி வழிதடத்தில் உள்ள தலைச்சங்காடு என்ற திருத்தலத்தில் தாயார் தலைச்சங்க நாச்சியார் செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் நின்ற திருக் கோலத்துடன் காட்சி தருகிறாள்.

Similar News