ஆன்மிக களஞ்சியம்

லட்சுமி அருள் பாலிக்கும் தலங்கள்-புன்னைப்பிராட்டியார்

Published On 2024-10-09 11:31 GMT   |   Update On 2024-10-09 11:31 GMT
  • இத்த லத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது.
  • இக்கோவிலின் தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

திருவலம்:-

சென்னையில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம்.

இத்த லத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது.

இங்கு அஷ்ட லட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

மதுராந்தகம்:-

சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார்' அருள்பாலித்து வருகிறாள்.

மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது.

இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி சவுந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.

திருவாரூர்:-

திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்ற ஒரு லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது.

இக்கோவிலின் தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப்பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.

Similar News