ஆன்மிக களஞ்சியம்

லட்சுமி அருள் பாலிக்கும் தலங்கள்-ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோவில்

Published On 2024-10-09 11:07 GMT   |   Update On 2024-10-09 11:07 GMT
  • கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோவில் ஒன்றுள்ளது.
  • இதில் பலகாலமாக அஷ்ட லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள்.

பெங்களூர்:-

கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோவில் ஒன்றுள்ளது.

இதில் பலகாலமாக அஷ்ட லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள்.

இப்போது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன.

இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும்.

செஞ்சந்தன மரத்தில் மகாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

Similar News