ஆன்மிக களஞ்சியம்

மிகப்பழமையான ருத்ராங்கோவில் தலம்

Published On 2024-08-27 12:13 GMT   |   Update On 2024-08-27 12:13 GMT
  • உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.
  • கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

சங்கு தீர்த்தம் பெரிய குளம்.

நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் 'ருத்ரகோடி' என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது.

குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோவில் விமானம் தெரிகின்றது.

மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன்-ருத்ரகோடீஸ்வரர், இறைவி-அபிராமசுந்தரி,

இவ்விடத்தைத் தற்போது மக்கள் 'ருத்ராங்கோவில்' என்றழைக்கின்றனர்.

தாழக்கோவில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது.

உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.

கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுவோம். வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது.

இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது.

இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன.

இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை.

Tags:    

Similar News