ஆன்மிக களஞ்சியம்

சனி பகவான் வந்து வழிபாடு செய்த பைரவர்

Published On 2024-09-01 12:00 GMT   |   Update On 2024-09-01 12:01 GMT
  • இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.
  • ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

திருவான்மியூர்:

சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

இலுப்பைக்குடி:

இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.

இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

அந்தியூர்:

ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோவிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார்.

சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

திருவியலூர் (திருவிசநல்லூர்):

கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது.

இத்திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News