ஆன்மிக களஞ்சியம்

சோழ மன்னர்கள் வணங்கிய ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோவில்

Published On 2024-08-02 11:38 GMT   |   Update On 2024-08-02 11:38 GMT
  • மிகப்பெருமையும், புகழும் கொண்ட மற்றொரு திருக்கோவில் இது.
  • ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.

மிகப்பெருமையும், புகழும் கொண்ட மற்றொரு திருக்கோவில் இது.

ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.

தஞ்சை, பழையாறைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தைதான் பொற்காசுகளை அடிக்கும் நிலையமாக வைத்திருந்தார்கள்.

அதனால் இந்த சுவாமிக்கு கம்பட்ட விஸ்வநாத ஸ்வாமி என்று முதலில் பெயர் ஏற்பட்டது.

உதயகிரி என்னுமிடத்தில் குடிகொண்டிருந்த மாதவர் என்பவர் சிவபெருமானை தரிசனம் செய்யும் பொருட்டு, தன் புதல்வன் தூம கேதுவுடன் இங்கு வந்தார்.

அப்போது இந்த இடம் மாலதி வனமாக இருந்தது.

இருப்பினும் அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் தூமகேது மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை வணங்கி மாலதி வனத்தில் குடியேறினார்.

Tags:    

Similar News