ஆன்மிக களஞ்சியம்

விஸ்வரூப பிரத்தியங்கரா தேவி சிலை

Published On 2024-08-14 10:13 GMT   |   Update On 2024-08-14 10:13 GMT
  • நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.
  • பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.

இந்த பிரத்தியங்கிரா தேவியின் விஸ்வரூப சிலை புதுவையில் இருக்கிறது. 72 அடி உயரம்.

உலகிலேயே மிகப்பெரிய அம்மன் சிலை இதுதான்.

குகை போன்ற பெரிய வாய், ரத்தம் சொட்டும் நீண்ட நாக்குகள், விரிந்த கூந்தல், காலில் மிதிபடும் மண்டை ஓடு, கனல் கக்கும் கண்கள், கைகளில் திரிசூலம், நாகபாசம், கழுத்தில் ராகு, கபாலத்தை மாலையாக அணிந்து இருக்கிறார்.

நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.

பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.

இதனால் 'அபராஜிதா' என்று பெயர் பெற்றாள். நடுநிசி பூஜைதான் பிரத்தியங்கிரா தேவிக்கு உகந்தது.

மகாபைரவர் நாள்தோறும் நள்ளிரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

Tags:    

Similar News